பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

91. கடற்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள், மணலில் விளையாட அனுமதியுங்கள்.

92. பேருந்து மற்றும் ரயிலில் ஒரு முறையாவது அழைத்துச் செல்லுங்கள்.

93. சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காட்டுங்கள்.

94. செய்தித் தாள்களில் வரும் குழந்தைகளுக்குப் பிடித்தமான செய்திகளை விவாதியுங்கள். விலங்கியல் பூங்காவில் பிறந்த புதிய யானைக் குட்டி, வானிலை முன்னறிவிப்பு முதலியன.

95. குழந்தையின் தலை முடி சுத்தமாக உள்ளதா? முடி கண்ணை மறைக்கிறதா? என அடிக்கடி பாருங்கள்.

97. காரை சுத்தம் செய்யும்போது குழந்தையை உதவிக்கு அழையுங்கள். காரின் பாகங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே சுத்தம் செய்யுங்கள்.

98. மேற்கண்ட குறிப்பின் நோக்கம்: ஒவ்வொரு செயலிலும் இறுதியில் என்ன கிடைக்கும் என்ற சிந்தனையைவிட, ஒரு செயலில் படிப் படியாக செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு உள்ளது என்கிற சிந்தனையை உருவாக்குவதாகும்.

99. வலது, இடது மற்றும் 4 திசைகளையும் கற்றுக் கொடுங்கள். திசைகளை பற்றிய உணர்வினை உருவாக்குங்கள்.

100. குடிநீரை உயரம் குறைந்த இடத்தில் வையுங்கள். தண்ணீர் குடிப்பதற்கு குழந்தை உங்களைத் தேட வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது.

101. குழந்தைகள் உங்களை சார்ந்திராமல் தங்கள் தேவைகளை தாங்களே முடித்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு தயார் செய்யுங்கள்.


In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

76. குழந்தையின் பொம்மைகளை ஆராயுங்கள்
அ. பொம்மையிலிருந்து எதாவது கற்றுக்கொள்ள இயலுமா
ஆ. பொமையை குழந்தை பயன்படுத்துகிறாளா
இ. பொம்மையின் அனைத்து பாகங்களும் சரியாக உள்ளதா
ஈ. பொம்மை குழந்தைக்குப் பாதுகாப்பான நிலையில் உள்ளதா (கடையில் புதிய பொம்மை வாங்கும்போதும் இப்படி ஆராயலாமே)

77. குழந்தையால் செய்யக்கூடிய வேலையை நீங்கள் செய்து கொடுக்காதீர்கள்.

78. உடல் பயன்பாட்டை ஊக்குவியுங்கள். விளையாட அனுமதியுங்கள்.

79. அமைதியாக பேசாமல் அமர்ந்திருப்பதைப் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நீங்களும் அவர்களுடன் தியானம் செய்யுங்கள்.

80. குழந்தைகளுக்கு அவர்களது பிறந்த தேதி, இரத்த வகை, தொலைபேசி எண் போன்ற முக்கிய குறிப்புகளை சொல்லிக்கொடுங்கள்.

81. பள்ளியிலிருந்து அனுப்பப்படும் அனைத்து குறிப்புகளையும் படித்துப் பின்பற்றவும்.

82. குழந்தையை பாதித்துள்ள விசயம் பற்றி அவர்களது ஆசிரியருக்கு தெரிவியுங்கள். உதாரணத்திற்கு குழந்தை தூங்காமல் இருந்தது, உடல் நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்தது, வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தது, பெற்றோர்கள் வெளியூருக்கு சென்றிருப்பது முதலியன. ஏனெனில் பள்ளியில் குழந்தையின் நடத்தையில் உள்ள மாற்றத்தை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள.

83. மண்ணில் குழி பறிக்கச் சொல்லுங்கள். அசுத்தமாவதைப் பற்றி சிறிது கூட தயக்கம் கொள்ளக்கூடாது (அந்த சிறிது நேரத்திற்கு மட்டும்).

84. நல்ல செயலுக்குப் பரிசுகள் வழங்காதீர்கள். அவர்களது அனுபவமே அல்லது மன நிறைவே அவர்களுக்கு பரிசாக அமைய வேண்டும்.

85. குழந்தைகளிடன் மற்றவர்கள் பேசும்போது நீங்கள் தலையிடாதீர்கள். குழந்தைகளால் பதில் சொல்ல முடியாத நேரங்களில் மட்டும் நீங்கள் தலையிட்டால் போதும்.

86. நீங்கள் தவறு செய்கிறபோது குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.

87. குழந்தைகளுக்குக் கற்றுத் தர நினைக்கும்போது, அவர்களால் எதை புரிந்துகொள்ள முடியுமோ அதை மட்டும் கற்றுத் தாருங்கள்.

88. குடும்பத்தில் அனைவரும் சேர்ந்த்து பந்து விளையாடலாம்.

89. குழந்தைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். மேலும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

90. எப்பொழுதும் உண்மையே பேசுங்கள். (ரொம்பக் கஷ்டம்)

In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

61. மாத நாட்காட்டி (காலண்டர்) ஓன்றை குழந்தைக்கு வழங்குங்கள். அதை பயன்படுத்துவது பற்றி அடிக்கடி விவாதியுங்கள்.

62. செல்லப் பிராணி ஒன்றை வாங்கிக்கொடுத்து, அதை வளர்த்தும் பொறுப்பை குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

63. உடந்த பொருட்கள் எல்லாவற்றிற்கும் புது பொருள் வாங்கிக் கொடுக்காதீர்கள். பணத்தின் பெருமையை உணரச் செய்யுங்கள்.

64. இரவில் நடைக்கு (walking) அழைத்துச் செல்லுங்கள். பலவிதமான் ஒலிகளையும், நிலவையும் ரசிக்கச் சொல்லுங்கள். காற்றின் வாசனையை நுகரச் செய்யுங்கள்.

65. மழை பெய்யும்போது கோட் மற்றும் பூட்ஸ் அணிந்து மழையில் விளையாட அனுமதியுங்கல்.

66. செய்யும் வேலைகளில் குழந்தைகளின் முழு மனதும் மற்றும் உடலும் ஈடுபடும் வகையில் சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுங்கள்.

67. எல்லாவிதமான் இசைகளையும் கேட்கும் வாய்ப்பை வழங்குங்கள்.

68. பலவிதமான கலைகளைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.

69. பலவிதமான தொழில்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.

70. பொருட்கட்சி மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் முதலியனவற்றிற்கு அழைத்துச் செல்லுங்கள்.

71. சப்தங்களைப் பற்றி விளக்குங்கள். உதாரணத்திற்கு T என முடியும் வார்த்தை எது என்று கேட்பது.

72. குழந்தைகளின் பொருட்களை வைப்பதற்குத் தேவையான் பெட்டிகள் மற்றும் உயரம் குறைந்த அலமாரி ஆகியவற்றைக் கொடுங்கள்.

73. அழகை ரசிக்கக் கற்றுக் கொடுங்கள். மலர்கள், மரக்கட்டைகள், கற்கள் மற்றும் இயற்கையான பொருட்களை கையில் வைத்துக்கொண்டு வர்ணனை செய்யுங்கள்.

74. குழந்தைகளுக்குப் பிடித்தமான பொருட்களை சேகரிக்க் உதவுங்கள்.

75. படம் வரைவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்குங்கள். இறுதியில் சுத்தம் செய்வதற்குத் தேவையான பொருட்களையும் வழங்குங்கள்.

In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

"எங்க ஆபிஸ் ப்யூனோட பையனைப்
பாரு, டாகடருக்கு படிக்கறாப்ல!
ஆனா நீ ஒன்னுத்துக்கும் லாயக்கில்லை.
ராஜா சர் முத்தையா செட்டியார் வீட்டுல கூட
இப்படி வசதி இருக்காது! தெரிஞ்சுக்கோ!
உனக்கெல்லாம் நான் செஞ்சு கொடுத்திருக்கற
வசதிகளை நினைச்சுப்பாரு! வெளியில போனா
என் அருமை தெரியும்” என்று சொன்ன
அப்பாவை வெறுப்புடன் பார்த்தேன்.


காரணம் அப்பா ஆபீஸ் ப்யூன் செல்லையா
படிப்பு வராத தனது பெரிய மகனுக்காக
ஆபீஸுக்கு எதிரிலேயே டீக்கடை
வைத்துக்கொண்டு, சின்ன மகனை
டாக்டருக்கு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.



பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி
எழுந்து விட்டேன்,” பதில் பேசுவதா
நினைக்காதீங்க அப்பா! உங்க கிட்ட
ரொம்ப நாளாவே பேசணும்னு நினைச்சு
அடக்கி வெச்சு கிட்டு இருந்தேன். இந்த
டயலாக்கை 1 லட்சம் தடவ சொல்லியிருப்பீங்க.
அப்படி என்னப்பா ஊருல இல்லாத வசதியை
செஞ்சு கொடுத்துட்டீங்க?” என்றேன்.



அப்பா ஒரு அரசு அதிகாரி. ஆனால்
சம்பாதிக்கும் காசை சேமிக்காமல்
செலவழிக்கும் மிகப் பெரிய செ
செலவாளி.
15 தேதிக்கு மேல் குடும்பம் நடத்த
அம்மா படும் பாட்டை நானறிவேன்.


அப்பா கோபம் கொண்டு பெரிதாக
கத்தினார். "உங்களுக்காகத்தான்
ஓடா தேயுறேன்! என்னிய பாத்து
என்ன செஞ்சீங்கன்னு நாக்குல நரம்பில்லாம
கேக்குறியா?” என்று அடிக்க கை ஓங்கி வந்தார்.



அம்மா வந்து அடியை தாங்கிக்கொண்டாள்.
அப்பா கொஞ்சம் அடங்கினார். 1 சொம்பு
தண்ணியை அவர் கையில் வைத்தேன்.
வாங்கிக் குடித்தார்.


“நான் சொல்வதில் கோபம் தான் வரும்
அப்பா! ஆனா உங்க ஆபிஸ் ப்யூன் தன்
மகனை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்தார்.
நான் தமிழ் மீடியத்தில் தான் படித்தேன்.


+2 முடித்ததும் சயன்ஸ் குரூப் எடுத்து
படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
என் மார்க்குக்கு ஈஸியா சீட்டு கிடைத்தும்
டாக்டருக்கு படிக்க வைக்க முடியாதுன்னு
சொல்லி vocational group படிச்சிட்டு
இன்னைக்கு பி.காம் படிச்சுகிட்டு இருக்கேன்.



உங்க ஆபிஸ் ப்யூன் பையன் இப்ப
டாக்டருக்கு படிச்சு கிட்டு இருக்காப்ல.
அவரை விட பலமடங்கு பெரிய போஸ்ட்ல
இருக்குற உங்க பையன் நான் திறமை இருந்தும்
உங்களால இப்படி இருக்கேன்.





வருசத்துக்கு 2 ட்ரெஸ் எடுத்து கொடுக்கறீங்க.
சாப்பாடு 3 வேளையும் சாப்பிடறோம். ஆனா
அதுல பல நாள் வெஞ்சனம் கூட இல்லாம
வெறும் சோறு மட்டும் தான் இருக்கும்.
செய்யுற கறி உங்களுக்கு மட்டும் தான்
அம்மா கொடுப்பாங்க. உங்களை விட
வீட்டோட நிலமை எனக்கு நல்லாவே
தெரியும். அதை விட உங்களைபத்தி
ரொம்ப நல்லாவே தெரியும்.


ப்யூன் செல்லையா தன் பசங்களுக்கு
ஒவ்வொரு பண்டிகைக்கும் ட்ரெஸ்
எடுத்து தர்றாரு. வருசத்துக்கு ஒருதடவை
குடும்பத்துல எல்லோரும் சேர்ந்து
சுற்றுலா போயிட்டு வர்றாங்க.


உங்களுக்கு எல்.டீ.ஸின்னு ஒன்னு
இருக்கு. ஆனா நாம ஒரு நாளாவது
ஏதாவது ஊருக்கு போயிருக்கோம்னு
சொல்லுங்க பாப்போம்.


உங்க ஆபீஸ் ப்யூன் கூட ஜம்பமா
டீ.வீ.ஏஸ் 50ல் ஆபிஸுக்கு வர்றப்போ
நீங்க நடராஜா சர்வீஸுதான்.




ஆபிசில் ப்யூன் கூட வீட்டுக்கு
போயிடுவாரு. ஆனா நீங்க மட்டும்
அங்கயே உட்கார்ந்து இருப்பீங்க.
அதுக்கப்புறம் உங்க ஃப்ரண்ட்ஸ்
கூட வெளியே போய் சீட்டாடறது,
தண்ணின்னு முடிச்சு நீங்க வீட்டுக்கு
வரும்போது அர்த்தஜாமம்தான்.


நேரத்துக்கு வீட்டுக்கு வந்தோம், பையனோட
கொஞ்ச நேரம் பேசுவோம், எங்கயாவது
வெளிய தெருவுல கூட்டிகிட்டு போவோம்னு
உண்டா?


ஊதாரித்தனமா செலவு செய்துட்டு
சொந்த பையனோட வாழ்க்கையை
நசுக்கிட்டீங்க.


வள்ளுவர் உங்களை மாதிரி அப்பாக்களுக்காகத்தான்
ஒரு திருக்குறள் சொல்லியிருக்கிறார்.

தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
- என்பதுதான்
அந்தக் திருக்குறள்.

இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

ஒரு அப்பா தன் மகனுக்கு செய்யும் உதவி
என்ன தெரியுமா? படிச்சவங்க இருக்குற
இடத்தில் எல்லாம் தெரிஞ்ச அறிஞனா
தன் மகனை ஆக்கறதுதான். தெரிஞ்சுக்கோங்க
என்று சொன்னேன்.

அப்பா வெகுநேரத்திற்கு தலையை தொங்க
போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.


**************************************

”இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை.
மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்.
மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

ஈரடியில் என்றும் எப்போதும் நிலைத்திருக்கும்
கருத்துக்களை சொன்னவர் திருவள்ளுவர்.

அப்பெரியவர் சொன்ன திருக்குறள்களின்
கருத்துக்களை கதையாக வடிக்க
நானழைப்பது.


1.ஜீவ்ஸ்
2.கயல்விழி முத்துலட்சுமி
3. அப்துல்லா
விதிமுறைகள்:

கதை குறளின் பொருளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
எந்த அதிகாரத்திலிருந்தும் இருக்கலாம்.
3 பேரை எழுத அழைக்க வேண்டும்.

என்ன எல்லோரும் நலமா? நடுவில் கொஞ்சம் பிசியா
இருந்தேன். அதான் இந்தப் பக்கம் வரலை. மன்னிக்கணும்.
இதோ வந்துட்டேன். இனி பதிவுகள் தொடரும்.

பிள்ளைகளை எங்காயவது கூட்டிகிட்டு போறதுன்னா
பெரிய பிரச்சனை. அவங்க அங்க போய் என்ன
செய்வாங்கன்னு யோசிச்சு பாத்தாலே கண்ணு கட்டும்.
அதனாலேயே முக்கால்வாசி பேர் பிள்ளைகளை வீட்டில்
விட்டுடுடு போவது, யாரிடமாவது விடுவது மொத்தத்தில்
பிள்ளைகளை அழைச்சுகிட்டே போக மாட்டாங்க.

இப்படி இருந்தா தப்பில்லையா? பிளைங்களுக்கும்
எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரியாமலேயே
போயிடும்ல.

ஹோட்டலுக்கு போனால் அங்கே குழந்தைகள்
ஓடி பிடித்து விளையாடுவதை பார்க்க கோவம்
தான் வரும் எனக்கு. கிளிங் என்ற சப்தத்துடன்
சர்வரின் கையில் இருந்த கிளாஸ் கீழே விழுந்து
உடையும். பல சமையம் கையில் கொண்டுவரும்
உணவைத் தட்டி விட்டுவிடுவார்கள் குழந்தைகள்.

ஹோட்டலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்று அறிவுறுத்தப்படாததே இதன் காரணம்.

நண்பர்கள் அல்லது உறவினரின் வீட்டிற்கு
சென்றால் இந்த பிள்ளைகளை ஏன் அழைத்து
வந்தார்கள் என்று நினைக்கும் அளவிற்கு
பிள்ளைகள் நடந்து கொள்கிறார்கள்.

நம் வீட்டில் நாம் எப்படி வேண்டுமானாலும்
நடந்து கொள்ளலாம். ஆனால் அடுத்த வீட்டிற்கு
செல்லும்போது அவர்களுக்கு தகுந்தாற்போல்
நடந்து கொள்ள வேண்டும். அதாவது
சூழ்நிலைக்கு தகுந்த வாறு.

எப்படி செய்வது?

என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கறேன். இது
உங்களுக்கு உதவுமான்னு பாருங்க.

எங்கே போகப்போகிறோமோ அதைப் பத்தி
முதலில் பிள்ளைகளிடம் சொல்லிவிடுவேன்.
(setting the mood). போகும் இடம்,
அங்கு யார் இருப்பார்கள்? எப்படி நடந்து
கொள்ள வேண்டும்? எல்லாம் முன்பே
சொல்லி அழைத்து செல்வேன்.

உதாரணமா: கோவிலுக்கு போகிறோம் என்றால்
அதை சொல்லிவிடுவேன். போகும் இடத்திற்கு
தகுந்த உடை அவர்களே தெரிவு செய்து விடுவார்கள்
(கோவில்னா பாவாடை சட்டைதான், நோ பாண்ட்ஸ்னு
அம்ருதாவுக்கு தெரியும்)

அடுத்தது,”கண்ணா! கோயிலுக்கு போறோம்.
கோவில் ஓடி விளையாடும் இடம் இல்லை.
ஆண்டவனை பிரார்த்திக்கும் இடம். ஆக
அமைதியா உங்களுக்குத் தெரிந்த பிரார்த்தனைகளை
சொல்லிக்கொண்டு வரவேண்டும். அனைவரும்
அமைதியை நாடி வரும் இடம் தானே கோவில்னு சொல்லி
கூட்டிகிட்டு போவேன். (சின்ன பிள்ளைகளாக
இருந்தால் ஒவ்வொரு முறையும் சொல்வது முக்கியம்)

இப்பொழுதெல்லாம் கோவிலுக்கு சென்றால் ஆஷிஷ், அம்ருதா
இருவரும் அந்தந்த தெய்வங்களுக்கு உண்டான மந்திரங்களைச்
சொல்லி பிரார்த்தி வருவதை பார்த்து திகைக்காதவர்களே
கிடையாது.


பார்கிற்கு சென்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தால்
நன்றாக இருக்காது. அது மாதிரி கோவிலில் ஆர்ப்பரிக்கும்
சத்தத்துடன் பிள்ளைகள் விளையாடுவது அவர்களின்
முறையற்ற வளர்ப்பையே காட்டும்.

சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அழைத்துச் சென்றால்
பார்ப்பதை எல்லாம் பிள்ளை கேட்கிறான் என்பதற்காக
அழைத்துச் செல்லாமல் விட்டு விடுவதால்
அவனுக்கு அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்பது தெரியாமலேயே போய்விடக்கூடும்.
பதிலாக குழந்தையிடமும் ட்ராலி ஒன்றைக் கொடுத்து
”நான் கொடுப்பதை ட்ராலியில் போட்டுக்கொண்டு
தள்ளிக்கிட்டு வரையா?” என்று பொறுப்பை
கொடுத்து பாருங்கள்..

இதுவும் பிள்ளை வளர்ப்புத்தானே! தெரியாமல்
இருப்பதனால்தான் பிள்ளைகள் தவறு செய்கிறார்கள்.

சொல்லிக்கொடுத்தால் போதும். சூப்பர் பிள்ளைகள்
ஆகிவிடுவார்கள்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்