பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.



(காது ,மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர் Prof .கே.கே.ராமலிங்கம் )


காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க காதினுள் உட்புகும் ஒலியானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோத வேண்டும்,ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர்களுக்கு காதின் உள்ளே நுழையும் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டெப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப் படுகிறது,இதனால் காதின் கேட்கும் திறன் பாதிப்படைகிறது,இதை இந்த வரைபடம் மூலம் தெளிவாக அறியலாம்.
ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு குறித்து :


நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ எவரானாலும் சரி வயது வேறுபாடு இன்றி காதுக்குள் வினோதமான சத்தம் கேட்கத் தொடங்கினால் சில நாட்களில் சரியாகி விடக் கூடும் என்று அதை ஒத்திப் போடுவது அபாயகரமானது.அப்படி வினோதமான சத்தம் வரக் காரணம் என்ன என்பதை காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவரை அணுகி மருத்துவர் பரிந்துரைக்கும் முழுமையான ஆய்வுகளுக்கு உட்பட்டு வினோத சப்தங்களுக்கான காரணங்களை உடனே அறிய முயற்சிக்க வேண்டும்.ஆரம்பத்தில் உரிய மருத்துவ அணுகுமுறை இல்லாமல் புறக்கணித்து விட்டு ,நாட்கள் பல கடந்த பின் கேட்கும் திறனை முழுமையாக இழக்கும் நிலை வரை காத்திருப்பது புத்திசாலித்தனம் ஆகாதே.

காதுக்குள் வினோதமான சப்தங்கள் அடிக்கடி கேட்டால் அந்த குறைபாட்டை "ஒடெஸ்லோரோசிஸ்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்தக் குறைபாடு வரக் காரணம் நடுக்காதுப்பகுதியில் காணப்படும் சிறு எலும்புகளின் வளர்ச்சியே,இந்த சிறு எலும்புகளை மருத்துவர்கள் " ஸ்டேப்ஸ்" என்கிறார்கள்.இந்த எலும்புகள் சிலருக்கு பரம்பரை மூலக்கூறுகள் காரணமாக இயல்பான வளர்ச்சியைத் தாண்டி விரைவாக வளர ஆரம்பிக்கின்றனவாம். அப்படி வளரும் எலும்புகள் காதுக்குள் உட்புகும் ஒலி நடுக்காதுப் பகுதியில் இந்த எலும்புகளால் தடுக்கப் பட்டு காது ஜவ்வில் பட்டு ஒலிக்கும் திறனை இழக்கிறது ,மேலும் இடையில் தடுக்கப் படுவதால் வினோதமான சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது.இந்த ஸ்டேப்ஸ் எலும்புகளின் வளர்ச்சியை ஆரம்பம் முதலே அறுவை சிகிச்சை முறையில் முற்றிலுமாக கட்டுப் படுத்தலாம். ஆனால் அறுவை சிகிச்சை குறித்த பயம் உள்ள நோயாளிகள் வயது வித்தியாசமின்றி அறுவை சிகிச்சையைப் புறக்கணித்து காது கேட்கும் திறனளிக்கும் மெசின்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். ஸ்டேப்ஸ் எலும்புகள் அபிரிமிதமாக வளர்ந்து விட்டால் இந்த உபகரணங்களால் யாதொரு பயனும் இல்லை.படிப்படியாக காது கேட்கும் திறனை இழப்பதை விட ஆரம்ப நிலையிலேயே அறுவை சிகிச்சை என்பதே முற்றாக பலனளிக்க வல்லது என காது,மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தக் குறைபாடு பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளையே அதிகம் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.மேலும் பெண்களுக்கு இத்தகைய குறைபாடுகள் இருக்கும் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடுபட்டாலும் கூட கர்ப்ப காலங்களில் இந்தக் குறைபாடுகள் \ தனது அறிகுறிகளை முழுதாகக் காட்டத் தொடங்கி விடுகின்றனவாம், அப்போதைக்கு வலிநிவாரணிகள் மூலம் சமாளித்தாலும் குழந்தை பிறந்த பின்பு முழு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்,இல்லா விட்டால் காலப் போக்கில் காதுகள் முற்றாக கேட்கும் திறனை இழக்கும் நிலை வரும்.

இதற்கான அறுவை சிகிச்சையை "ஸ்டேபிடெக்ட்டமி" என காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறுவை சிகிச்சை காதின் உட்புறத்தில் நடத்தப் படுவதால் வெளிப்புறம் கத்தியால் அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படும் வடுக்கள் எதுவும் தோன்ற வாய்ப்புகளே இல்லை. மேலும் அறுவை சிகிச்சையின் பின் முழுமையாக காது கேட்கும் திறனை பெறுவதற்கான உத்திரவாதம் உண்டாம்.

சென்ற சனிக்கிழமை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் கே.கே.ஆர் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவமனைக்குப் போயிருந்தோம் ,மருத்துவருக்காக காத்திருந்த நேரத்தில் வாசிக்கக் கிடைத்த தகவலே இன்றைய இடுகையானது ,பயனுள்ளதாக இருக்கக் கூடுமென எண்ணியதால் பகிர்கிறேன்.

மேலும் அங்கிருந்த ஓவியங்களில் ஒன்று மட்டும் வெகுவாக கவனத்தை ஈர்த்தது .

இறந்து விட்ட ஒரு யானையைச் சுற்றி நின்று கொண்டு அதன் அகன்ற காதுகளை ஒருவர்,நீண்ட தும்பிக்கையை ஒருவர் ,கழுத்தை(தொண்டை) ஒருவர் என மூன்று மருத்துவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இது தான் அந்த ஓவியம் .ஆக மூன்று மருத்துவர்கள் சேர்ந்து அளிக்கத்தக்க சிகிச்சையை ஒரே மருத்துவர் அளிக்கத் தகுதி அடைவது தான் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவம் போல என எண்ணிக் கொண்டேன்.

:)




http://www.kkrenthospital.org (காது மூக்கு தொண்டைக்கு சிறப்பான மருத்துவம் இங்கே கிடைக்கும் என பல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிந்துரைத்ததால் இந்த சுட்டி ,தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்)







4 comments:

நல்ல பயனுள்ள பதிவு ..ரொம்ப நன்றி எனக்கு தெரிஞ்ச எல்லோர்கிட்டேயும் இதே பத்தி சொல்லறேன் ..நன்றி

அருமையான பகிர்வுக்கு நன்றி கார்த்திகா. அனைவருக்கும் உபயோகமா இருக்கும்

Thankx Sandhya & புதுகைத் தென்றல் .

very useful informations! Thanks.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்