பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

ஸ்கூல் திறக்க போவுது, சிலருக்கு திறந்திருக்கும்.
நேற்றுவரை அம்மாவின் துப்பட்டாவை கட்டிக்கொண்டு
அலைந்த பிள்ளை ,”புது யூனிஃபார்ம், புது டிபன் பாக்ஸ்,
புது பேக், புது வாட்டர் பாட்டில் கலக்கறே சந்துரு””!!
என்று பள்ளிக்கு செல்ல தயராக இருக்கும்.

எல்லாம் புதுசாதான் வாங்கிக் கொடுத்திருக்கோம்.
பையன்/பொண்ணு அழுகாம ஸ்கூலுக்கு போயிடுவாங்கன்னு
நினைச்சிருப்போம். அப்படியே கவுத்து ரகளை செஞ்சு
நம்மளை, டீச்சரை ஒரு வழி ஆக்கிடுவாங்க.

அம்மாவோட கழுத்தை கட்டிக்கிட்டு தொங்கிய என்
கிளாஸ் பையன் ஞாபகத்துக்கு வர்றான். ஆரம்பப்பள்ளி
ஆசிரியைகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே
குழந்தையை முதலில் அழாமல் வகுப்பில் உட்கார
வைப்பதுதான். ஒரு குழந்தை அழுகை நிப்பாட்டிய
நேரத்தில் இன்னொன்று மூலையில் உட்கார்ந்து
அழுவதைப் பார்த்து மத்ததுக்கும் பொங்கும்.

கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகும் இந்த நிலை மாற.
அப்புறம் நாம் ஸ்கூல் கேட்கிட்ட போறவரைக்கும்தான்.
கையை ஒதறிட்டு டாடா காட்டக்கூட மறந்துட்டு
பிள்ளை ஓடிடும்.

வீட்டிலேயே நாம் குழந்தையை இந்தப் பிரிவுக்கு
தயார் படுத்த வேண்டும்.

சொல்லாதீங்க பதிவை படிச்சிருக்கீங்களா!

இதுவும் முக்கியம்:

சரி பிரிவுக்கு தயார் செய்வது எப்படின்னு பாக்கலாம்.

டே கேர் செண்டரிலோ/பள்ளியிலோ விடுவதை
ஆரம்பத்தில் குழந்தை விரும்பாது. பிரிவை தாங்க
இயலாத இந்த சுபாவம் ரொம்ப இயற்கையானது.
பெற்றோரின்  அணுகுமுறை ரொம்ப முக்கியம்.

அடிப்பதோ, திட்டுவதோ கோபப்படுவதோ சுத்தமாக
உதவாது. பொறுமை, பொறுமை, முறையாக கையாளுதல்
தான் உதவும். கீழே கொடுத்திருக்கும் முறைகள்
உளவியலாளர்களின் கருத்துக்களும் கூட. 


1. முத்த மழை பொழிந்து:
அன்னையின் அரவணைப்பு பிள்ளைக்கு தரும்
இதம் சொல்ல முடியாது. அழும் குழந்தையை
ஏதும் சொல்லமால் பக்கத்தில் இருத்தி
முத்தம் கொடுப்பது நல்லது. இப்பொழுதெல்லாம்
1 வாரம் வரை பெற்றோர்களும் வகுப்பிலேயே
உடன் இருக்க அனுமதிக்கிறார்கள்.

2. குழந்தையின் பையில் ஒரு நோட்டிலோ
அல்லது பள்ளி டயரியிலோ குடும்ப
புகைப்படம் ஒன்றை வைத்து அனுப்புவதும்
உதவுமாம். ஞாபகம் வரும் பொழுது
புகைப்படத்தை எடுத்து பார்த்து குழந்தை
கொஞ்சம் திருப்தி பட்டுக்கொள்ளும்.

3.  நல்லபிள்ளை விளையாட்டு:

நீ அழாம நல்ல பிள்ளையாய் ஸ்கூலுக்கு
ரெடியாகும் ஒவ்வொரு நாளும் பாயிண்ட்ஸ்
கொடுப்பேன், அதை வைத்து உனக்குத்
தேவையான விளையாட்டு சாமான்கள்
வாங்கிக்கொள்ளலாம், என்றோ ஹாப்பி
ஃபேஸ் சார்ட் ஒட்டி அதில் எத்தனை ஹாப்பி
ஃபேஸ் வருகிறதோ அதுக்குத் தகுந்த மாதிரி
பிள்ளை விரும்பும் சாமான் அல்லது தின்பண்டம்
என்றும் வைக்கலாம்.

4. பேசாமல் இருத்தல்:
அழும் குழந்தையோடு “டூ” விடுவதல்ல.
சில சமயம் குழந்தை அழும் பொழுது
நாம் உடன் ரியாக்ட் செய்யாமல் 10 நிமிடம்
போல நம் வேலையை அருகிலேயே
உட்கார்ந்து செய்து கொண்டிருந்தால்
தன் நடவடிக்கையை கவனிப்பார் இல்லாமல்
தானே சமாதானமாகி விடும். சில சமயம்
அழும் குழந்தையை சமாதானம் செய்கிறேன்
என்று பெற்றோர் செய்யும் ஆட்டம் அதிகமாக
இருக்கும்.

5. உறுதி மொழி:

எங்கே நம்மை அப்படியே விட்டுவிடுவார்களோ!
எனும் பயம் குழந்தைக்கு இருக்கும். அதனால்
ஸ்கூல் 11 மணிக்கு முடிஞ்சிடும், வீட்டுக்கு
வந்திடலாம், உனக்கு பிடிச்ச சாப்பாடு செஞ்சு
வெச்சுகிட்டு அம்மா ரெடியா காத்திருப்பேனாம்!/
ஸ்கூல் பெல் அடிச்சதும் வெளியே யார் இருப்பாங்கன்னு
பாரு!போன்ற  உறுதிமொழிகள் பயத்தை குறைக்கும்.

6. நேற்று என்பது வரலாறு அதைப்பற்றி பேசலாம்:
தான் சாதித்தவற்றைப் பற்றி பேசுவது குழந்தைகளுக்கு
ரொம்ப பிடிக்கும். நேத்து எவ்வளவு குட் பாயா எந்திரிச்சு
ரெடியான!, ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்ததும்
நாம பைக்ல ஒரு ரவுண்ட் கூட போனோம்ல என
பேசுவது  தான் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவோம்
என்ற எண்ணமும் நல்லபடியாக கிளம்பி போனால்
ட்ரீட் கிடைக்கும் என்பதும் புரியும்.

7.  பிள்ளை விரும்பும் பூ, பொம்மை, மிக விரும்பும்
வகை உணவு, போன்றவற்றை மறைத்துவைத்து
சர்ப்ரைஸாக கொடுக்கலாம்.

8. எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர் ரிலாக்ஸ்டாக
இருக்க வேண்டும். இந்த மாறுதலை குழந்தை புரிந்து
கொள்ளும் வரை நாம் புரிய வைக்க முயற்சி செய்து
கொண்டே இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் நம் கோபத்தையோ டென்ஷனையோ
குழந்தை மீது காட்டினால் அது நிலமையை இன்னும்
மோசமாக்கும். “அழாதே! அழுகையை நிப்பாட்டு”
போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுவது நலம்.
நம் முன்னால் ஏதும் நடவாத மாதிரி பொறுமையாக
சிரித்த முகத்துடன் இருந்தாலே போதும். குழந்தையை
பிரிகிறோமே, பிரிக்கிறோமோ என்று தேவையில்லாமல்
குழம்பாமல் நிம்மதியாக குழந்தையை பள்ளியில்
விட்டுவிட்டு வரவேண்டும்.

ஆசிரியை, பெற்றோர் இவர்களின் கூட்டு முயற்சியினால்தான்
ஒரு குழந்தையின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
பெற்றோரும் சிலவற்றைச் சொல்லிக்கொடுத்து
பிள்ளையை வளர்த்தால்தான் பள்ளியில் மேலும்
கற்க அது உதவும்.

புதுகை மாவட்டம் ராயவரம் ஒன்றியத்தைச் சேர்ந்த
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின்
பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

பள்ளி செல்ல விரும்பு
பாடம் நல்லக் கரும்பு
படித்து விட்டுத் திரும்பு
பண்ண வேண்டாம் குறும்பு;
அரும்பு போல சிரிப்பாய்
  எறும்பு போல இருப்பாய்!



3 comments:

நல்ல பதிவு. அழ. வள்ளியப்பாவின் பாடலுடன் முடித்திருப்பது அழகு.

நன்றி ராமலக்‌ஷ்மி

Nice one!.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்