பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

BSRB பரிட்சை பயிற்சி வகுப்பில் என்னுடன் படித்த நண்பர்
ஒருவர் செல்கடாகி இண்டர்வ்யூவுக்கு சென்றார். அங்கே
அவர் PERSONALITY DEVELOPMENT பத்தாது என்று நிராகரிக்கப்பட்டார்.
கெச்சலான அவரின் உருவம் தவறான்னு யோசிச்சுகிட்டே
எங்களுக்கு பயிற்சி கொடுத்த ராஜா அண்ணாவை கேட்ட
பொழுது PERSONALITY DEVELOPMENT என்றால் வெளிப்புறத்
தோற்றமட்டுமில்லை என்று புரிய வைத்தார்.

பலருக்கும் PERSONALITY DEVELOPMENT என்றால் சிக்ஸ் பேக்,
போல பழநி படிக்கட்டாக உடல் வளர்ப்பது போல என்று தான்
நினைத்திருப்பார்கள்.


உண்மையில் PERSONALITY என்பது ஒவ்வொருவரின் ப்ர்த்யேக
உள் அமைப்பு போன்றது. பொதுவாக நிலையாகவே இருந்தாலும்
சில சமயம் மெல்ல மெல்ல மாறுவதற்கான வாய்ப்புக்கள்
இருக்கிறது. அதை மாற்றும் காரணிகள் அவரவரின்
எண்ணங்கள், உணர்வுகள், attitude மற்றும் நடவடிக்கைகள்
ஆகும்.



பர்சனாலிட்டியில் பலவித அங்கங்கள் இருக்கின்றன.

உடல், புத்திசாலித்தனம்,உணர்வு பெருக்கு,சமூகம்,
தார்மீகம், ஆன்மீகம்.(physical, intellectual, emotional,
social, moral and spiritual)

இவை ஒவ்வொன்றும் 4 முக்கியமான காரணிகளால்
உருவாக்கப்படுகிறது.

பரம்பரைவாகு, கற்றல், மனமுதிர்ச்சி மற்றும் சுற்றுப்புரம்.

பரம்பரையாக நமக்கு வரும் பழக்க வழக்கங்களில் நமாக
ஏதும் தேர்ந்தெடுப்பதில்லை. மனமுதிர்ச்சி வயது சம்பந்த பட்டது.
(பலர் வயதுக்குத் தகுந்த முதிர்ச்சி குறைவாகவோ, அதிகமாகவோ
இருப்பர்) ஆனால் சுற்றுப்புரத்தை முக்கியமான தூண்டும்
காரணியகாச் சொல்லலாம்.

நம் PERSONALITYயை வளர்த்துக்கொள்வதை மிக அழகாகச் செய்யலாம்.
கற்றல், பயிற்சி, நல்ல முறையான பழக்க வழக்கங்கள்
கை கொடுக்கும். இது இருந்தால் சுற்றுப்புரம் எப்படி இருந்தாலும்
சேற்றில் முளைத்த செந்தாமரையாக திகழலாம்.

1. நம்மை பற்றி நாமே ஒரு நல்ல சுய பிம்பம்(SELF IMAGE) அமைத்துக்கொள்ள
வேண்டும். நாம் இப்படித்தான் இருப்போம் எனும் மனத்தால்
உணரும் பிம்பம் அது. நம்மை பற்றிய ஆள்மன நம்பிக்கை அது.
நம் நடவடிக்கைகள்,செய்கைகள் நம் மன பிம்பத்தை வைத்துதான்
நடைபெறுகிறது. நம் சுய பிம்பம் நல்ல நிலையில் இருந்தால்
நல்ல நடவடிக்கைகள் உள்ளவராகவும், சுய பிம்பம் தாழ்வு
நிலையில் இருந்தால் தீய செயல்கள் செய்பவராக இருப்போம்.


நம் ஏற்றத்தையும் தாழ்வையும் தீர்மானிப்பது நம் சுய பிம்பமே!!!

2. நிஜவாழ்க்கை என்பது நாம் நிஜத்தில் என்னவாக இருக்கிறோம்
என்பதை வைத்தே ஏற்படும்.(REAL SELF)

3. மற்றவர் கண்களுக்கு தெரியும் நம் பிம்பம் உண்மையானது.
(ACTUAL SELF)

4. நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உருவகப்படுத்தியிருக்கும்
நம் பிம்பம் IDEAL SELF

இதில் பிள்ளைகளுக்கு நாம் எப்படி உதவ முடியும்.

ஒரு சின்ன கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.

சிறந்த பயில்வான் ஒருவரை எதிர் கொள்ள முடியாத
ஒருவர் அவரிடம் நயந்து பேசி, “எண்ணன்னே, ரொம்ப
டய்ர்டாக இருக்கீங்க! உடம்பு ஏதும் சரியில்லையா,
கண்ணெல்லாம் உள்ள போயிருச்சு, பெருமூச்சு வாங்குது!”
என அவர் ஏதோ வியாதிப்பிண்டம் போல பேச

நல்லாவே இருக்கும் அவரும் தனக்கு ஏதோ வியாதி
இருப்பதாக நினைத்துக்கொண்டே வீடு போய்ச் சேரும் பொழுது
வீட்டு வாசலிலேயே மயங்கி விழுந்து விடுவார்.

நம் பிள்ளைகளையும் நீ மக்கு, உனக்கு ஒண்ணும் தெரியாது,
உன்னால ஏதும் முடியாது! நீ எதுக்கும் லாயக்கில்லாதவள்
எனும் ரீதியில் பேசினால் தன் சுய பிம்பத்தில் அடி பட்டு
தான் அப்படித்தானோ எனும் எண்ணம் அவர்களுக்கு வந்துவிடுகிறது.

மாறாக,”உன்னால முடியும் கண்ணா, ட்ரை செஞ்சு பாரேன்!”
”பரிசா முக்கியம் நீ கலந்து கொண்டதே நல்ல பயிற்சி மாதிரி!”
கணக்கு பரிட்சைக்கே டென்ஷன் ஆகாத நீ ------- ஏன் பயப்படர?
உன்னால கண்டிப்பா முடியும்! போன்ற வார்த்தைகள்
உத்வேகத்தை தந்து அவர்களின் நல்ல சுய பிம்பத்தை பெற
வழி செய்யும்.

ஆஷிஷிடம் நான் சொல்லும் வாக்கியம் இதுதான்.
“அனுமனுக்கு அவன் பலம் தானாகத் தெரியாது.
ஆனால் மிகச் சிறந்த பலசாலி அனுமன். நீயும்
அப்படித்தான். உன்னால் இது சாதிக்க முடியும்!
உன் பலம் எனக்குத் தெரியும்!!”” இந்த வர்ர்த்தைகள்
செய்திருக்கும் மாயாஜாலங்கள் எவ்வளவோ!

IWMS COLOMBO நடத்திய ELOCUTION பரிட்சைகளில் 100/100 மதிப்பெண்கள் பெற்று
தேர்ச்சி பெற்ற 400 மாணவர்கள் லிஸ்டில்
ஆஷ்ஷும், அம்ருதாவும்.


பிள்ளைகள் மட்டுமல்ல பலரின் சுயத்தை நாம் அவமதிக்கும்
பொழுதுதான் பிரச்சனைகள் உருவாகின்றன. சிறியவர்கள்
என்பதால் நம் பிள்ளைகளை நாமே அவமதிக்கலாமா???

தாழ்வு மனப்பான்மை ஏற்படாத வகையில் பிள்ளைகளுடன்
உரையாடுவோம்!!

5 comments:

////தாழ்வு மனப்பான்மை ஏற்படாத வகையில் பிள்ளைகளுடன்
உரையாடுவோம்!!////

இது!

இதுதான் மிக முக்கியம். அருமையான விசயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி புதுகைத் தென்றல்.

நன்றி நவாஸுதீன்

அருமையான பதிவு!! நிறைய விஷயங்களை அழகா தொகுத்து எழுதிருக்கிங்க....

மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கீங்க தென்றல். அருமை.

late comer... முட்டி போட்டு நின்னாக்க excuse கொடுப்பீங்களா! :)

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்