பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பிள்ளையை பள்ளியில் சேர்த்த அன்னைக்குத்தான் பலர்
பள்ளிக்கு சென்றிருப்பார்கள். அதற்கப்புறம் பேரண்ட்ஸ் மீட்டிங்
வெச்சா ”அவங்களுக்கு வேற வேலை இல்லை”!!
தட்டிக்கழிச்சிடுவாங்க.

அம்மா அல்லது அப்பா யாராவது ஒருத்தர் போனா போதும்னு
சொல்லிட்டு இதுக்காக சண்டை போட்டு யாருமே போகாம
பிள்ளைய ஏங்க விடுவதும் நடக்கும்.


”ஸ்கூல்ல சேத்திருக்கோம்ல. சேர்க்கறவரைக்கும் தான் நம்ம கடமை!
படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியது வாத்தியார் கடமை”! என்பது
பலரின் எண்ணம்.

மார்க் குறைஞ்சா பிள்ளைய திட்டுவது, இல்லாட்டி
ஆசிரியைகளிடம் சண்டைக்கு போவது. உண்மையில்
செய்ய வேண்டியது என்னத் தெரியுமா? பிள்ளை படிக்கும்
பள்ளிக்குச் சென்று ஆசிரியைகள் (ஒவ்வொரு சப்ஜெக்ட்
டீச்சர்களும்) ஹெட்மாஸ்டர்களை சந்தித்து இந்தக் குழந்தையின்
பெற்றோர் என அறிமுகப் படுத்திக்கொள்வது அவசியம்.

பள்ளிக்கு செல்வது அவர்களை பற்றியோ பிள்ளையை
பற்றியோ குற்றப்பத்திரிகை வாசிக்க அல்ல என்பதை நல்லா
மனதில் பதிய வெச்சுக்கணும்.

அப்புறம் அங்க போய் என்ன செய்யன்னு கேக்கறீங்களா??

தெரிஞ்சிக்கலாம் வாங்க.

சின்ன வகுப்புக்களில் பிள்ளைகள் இருக்கும்பொழுதை விட
பெரிய வகுப்புக்கள் சென்ற பிறகு அவர்களின் நடவடிக்கைப்
பற்றி வெகுக் குறைவாகத்தான் பெற்றோருக்குத் தெரிய வரும்.
காரணம் கொஞ்சம் பொறுப்பு குழந்தைகளிடமும் தரப்படுவதே.

உதாரணம்: வீட்டுப்பாடம் செய்ய வேண்டியது பிள்ளையின்
பொறுப்பு என்றாலும் தாமதமாவதற்கான காரணத்தை கண்டறிய
வேண்டியது நம் கடமை.

ஆசிரியைகளுடம் கலந்து பேசி, நம்மை அறிமுகப்படுத்திக்கொள்வதால்
இந்த பிள்ளையின் பெற்றோர் பிள்ளையின் படிப்பில், நலனில்
அக்கறை உள்ளவர்கள் எனும் எண்ணத்தை ஆசிரியரின் மனதில்
விதைக்கிறோம்.

ஆசிரியரின் அனுமதியுடன் தேவையானால் அடிக்கடி இருவரும்
கலந்து பேசுவதனால் பிள்ளையின் படிப்பில் நல்ல முன்னேற்றம்
கொண்டு வர முடியும்.

ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம் என்பதால் பிள்ளையின்
முன்னேற்றத்தின் போது அவருக்கு நன்றி கூறுவது, பாராட்டுவது
மிக முக்கியம்( பரிசு பொருட்கள் வேண்டாம். உங்களின் பங்கு
இல்லாவிட்டால் இது சாத்தியமாகியிருக்காது போன்ற பாசிடிவ்வான
பாராட்டுக்கள் முக்கியம்)

பெற்றோர்- ஆசிரியர்கள் இந்தக் கூட்டணியினால் அனைவருக்கும்
நல்லது. பிள்ளைக்கு முன்னேற்றம், பிள்ளைகளால் பள்ளிக்கு
நன்மதிப்பு.

7 comments:

நல்ல விடயம் தான்.

நல்ல பதிவு...

எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.....

///ஆசிரியரின் அனுமதியுடன் தேவையானால் அடிக்கடி இருவரும்
கலந்து பேசுவதனால் பிள்ளையின் படிப்பில் நல்ல முன்னேற்றம்
கொண்டு வர முடியும்///

உண்மைதான்.

நல்ல இடுகை புதுகைத் தென்றல்.

அருமையான விஷயம்.
வாழ்த்துக்கள் புதுகைத் தென்றல். :)

வித்யா

அனைவருக்கும் நன்றி

நல்ல இடுகை என்னை போல புது தந்தைக்கு (பழைய மாணவனுக்கு :-) )

பகிர்வுக்கு நன்றி :-)

வருகைக்கு நன்றி சிங்கக்குட்டி

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்