பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

வீட்டில் இன்னொரு உயிரின் வரவு அதே குதூகலத்தையும் சந்தோஷத்தையும் தரும். ஆனால் மூத்த குழந்தை??!!
அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கு? அதை எவ்வாறு தயார் செய்ய வேண்டும், இதுஎல்லாம் இன்னொரு குழந்தை பெற வேண்டும் என முடிவு செய்த உடனே பெற்றோர் இருவரும் முடிவெடுத்து, கலந்தோலாசித்து
செய்ய வேண்டிய மிக முக்கியமான விசயம்.

சகோதரி ஜெயந்தி தனது வலைப்பூவில் இதைப்பற்றி மிக அருமையாக எழுதியுள்ளார். அவரின் அனுமதியோடு அந்த பதிவை நம் வலைப்பூவில் அனைவரின் நலன் கருதியும் வெளியிடுவதில் மகிழ்ச்சி. தங்களது
பதிவை இங்கே பதிய ஒத்துக்கொண்டதற்கு நன்றி ஜெயந்தி.

ஜெயந்தியின் பதிவு:
***************************************************

முதல் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும்போது இரண்டாவது குழந்தை பிறக்கும். சின்னக்குழந்தை என்பதால் அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு 24 மணி நேரமும் இருக்கும். அப்பா வீட்டிற்குள் நுழையும்போதே சின்னக்குழந்தையைப் பற்றி விசாரித்தபடியே வருவார். உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் புதிதாக பிறந்துள்ள குழந்தையை பார்த்து கொஞ்சிவிட்டுச் செல்வார்கள். பெரிய குழந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கும்.

நமக்கு அது பெரிய குழந்தை. அதற்கு அவ்வளவு கவனிப்புத் தேவையில்லை. சின்னக்குழந்தைக்குத்தானே கவனிப்பு அவசியம். உண்மைதான்.
மூன்று நான்கு வருடமாக பெரிய குழந்தைதான் நமது முழு போகஸ் ஆக இருந்திருக்கும். அப்பா அந்தக்குழந்தையைத்தான் அழைத்துக்கொண்டே உள்ளே நுழைவார். அம்மா எப்போதும் அந்தக் குழந்தையைத்தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இன்னொரு குழந்தை உள்ளே நுழைந்து அத்தனையையும் தட்டிப்பறித்துகொள்வதை அந்த பெரிய குழந்தையின் இடத்திலிருந்து யாராவது பார்த்திருக்கிறோமா?

அலுவலகத்தில் நமக்கு 6 மாதம் பின்னால் வந்த ஒருவருக்கு பிரமோஷன் தந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் பெரியவர்கள். நம்மாலேயே தாங்க முடியவில்லை என்றால் குழந்தைக்கு எப்படி இருக்கும். சிறு வயதில் உண்டாகும் இந்த ஏக்கம் எப்போதுமே தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பெரிய குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போது சின்னக்குழந்தை 3ம் வகுப்பு படிக்கும். அப்போதும் அதுதான் சின்னக்குழந்தை.

இரண்டு பேருக்கும் ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும்போது விலையிலோ தரத்திலோ சின்ன வித்தியாசம்தான் இருக்கும். நாம் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டோம். எதேச்சையாகத்தான் நடந்திருக்கும். பெரிய குழந்தையின் மனதில் நாம் இரண்டாம்பட்சம் என்ற உணர்வு வரும். இரண்டு பேருக்குள்ளும் பாசம் எல்லாம் இருக்கும். ஆனால் இந்த உணர்வை மட்டும் நம்மால் கடைசி வரை மாற்ற முடியாது.

எனவே பெற்றோர்களே! கொஞ்சம் கவனமாக இருந்து பிஞ்சு மனங்களை பூ வாக்குவோம்!

**************************************************************

மேலும் சில எண்ணங்கள்:

1. முதல் குழந்தையை முன்னிருத்தி சுபாவோட தம்பி/தங்கை
என அறிமுகம் செய்வதால் குழந்தை நமக்கும் உறவு எனும் எண்ணம்
ஏற்படும்.

2. விவரம் தெரியும் வரை இருவரின் பிறந்தநாளுக்கும் இருவருக்கும்
உடை எடுத்துக்கொடுப்பதால் பாதி பிரச்சனை தீரும்.

3. இருவரும் ஒரு செடியின் மலர்கள் என்பதை பெற்றவர்கள்
மறக்கக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் பெரிய குழந்தையை
உதாசினப்படுத்தக்கூடாது.

4. அதற்காக சின்னக் குழந்தையும், அதன் விருப்பு வெறுப்பையும்
ஏற்கத் தயங்ககூடாது.

5. ஆணோ, பெண்ணோ இரு குழந்தைகளும் இரு கண்கள்.
எதில் ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய்
எனும் பாகுபாடு தயவு செய்து வேண்டாம்.

பிள்ளை மனதில் நஞ்சு நாமே கலக்க வேண்டாம்.





.

அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்
வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்
போட்டு வெச்சிருக்காங்க. ஆனா பெத்தவங்களும்,
பிள்ளைங்களும் அதை காற்றில் பறக்க விட்டுகிட்டு இருக்காங்க.


13 வயது துவங்கி 18 வயதுக்குள் இருக்கும் ஆண்/பெண்
குழந்தைகள் டூவிலர் ஓட்டுவது சர்வசாதரணமாக
கண்ணில் படும் காட்சி. இது தவறு என்று தெரிந்தாலும்
இருதரப்பினரையும் செய்யத் தூண்டுவது எது??????


பிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.
அவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்
கொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்
செய்கிறார்கள். “மெயின் ரோட்டுக்கு போகாதே!
அங்கே போலிஸ் இருக்கும். இங்கயே சுத்து”
இது நாமே சட்டத்துக்கு புறம்பாக பிள்ளையை
நடக்க அனுமதிக்கும் செயலாச்சே....


பிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். சைக்கிளில்
ஏறுவதற்கே ராக்கெட் ஓட்டுவது போல் வேகமாக
பிள்ளைகள் ஓட்டுகிறார்கள். தற்போது பல
பெரியவர்கள் கூட கார், பைக் ஓட்டுகிறார்கள் தான்.


ஆனால் ட்ராபிக் சென்ஸ் இல்லாமல் தாறுமாறாக
வண்டி ஓட்டுகிறார்கள். கிடைக்கும் சைக்கிள் கேப்பில்
லாரி ஓட்டுவது போல் முறையாக செல்லாமல்
வளைந்து, நெளிந்து இவர்கள் ஓட்டுவதால்
பெரிய வண்டிககாரர்கள் தடுமாறுவதும் நடக்கிறது.
பெரியவர்களே இப்படி இருக்கும்போது பிள்ளைகள்
கையில் வண்டி கொடுத்தால் என்னவாகும்???


பெற்றோர்களுக்கு அவசரமாக கடைக்கு போகவேண்டும் அல்லது
சின்ன குழந்தையை பள்ளி, ட்யூஷனில் விட
வேண்டுமாக இருந்தால் சற்றே பெரிய குழந்தையின்
உதவியை நாடுகிறார்கள். அவர்களோ,” டூ வீலர்
கொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”
என்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக
“ஜாக்கிரதயா போ!” என்று சொல்லி சாவியை
கொடுத்து விடுகிறார்கள்.



பக்கத்து வீட்டிலேயே பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவி இருக்கிறாள். கொஞ்சம் பெரிய்ய
பெண்ணாக தெரிவாள். அதனாலேயே அவளது
பெற்றோர் தைரியமாக இங்கிருந்து 5 கிமீ
தொலைவில் இருக்கும் அவளது ட்யூஷன்
வகுப்புக்கு சென்று வர ஆக்டிவா வாங்கிக்
கொடுத்திருக்கிறார்கள்.. என்ன சொல்ல???


இப்படி சின்னக் குழந்தைகள் வண்டி ஓட்டுவதை
பார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்குது.
நேரம் நல்லா இல்லாமல் இருந்து விபத்து
ஏதும் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கூட
கிடைக்காது. மருத்துவ செலவு, அது இது
என்று விபரீதம் நடந்தால் என்னாகும் என யாரும்
யோசிக்காததால் பிள்ளைகள் டூவீலர் ஓட்டுகிறார்கள்.


பெற்றவர்களே யோசியுங்கள். இளங்கன்று
பயமறியாது!!! நாம் தான் எடுத்துச் சொல்லி
18 வயது வரை சைக்கிள் மட்டும் ஓட்டச்
சொல்ல வேண்டும்.


பெரியவர்களுக்கு என் வேண்டுகோள்.
ட்ராபிக் சட்டங்களை மதித்து வண்டி
ஓட்டுங்கள். இரவில் ஹெட்லைட்
எதிராளியின் கண்ணைக்குருடாக்குவது போல்
போட்டு வண்டி ஓட்டாதீர்கள். பக்கத்திலிருந்து
நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.

எதை எழுதலாம் எதை விடலாம் என யோசித்து யோசித்து தலை முடி நாலு போனது மிச்சம். சரி கோயமுத்தூர் போனதில் இருந்து எழுதலாம் என நினைத்து எழுத ஆரம்பிச்சாச்சு.


ஒரு முக்கிய கல்யாணத்துக்கு கோவை போகலாம் யார் யார் வரீங்க கை தூக்குங்கன்னு ஒரு குடும்ப தலைவன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தா சொல்லி வச்சா மாதிரி அத்தினி பேரும் கையை டபார்ன்னு கீழே தொங்க போட்டதும் இல்லாம குழி தோண்டி கீழே புதைச்சுகிட்டாங்க. சரி சரி அப்பா வரலை யார் யார் இப்ப வரீங்கன்னு கேட்டா உட்ச பட்சமாக நட்டு வாட்டர் டேங் மேலே ஏறி நானும் வரேன்ன்னு கத்தல்.


ஒரு வழியா பெரிய அக்கா, சின்ன அக்கா, மாமா குடும்பம் எல்லாம் தயார் ஆக பிளைட் தேய்ந்து, கார் தேய்ந்து, வேன் தேய்ந்து, ஆம்னி தேய்ந்து கடைசியாய் அரசு போக்குவரத்து கழகம் மிஞ்சி உட்காந்தவுடன் நட்ராஜ் லீலைஆரம்பம். தஞ்சை வரை தூங்கினான். அடுத்து வல்லம் அருகே பஸ் போன போன போது முன்னே சீட்டிலே உட்காந்து இருந்த பட்டாச்சாரி மாமா வள்ன்னு கத்த டிரைவர் பிரேக் போட நேக்கு புரிஞ்சிடுத்து. புள்ளாண்டான் லீலை ஸ்டார்ட் பண்ணிட்டான்ன்னு. மாமா முதுகு அப்பfஇ ஒரு வாட்டம். எனக்கே கடிக்க ஆசையா இருந்துச்சு. புளியோதரை வாசம் வருமோன்னு விட்டுட்டேன்.


மாமா திரும்பி என் ஆத்துகாரியை பார்த்து "மாமி கொழந்த கடிக்கறான். பல்லு கொழக்கட்டை படைங்கோ எல்லாம் சரியாகிடும்"ன்னு சொன்னாரு. "மாமா மூனு தபா பண்ணிட்டேன்.ராட்சஷன் இம்சை தாங்கலை. பப்ளிக்ல இப்படியா பிகேவ் பண்ணுவா அப்படியே அப்பனை கொண்டிருக்கு"ன்னு சொல்ல நானும் ஆட்டையிலே சேரும் நல்ல நோக்கோடு " மாமா கொழக்கட்டை பூர்ணம் வச்சதா பூர்ணம் வைக்காம ப்ளைனாவா"ன்னு கேட்டு தொலைச்சேன். தேவையில்லாமல் இடுப்பில் ஒரு இடி வாங்கிக்கனும்ன்னு தலை எழுத்து. ஒரு வழியார் கோவை வ்ந்து சேரும் போது எனக்காக காத்திருந்த் நண்பர் வெயிலான் குளிரில் காய்ஞ்சு போய் அப்த்துவை அழைக்க ஏர்போர்ட் போயிட்டார்.


அடுத்த நாள் காலை கல்யாணம் எல்லாம் முடிஞ்சு மயிலக்காவுக்கு போன் செஞ்சா "அப்படியே ஆட்டோவிலே உட்காருங்க ஆட்டோகாரர் கண்ணை மூடினா நம்ம வீடு தான்"ன்னு சொன்னப்ப லைட்டா கிலி வந்துச்சு. ஆட்டோகாரர் கண்ணை தொறந்து இருந்தாலே சொர்க்கம் கன்பர்ம்டு. இதிலே மூடிகிட்டு இருந்ர்த்து கோச்சா இருக்கும்ன்னு நினைச்சு ஏறி கண்ணை மூடியாச்சு.

"தோ பாரு, இப்பா நாம போக போறது பெரிய பேஷன் டிசைனர் வீட்டுக்கு. இப்படி 16 முழம் கட்டிகிட்டு வந்து மானத்தை வாங்கிறியே எதுக்கும் லைட்டா தள்ளியே வா"ன்னு சொல்ல அதுக்கு அபிஅம்மா "ஹய்யோ, நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாட்டு பாடனும் போல இருக்கு. இந்த நிமிஷத்துல இருந்து நான் யாரோ நீங்க யாரோ"ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே பேஷன் டிசைனர் கண்ணுல பட்டாச்சு. " என்னங்க பொண்ணு ராசாத்தி மாதிரி இருக்குன்னு சொன்னாங்க.


போய் உள்ளே உட்காந்ததுமே உள்ளே ஒரு பொண்ணு உட்காந்து இருந்துச்சு. எங்கயோ பார்த்த மாதிரியும் இருக்கு பார்க்காத மாதிரியும் இருக்கு. நான் தான் ஜாடிக்கு ஏத்த மூடியாச்சே. உடனே என் பாரியாளிடம் கேட்டேன் ஜாடையில். "இது யாரு?"


"இதுதாங்க பாட்டியாலா"


""வட நாட்டு பொண்ணு பேர் மாதிரி இருக்கே"

\

"ஆமாம் வடநாடு தான் போல இருக்கு. பாப்பா கூட தீபாவளிக்கு இதை தான் தைக்கனும்னு சொன்னா"


அதுக்குள்ளே மயிலக்கா வந்து "இது தான் சந்தனமுல்லை"ன்னு சொல்ல எனக்கோ ஆச்சர்யம்.


"பாப்பா எதுக்கு சந்தனமுல்லையை தைக்கனும்"


"அட ராமா பாப்பா தைக்க சொன்னது பாட்டியாலாவை. இங்க பாருங்க சீத்தாமாமியோட ஓரகத்தி மாதிரி கன்னத்துல குழி விழறது"


அப்படியே ஷேம லாபம் எல்லாம் விசாரிச்சு முடிஞ்ச பின்னே, தாரணிபிரியாவின் வருகை. ஓடிபோய் முல்லை கதவிடுக்கில் மறைந்து கொண்டு வரும் போது "பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ"ன்னு கத்த நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஆனா தாரணி பிரியா இப்படி ஒரு பயம் காட்டிய விஷயம்





குட்டி ரோஜாக்களாய் என்றும் எங்கும் மணம் பரப்புவது
குழந்தைகள் தான்.

அந்த அழகு குட்டிச் செல்லங்களுக்கு எங்கள் பேரண்ட்ஸ்
கிளப் சார்பில் மனமார்ந்த குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.



எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின் நல்லவர்
ஆவதும் தீயவராவது பெற்றவர் வளர்ப்பினிலேன்னு
பாட்டே இருக்கு.

உண்மையில் குழந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
குழந்தை பிறந்த பிறகு நாம் நிறைய்ய கற்கிறோம்.
கதை சொல்ல, அமுதூட்ட, பொறுமையாக அவர்களின்
நள்ளிரவு விளையாட்டை ரசிக்க என பல கற்றல்கள்
நடக்கின்றன்.




நம்மை கற்க வைத்த அந்த குழந்தைகளுக்கு,
பெற்றவர்களாக்கிய பெருந்தெய்வங்களுக்கு
இந்த நல்ல நாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

”நம்ம வீட்டுல நாய் வளர்க்கலாம்மா”!!!

”எனக்கொரு முயல்குட்டி வேணும்”

ஐயோ, இந்த பூனையை பாருங்களே”ன் எவ்வளவு
அழகா இருக்கு, நாம வளக்கலாம்”!!

இதெல்லாம் உங்க வீட்டுல பிள்ளைங்க அடிக்கடி
சொல்ற வார்த்தைகள் மாதிரி இருக்கா???

பிள்ளைகளுக்கு செல்லப்பிராணி வெச்சுக்கணும்னு
ரொம்ப ஆசை இருக்கும். அது நல்லதும் கூட.





செல்லப்பிராணி வீட்டுல வளர்ப்பதால பிள்ளைகளுக்கு
மனதளவில் நல்ல மாற்றம் இருக்கும். தனது
தோழனா நினைச்சு அவங்க அந்தப் பிராணியோடு
நேரம் போக்குவது அவர்களின் மன அழுத்தத்தை
குறைக்கும்.

செல்லப்பிராணியை வளர்க்கும் பொறுப்பை
பிள்ளைகளிடம் கொடுப்பதால் அவர்களுக்கு
பொறுப்பு கூடுகிறது, தன்னைச் சார்ந்து இருப்பவர்களை
கவனித்துக்கொள்ளும் வளர்ச்சி ஏற்படும்.

உங்கள் வீட்டின் சூழ்நிலை, உங்களின் நிலை
எல்லாவற்றையும் யோசித்து, பிள்ளைகளுடன்
கலந்தாலோசித்து அவர்கள் விரும்பும் செல்லப்
பிராணியை பரிசளிக்கலாம்.






pets and kids எனும் இந்த வலைத்தளத்தை
பாருங்கள். நமக்கு சில ஐடியாக்கள் கிடைக்கும்.

ஆனால் எல்லா குழந்தைகளாலும் செல்லப்பிராணிகள்
வைத்துக்கொள்ள முடியாது. வசதியைப் பற்றிச்
சொல்லவில்லை. அவர்களின் உடல்நிலையை
பற்றி சொல்கிறேன்.

சைனஸ்,அலர்ஜி, சுவாச பிரச்சனை உள்ள
குழந்தைகளுக்கு நாய்,பூனை இவற்றின் முடியினால்
பிரச்சனை அதிகமாகும்.

இது தெரியாமல் பிள்ளை ஆசை படுகிறானே என
வாங்கிக்கொடுத்து அவஸ்தைக்கு ஆளாக நேரும்.
குழந்தை நல மருத்துவரிடம் கேட்டு பிள்ளைக்கு
எந்த பாதிப்பும் இராத பட்சத்தில் செல்லப்பிராணி
ஒன்றை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

இல்லையேல் இப்படி பட்ட குழந்தைகள் இருக்கும்
வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்கள் வளர்க்கலாம்.


பதிவர் கிருஷ்ணாவின் வலைப்பூவில் இந்தப் பதிவு
பார்த்தேன்.

போரடித்துக்கிடக்கும் பிள்ளைகளுக்கு,தானும்
வலையை மேய நினைக்கும் பிள்ளைகளுக்கு
என சில வலைத்தளங்கள் இருப்பது பற்றி
பதிவிட்டிருந்தார்.

”நாள் தோறும் நீங்கள் இணையத்தில் நேரம் போக்கிக் கொண்டோ அல்லது உருப்படியாக எதாவது செய்து கொண்டோ இருப்பீர்கள்.

குழந்தைகளுக்காக எதாவது வலைப் பக்கங்கள் இருக்கின்றனவா என்று தேடிய போது தான் கிடைத்தது இந்த வலைப் பக்கம்.”

அவரின் பதிவு இங்கே

உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் வீட்டு வாண்டும் அழகாக இனி
கணிணி்யில் உபயோகமாக நேரம் போக்கும்.
வாழ்த்துக்கள்.
நன்றி கிருஷ்ணகுமார்

ஈகைத் திறன்

கோதையூர் என்ற ஒரு ஊரை வெகு நாட்களுக்கு முன் கோதண்டராமன் என்ற மன்னர் ஆண்டு வந்தார்.

மன்னர் நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தார். அதோடு ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எல்லாம் உடனுக்குடன் செய்து கொடுப்பார். கலைஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் பரிசுகளை வாரி வாரி வழங்குவார். இதனால் மன்னரின் புகழ் எல்லா நாட்டிலும் பரவத் தொடங்கியது.

வேங்கை நாட்டு மன்னர் வேழவேந்தன் கோதண்டராமனைக் கண்டு பொறாமையடைந்தார். அவரும் என்னைப் போன்ற மன்னர்தானே. அவருக்கு மட்டும் எப்படி இந்தப் பேரும்புகழும் கிடைத்தது? என்று வியப்போடு தனது மந்திரியாரான காளதீபனிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார்.

மந்திரியார் காளதீபன் வேழவேந்தரின் கஞ்சத்தனத்தையும், கொடூர குணத்தையும் நன்கு அறிவார்.

நம் மன்னரைத் திருத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்ட அவர். மன்னரை வணங்கி அரசே! மன்னர் கோதண்டராமனுக்கு தாங்களும் இணையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களுக்கு ஏற்படாத பேரும், புகழும் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதை விளக்க நீங்களும், நானும் மாறுவேடம் அணிந்து அவர் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நான் சொன்னபடி நீங்களும் அங்கே நடிக்க வேண்டும். அதற்கு சம்மதமானால் நாம் இன்றே கோதையூருக்குப்  புறப்படலாம் என்று கூறினார். மன்னர் வேழவேந்தனும் ஆர்வத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் ஏழை விவசாயியைப்போன்று மாறுவேடம் அணிந்து கொண்டு கோதையூருக்குப் புறப்பட்டார்கள்.

அரண்மனையில் நுழையும் நேரம் காவலர்கள் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள்? என்று விசாரித்தார்கள்.

"ஐயா! நாங்கள் இருவரும் மிகவும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கின்றோம். மன்னரிடம் உதவி பெற்று எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம் என்று வந்துள்ளோம்" என்று கூறினார் மாறுவேடத்தில் இருந்த காளதீபன்.

காவலர்கள் இருவரையும் தர்பாருக்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்த நேரத்தில் தர்பாரில் மன்னர் இல்லை. மன்னர் அவசர வேலை காரணமாக தன் அறையைவிட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.

காவலர்கள் மன்னரை வணங்கி அவர் காதருகே ஏதோ கூறினார்கள்.

மன்னர் புன்னகைத்தபடி "நண்பர்களே! நீங்கள் இருவரும் என்னிடம் உதவிபெற வந்திருப்பததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதோ எனது முத்துமாலை இரண்டை உங்கள் இருவருக்கும் பரிசளிக்கிறேன்" என்று கூறியவாறு தன் கழுத்தில் கிடந்த இரண்டு முத்து மாலைகளையும் மாறுவேடத்தில் இருந்த மன்னர் வேழவேந்தனிடமும், மந்திரியார் காளதீபனிடமும் கொடுத்து விட்டுச் சென்றார்.

நினைத்த மாத்திரத்தில் தர்மம் செய்கின்ற மன்னரின் கொடைத் தன்மையைக் கண்டு மன்னர் வேழவேந்தன் வியப்புற்றார்.

இருவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். மந்திரியார் காளதீபன் அரசே இப்போது கவனித்தீர்களா மன்னர் கோதண்டராமனின் தர்மம் செய்யும் முறையே, அவரை புகழ் உச்சியில் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாட்டை ஆளுகின்ற மன்னருக்கு ஈகை திறன் மிகவும் முக்கியம் என்றார்.

மன்னர் வேழவேந்தன் அன்றுமுதல் தன்னுடைய பொறாமை எண்ணத்தையும் கஞ்சத்தனத்தையும் விட்டுவிட்டார். தன் நாட்டு மக்களுக்கு பல உதவிகளையும் செய்யலானார். மன்னர் வேழவேந்தனின் செயல்களை கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

தர்மம் செய்து வாழ்பவர்கள் எல்லா நன்மைகளையும் கிடைக்கப் பெறுவார்கள்.




.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்