பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.






குழந்தைகளின் உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. அது தனித்துவமானது. எல்லையற்ற பாதையில் முடிவில்லாத பயணமாய் செல்ல அவர்களை தூண்டுகிறது. நட்பும் சந்தோஷமும் மட்டுமே அவர்களின் ஆசை, விருப்பம் மகிழ்ச்சி.


அப்படி எல்லையில்லா பேரானந்தத்தை விரும்பிய இரண்டு பாலினம் புரியாத பால்ய நட்பு சிறார்களின் கதையே விவா கியூபா என்றும் ஸ்பானிஷ் திரைப்படம்.


மாலு உயர்குடியில் பிற்ந்த செல்வந்தரான சிறுமி. அவளது தந்தையோ அவளது குடும்பத்தை விட்டு விலகி வெகுதூரம் வாழ்ந்து வருபவன். தாயுடனும் தனது முதிர்ந்த பாட்டியுடன் வசித்து வருகிறாள்.


மாலுவுக்கு சம வயதுடைய ஜார்ஜி எதிர் வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் சிறுவன். கம்யூனிச சித்தாந்த கொள்கைகளுடைய குடும்பத்தில் பிறந்தவன்.


இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் இணை பிரியா நண்பர்கள். துள்ளி திரிவதும் சிறு சிறு சண்டைகளுடன் சதா விளையாடி மகிழ்வதும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதுமாய் பொழுதுகள் போகின்றது. இது இரு வீட்டாருக்கும் பிடிப்பதில்லை. மாலுவை அவள் தாய் ஆண்பிள்ளைகளுடன் விளையாடுவது தவறென்றும் பெண் குழந்தைகள் வீட்டின் உள்ளேயே தான் விளையாட வேண்டும் என்றும் நச்சரித்து கொண்டே இருக்கிறாள். இதனால் மாலுவுக்கோ தாயின் மீது அளவற்ற கோவம். ஆனால் அவளின் ஒரே ஆறுதல் வயதான பாட்டி மட்டுமே.


இதே நிலைதான் ஜார்ஜிக்கும். ஜார்ஜியின் தந்தை மாலுவினுடனான நட்பை துண்டிக்க வேண்டுமென்றும் சக ஆண் நண்பர்களுடன் விளையாட அறிவுறுத்துகிறார். அப்பாவை கண்டாலே அவனுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. மாலு & ஜார்ஜியாவின் நட்பால் இரு குடும்பமும் இந்தியா பாகிஸ்தானாய் முறைத்து கொள்கிறது.


நிலைமை இப்படி இருக்க மாலுவின் தாய் வேறொருவனை மணமுடிக்க எண்ணுகிறாள். ஜெர்மனியில் வசிக்கும் அவனிடம் சேர்ந்து வாழ விருப்பமும் தெரிவிக்கிறாள். இதற்காக சட்டப்படி மாலுவின் தந்தைக்கு அவர் கையெழுத்திட வேண்டி ஒப்புதல் படிவத்தையும் அனுப்பி வைக்கிறாள். மனமுடைந்து போகிறாள் மாலு.

ஒரு புதிய வாழ்க்கை வருகிறதென்றும் ஜெர்மனியில் சுகமாய் வாழலாம் என்று மாலுவை தேற்றுகிறாள் தாய். சோகத்திலும் சோகமாய் பாட்டியும் திடிரென்று மரணித்து விட சொல்லமுடியாத வேதனையுடன் இருக்கிறாள் மாலு. விளையாடவோ பாடத்திலோ விருப்பமின்றி இருப்பதை பார்த்து ஜார்ஜியாவும் மிகவும் வருத்தப்படுகிறான்.


தாயின் விருப்பத்தையும் இடம் பெயர்வது பற்றியும் மற்றும் அனைத்து விபரங்களையும் நண்பன் ஜார்ஜியாவிடம் அழுதபடியே சொல்கிறாள். தற்போதைய பள்ளி கூடத்தையோ ஜார்ஜியாவையோ பிரிய ஒரு போதும் இயலாது என்றும் வருந்துகிறாள். அவளை தேற்றுகிறான் ஜார்ஜியோ.


இதற்கு ஒரே வழி மாலுவின் தந்தையை சந்தித்து அவரை அந்த ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடாமல் செய்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் என்றும் இருவரும் தனியே கிளம்பி போய் அவரை சந்திக்கலாம் என்று முடிவும் செய்கின்றனர்.

இரவோடு இரவாக வேண்டிய துணிகளையும், ஊருக்கு செல்ல வரைப்படம் சேர்த்து வைத்த உண்டியலையும் எடுத்து கொண்டு பள்ளி செல்வது போல காலையில் கிளம்பி இருவரும் உற்சாகமாகவும் அதீத சந்தோஷத்துடனும் பயணத்தை தொடங்குகின்றனர்.

படகில் ஆரம்பித்த பயணம் கார், மோட்டர் சைக்கிள், மாட்டுவண்டி, இரயில் என்று சகலவித பாதைகளிலும் பயணிக்கிறது.

பசியும் சோர்வும் வாட்டுகிறது. தொலை தூர கிராமத்தில் பார்வையிழந்த பெண்ணொருத்தியின் வீட்டிலிருந்து ரொட்டியையும் பாலையும் திருட முற்பட அவள் நாயின் துணையோடு இருவரையும் விரட்டி பிடிக்க செய்வதறியாது திகைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து ஒட இரவில் காட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக வழி போக்கன் சொன்னதை நம்பி பயந்து ஜார்ஜியாவிற்கு கடுமையான காய்ச்சல்.

டாக்டரிடம் சென்று காண்பிக்க ஊர் மக்கள் உதவினாலும் ஊசிக்கு பயந்து ஜார்ஜியா ஒடுவதும் நகைச்சுவையாய் காட்சிகள்.


இதனிடையே இரு வீட்டாரும் போலிஸில் புகார் கொடுக்க இரு குடும்பமும் ஒத்துழைத்தால் மட்டுமே குழந்தைகளை மீட்க முடியும் என்கிறார் அதிகாரி. சண்டையிட்டு கொண்டிருந்த இருவரின் குடும்பம் சிறிது சிறிதாய் நட்பாகி ஒருவருகொருவர் ஆறுதலாய் இருந்து வர குழந்தைகள் இருவரும் ஒரு பக்கம் போலிஸ் துரத்திலில் இருந்தும் மறைந்து மறைந்து ஒடுவதும் பல புதிய மனிதர்களை சந்திப்பதுடன் ஒவ்வொரு சந்திப்பும் அவர்களுக்க் பல வித அனுபவத்தையும் புத்துணர்வையும் அளிக்கிறது.

ஒரிடத்தில் தவறுதலாய் விட்டு சென்ற ஜார்ஜியாவின் கைப்பையை வைத்து போலிஸ் அவர்களின் இருப்பிடம் தெரிவிக்க இரு குடும்பமும் குழந்தைகளை தேடி புறப்படுகின்றனர்.

கடைசியில் மலை குகைகளை ஆராய்ச்சி செய்யும் ஒருவனின் துணையோடு மாலுவின் தந்தையிருக்குமிடத்தை சென்றடைந்து விடுகின்றனர் மாலுவும் ஜார்ஜியாவும்.

அதற்கு முன் அங்கு வந்த் சேர்ந்த மாலுவின் தாயும் ஜார்ஜியாவின் பெற்றோர்களும் குழந்தைகளை கண்ட அனைவரும் முதலில் சந்தோஷத்திலும் பரவசத்தில் திளைத்தாலும் சிறிது நேரத்தில் யார் மீது குற்றம் என்று சண்டை பிடிக்க தொடங்கியவுடன் அருகே இருக்கும் கடற்கரையை பார்த்ததும் எதையும் பொருட்படுத்தாது அளவில்லா ஆனந்தத்துடன் விளையாட செல்கின்றனர் மாலுவும் ஜார்ஜியாவும்.

தூரத்தில் பெற்றோர்கள் சண்டையிட மணலில் குழந்தைகள் விளையாட அற்புத காட்சியாய் திரைப்படம் நிறைவு பெறுகிறது.


2005ல் வெளியான இத்திரைப்படம் பல சர்வதேச விழாக்களில் பங்கு பெற்றதுடன் 34 உலக விருதுகளை வாரி குவித்துள்ளது. 2005 கேன்ஸ் குழந்தைகள் சர்வதேச விழாவில் முதன் முதலில் பரிசு பெற்ற கியூபா திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது. இயல்பான நடிப்பும் அருமையான ஒளிபதிவும் கூடுதல் சிறப்பு.

வானொலியில் காணாமல் போனவர்களின் பற்றிய அறிவிப்பை கேட்டவுடன் ஜார்ஜியா பெண் வேடமிட்டு திரிவதும், வழி நெடுகிலும் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி பொய்யுரைப்பதும் பிறகு மாட்டி கொண்டு முழிப்பதும் சிறு சிறு சண்டையிடுவதும் மீண்டும் நட்பாவதும் இயல்பான நகைச்சுவையுடன் நெகிழ வைக்கும் காட்சிகள்.

இத்திரைப்பட்த்தை எழுதி இயக்கியிருப்பவர் கியூபா திரைப்பட துறையில் மிகவும் போற்றதக்க Juan Carlos Cremata. இவர் குழந்தைகளுக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பல ஆண்டுகள் இயக்கிய அனுபவம் பெற்றவர். இயக்குநர் மற்றும் எடிட்டிங் பயிற்ச்சி பள்ளியில் ஆசிரியராகவும் இருந்து பல மாணவர்களுக்கு பயிற்ச்சியும் அளித்துள்ளார்.


குழந்தைகளை பற்றிய இத்திரைப்படம் பார்பவர் அனைவருக்கும் தமது பாலர் பருவத்தை கிளர செய்யும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளுடனும் குடுமபத்துடனும் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம்.


பார்க்க டிரைலர் இங்கே

குழந்தைகள் குறித்த எந்தவித சிந்தனையில்லாமல் சென்னை போன்ற பெரு நகரங்களில் அவசர உலகம் ஒடிக்கொண்டு இருக்கிறது. பெரிய பெரிய புத்தகப்பைக்களுக்குள் அவர்கள் நசுங்கி கிடப்பதும் சதாராணமான நிகழ்வுகள். இன்று ஞாயிற்று கிழமைகளில் கூட தெருக்களில் விளையாடும் பிள்ளைகளை பார்க்க முடிவதில்லை.


நமது சிறு வயதில் நூற்றுகணக்கான விளையாட்டுகளில் உலகம் விரிந்து கிடந்ததை நினைத்து சந்தோஷப்படும் வேளையில் “தொலைக்காட்சி” பூதம் அந்த விளையாட்டுகளையெல்லாம் விழுங்கி விட்டதை நினைத்து வேதனை படாமல் இருக்க முடிவதில்லை.



9 comments:

குட் பகிர்வு இங்கே(யும்) ...

நன்றி ஜமால்.

பெற்றோர்கள் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம் என்பதால் இங்கேயும் பதிந்தேன்.

vera blog il ungaludaiyathai potangalonnu ninaichen surya

good post

நல்ல பகிர்வு ஜமால்.

இது வரை பார்க்கவில்லை, ஆனால் கண்டிப்பாய் பார்கிறேன்.

நல்ல பகிர்வுக்கு நன்றி

பகிர்வுக்கு நன்றி

நன்றி தேனம்மை. என்னுடைய பதிவு தான். குழந்தைகளுக்கான திரைப்படமென்பதால் பேரண்ட்ஸ் கிளப்பில் பதிவேற்றினேன்.

நன்றி சிங்க குட்டி.

நன்றி நாவஸீதீன்

பேரண்ட்ஸ் கிளப்பில் இல்லாதவங்க பின்னூட்டமே இருக்குது.. அவர்களுக்கு நன்றிகள் பல..

கிளப் அங்கத்தினர்களும் யாரும் படிக்கவில்லையோ...??

அவ்வ்வ்வ்வ்வ்வ்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்