பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

அதிக ஜலதோஷத்தினால் (சளி) காதில் வலி ஏற்பட்டால், குழந்தை ஓயாமல் அழுது கொண்டும், காது வலியினாலும், அழுகையினால் ஏற்படும் தலை மற்றும் தொண்டை வலியினாலும் அதிக துன்பத்திருக்கும் ஆளாகும்.

காது இன்பக்ஷன் தானா இல்லை சளியால் ஏற்பட்ட காது வலியா என்று எப்படி அறிவது? எப்படித் தவிர்ப்பது?
சளியால் ஏற்பட்ட காது வலியில், ஒற்றைக் காதில் (பெரும்பாலும் இடது) ஊசி குத்துவது போன்ற வலியும், கண்ணுக்கு கீழ் மூக்கின் அருகிலும், நெற்றியில் (படத்தில் dark colour-இல் காட்டப் பட்ட பகுதிகள்) கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால லேசாக அழுத்திக் கொடுத்தால் இதமாகவும் உணரும்.


  • ஒரு வேளை அன்றுதான் தலைக்கு குளிப்பாட்டி இருந்தீர்கள் என்றால், சளி பிடிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல சுத்தமான ear-buds அல்லது மல் துணியால் காதுகளை சுத்தம் செய்து விடவும். தலையை நன்றாகத் துவட்டி விட்டு, தலை உச்சியில் சிறிதளவு வீபூதியும் நெற்றியில் சிறிது வீபூதியும் மிக சிறிதளவும் தண்ணீரில் குழைத்து இட்டு விட்டால் நீர் கோத்துக் கொள்ளாமல் இருக்கும்.
  • இல்லை என்றால் நாட்டு மருந்துக் கடைகளில் "நீர் கோவை மாத்திரை" என்று கிடைக்கும். ரொம்ப வீரியம் கொண்டது மற்றும் காரமானது. கை கண்ட மருந்து. இதை அப்படியே குழைத்து குழந்தைகளுக்கு நெற்றியில் போட்டால் தோல் எரியும். அதனால் சிறிது வீபூதி அல்லது மஞ்சள் சேர்த்து குழைத்து இடவும். 
  • இல்லை என்றால் சுக்கோடு கடுகை அரைத்து மைதாவில் குழைத்து நெற்றிக்கு பத்து போடவும்.
  • மேலும் வாரம் ஒரு நாள், தலைக்கு குளிப்பாட்டும் அன்று, மூன்று பல் பூண்டு, மூன்று வெற்றிலை, ஒரு ஆர்க்கு வேப்பிலை, பத்து துளசி இலை, மற்றும் ஓமம், மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை,  வால் மிளகு, (எல்லாம் மூன்று டீஸ்பூன்) அதிமதுரம், கண்டந்திப்பிலி, அரிசித் திப்பிலி, (எல்லாம் ஒவ்வொன்று) இவை எல்லாவற்றையும் வாணலியில் ஒரு சொட்டு (ஒரே ஒரு சொட்டுதான்) விளக்கெண்ணை விட்டு வறுத்துக் கொண்டு மூன்று தம்ப்ளர் தண்ணீரில் போட்டு ஒரு தம்ப்ளராக வற்றும் வரை கொதிக்க விட்டு, வடிகட்டி, ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, வெது வெதுவென்று கொடுக்கவும். என் சொந்த அனுபவத்தில் எனக்கு ரொம்பவே உதவிய கஷாய ரெசிப்பீ இதுதான். குழந்தையை குளிப்பாட்ட வெந்நீர் போடும் போதே இதையும் ரெடியாக வைத்திருப்பேன். குளித்து தலை துவட்டியதும் தானே வந்து குடித்து விட்டு போய் விடுவாள்.


எப்படி கண்டு பிடிப்பது?
  • மஞ்சள்/பச்சையாக சளி கட்டிக் கொண்டு, சளி நாற்றம் அடிக்கும். 
  • மூக்கை உரிய சிரமப் படுவார்கள்.
  • தூக்கமின்மை  / படுத்துக்கொள்ள சிரமப்படும்
  • குழந்தை காதுகளை பிடித்து/பொத்திக் கொண்டு அழும் (அல்லது) காதை பிடித்து இழுக்கும், காதை அறைவது போல தட்டும் / தேய்த்து விட்டுக் கொள்ளும்
  • இருமல்
  • தலை வலி
  • மூக்கில் நீர் வடிதல்
  • உணவு உண்ண மறுத்தல்
  • விழுங்க சிரமப் படுதல்
  • மலம் / சிறுநீர் கழிக்காமல் இருத்தல் (குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு தரம் மலமும், அதிக பட்சம் ஆறு முறையாவது சிறுநீரும் கழிக்க வேண்டும்)
  • ஜுரம் வரலாம் 
  • வாந்தி எடுத்தால் 
  • நை நை என்று அழுது கொண்டே இருத்தல்
சரி, காது வலி வந்து விட்டது, என்ன செய்வது?

  • வாந்தி எடுத்தால் வீட்டில் ஓம வாட்டர் இருந்தால் தண்ணீரில் கலந்து குடிக்க வெந்நீர் கொடுங்கள்.
  • பஞ்சில் ஒரு சொட்டு யூகாலிப்டஸ் எண்ணெய் சொட்டி, அதை காதில் வையுங்கள். இதமாக இருக்கும்.
  • மூக்கு மற்றும் நெற்றி (சைனஸ் ஸ்பாட்டுகள்) ஆகிய இடங்களில் கொஞ்சமாக விக்ஸ் தடவி அழுத்திக் கொடுங்கள்.
  • மேலே சொன்ன "பத்து" ஏதாவது ஒன்றை போடுங்கள்.
  • முடிந்த வரை சீக்கிரம் டாக்டரிடம் கூட்டிப் போங்கள். அப்படி போகும் போது "பத்து பதினொன்று", குழந்தையின் மூக்கு எல்லாவற்றையும் துடைத்து விட்டு கூட்டிப் போங்க.
  • டாக்டர் தரும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை தவறாமல் கொடுங்கள். Acetaminophen or ibuprofen முக்கால்வாசி காது வலிக்கு நல்ல மருந்தாகவே இருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே காது வலி முழுமையாக குணமாகி விடுகிறது. இருந்தாலும் மருத்துவரின் அறிவுரைப்படி முழு டோஸும் கொடுத்து விடுங்கள்.
டாக்டர் கொடுத்த மருந்துகள் 24-மணி நேரத்துக்குள் செயல் படவில்லை என்றாலோ, தொடர்ந்து காது வலி இருந்து கொண்டே இருந்தாலோ, குழந்தையை சமாதானம் செய்ய முடியாதளவு அழுது கொண்டே இருந்தாலோ, குழந்தைக்கு கழுத்து பிடிப்பு (stiff neck) ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று விடுங்கள். அது காது இன்பெக்ஷன்னாகக் கூட இருக்கலாம்.



0

8 comments:

ரொம்ப அழகாகவும், வீட்டுக்குறிப்போடவும் கொடுத்திருக்கீங்க. நன்றி வித்யா

அடிக்கடி ஜலதோஷம் பிடிச்சாலும் கண்,காது,மூக்கு நிபுணரை சந்திப்பது நலம். என்ன காரணம்னு சொல்ல முடியாம பல வித காரணங்களால் மூக்கில் எலும்பு வளைந்து இருந்தாலும் ஜலதோஷம், தலைவலிதான்.

நல்ல தகவல்கள். நன்றி.:)

ரொம்ப ரொம்ப உபயோகமான தகவல்கள். ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி வித்யா. பிரிண்ட் எடுத்து வச்சுகிட்டேன். அடுத்த வாரம் ஊருக்கு கொண்டு போக.

//மூன்று பல் பூண்டு, மூன்று வெற்றிலை, ஒரு ஆர்க்கு வேப்பிலை, பத்து துளசி இலை, மற்றும் ஓமம், மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, வால் மிளகு, (எல்லாம் மூன்று டீஸ்பூன்) அதிமதுரம், கண்டந்திப்பிலி, அரிசித் திப்பிலி, (எல்லாம் ஒவ்வொன்று) //

இந்தக் கஷாயம் எத்தனை வயசு வரைக் கொடுக்கலாம்?

அப்புறம், துளசி பத்தியும் கேக்கணும்..

துளசியில கருந்துளசிதான் சளிக்கு நல்லதுன்னு சொல்றாங்களே, அப்படியா?

அப்புறம் ஒரு ஆயுர்வேத/சித்த (அல்லது அதுபோன்ற ஒரு துறை) மருத்துவர் சொன்னதா ஒரு பிரபல உடல்நல இதழில் ரொம்ப காலம் முன்னாடி படிச்சது. சரியான தகவலான்னு கேட்டா எல்லாரும் தெரியாதுன்னுதான் சொல்றாங்க..

ஆண்கள் தொடர்ந்து 40 நாளைக்கு மேலே துளசி சாப்பிடக்கூடாதுங்கிறது சரியானதா?

நன்றி புதுகைத் தென்றல். நீங்க சொல்வதும் சரிதான்..

நன்றி ஷங்கர்.

நன்றி நவாஸ். ஊருக்கு வந்தால் மின்மடல் இடுங்க. சென்னையில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செஞ்சிரலாம். உங்கள் குடும்பத்தோடு வந்துடுங்க:)

நன்றி ஹுசைனம்மா
இப்போதெல்லாம் துளசி கிடைப்பதே அரிதாகி விட்டது.. எது கிடைக்கிறதோ பயன் படுத்தலாம்.

இந்த கஷாயம் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஒரு வயதுக்கு குறைவான குழந்தை என்றால், சாப்பாடு குடுக்க ஆரம்பித்திருந்தால் மட்டும் தரவும். அது கூட ஒரு ஸ்பூனுக்கு மேல் கொடுக்க வேண்டாம்.

எங்கயாவது அலைந்து திரிந்து விட்டு, ரொம்ப சோர்ந்து இருக்கும் போது இந்தக் கஷாயம் ஒரு தம்ப்ளர் பருகிப் பாருங்கள்.. பிறகு கோக்காவது பெப்சியாவது...

அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க. துளசி பத்து இலை வரை தினமும் சாப்பிடலாம். வாழ் நாள் முழுதும்.


வித்யா

எனக்கு இந்த தொந்தரவு சின்ன வயசுலேர்ந்தே இருக்கு.

எனக்கு அதிகமா வலது காது தான் வலிக்கும்.

பட்ஸ் நல்லதா ...

நல்ல பதிவுகள் - கீப் கோயிங் வித்யா.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்