பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே பதிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் சிந்தனையைத் தூண்டி அறிவுத்திறனைப் பெருக்கும் முறையில் வடிவமைக்கட்டுள்ளன. ஆனால், இப்போது நாம் பரவலாக கல்வி என்பது

அறிவு என்ற கோணத்தை மீறி கல்வி என்றால் மதிப்பெண்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காலத்தின் மாற்றத்தில் இதுவும் அவசியமாகிப் போய்விட்டது.

பள்ளிகளும் சரி, பெற்றோரும் சரி....மதிப்பெண்களையே முன்னிலைப்படுத்தி, முக்கியப்படுத்திப் பார்க்கப் பழகிவிட்டோம்.

அந்தந்த வகுப்புக்கு, அந்தந்தப் பாடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளா போதிய செய்திகள் மாணவர்களிடம் பல நேரங்களில் சரியாகச் சென்று சேர்வதில்லை.

ஆசிரியரின் போதனையை இங்கே நான் குறைசொல்ல வரவில்லை. மதிப்பெண்களை முன்னிலைப்படுத்தும் காரணத்தால், முக்கியமான பல கேள்விகளுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இது சில நேரங்களில், சில பகுதிகளையே தவிர்க்கும் சூழலுக்கு மாணவர்களைத் தள்ளுகிறது.

எல்லா மாணவர்களும், எல்லா நேரமும் 100/100 மதிப்பெண்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், அவரவர் வயதுக்கேற்ற, வகுப்பிக்கேற்ற அறிவைப் பெறுவது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே மாணவர்கள் குறிப்பிட்ட கேள்வி பதில்களை மட்டுமல்லாமல், பாடத்தின் மொத்த வரிகளையும் ஒரு முறையேனும் படிக்க வேண்டியது மிகவும்
அவசியம்.

CBSE பாடத்திட்டம் எப்போதும் எந்தப் பாடத்தையும் சற்றே அதிகமான விளக்கங்களுடன் வழங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது, மாற்றியைமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது. பாடத்தின் எந்தவொரு வரியிலிருந்தும் கேள்விகள் வரக்க்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பாடத்தின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடத்தையும் வரிவிடாமல் படிப்பது எளிதான செயலல்ல.

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் என் மகளுக்கு உதவுவதற்காக, சமூக அறிவியல், மற்றும் அறிவியல் பாடத்தின் ஒவ்வொரு வரியிலிருந்தும் கூடுமான வரையில் எதையும் விட்டுவிடாமல் கேள்விகள் தயாரித்து வருகிறேன். அதை வலையில் பதிந்து வைக்கத் தோன்றியது.

 புதிய வலைப்பு ஒன்றில் பதிந்துள்ளேன்.

http://malar-studyroom.blogspot.com/

ஒன்பதாம் வகுப்பு (CBSE) இரண்டாம் பருவத்திற்கான அறிவியல், சமூக அறிவியல் பாடக் கேள்விகள் இதில் இடம்பெறும்.

3 comments:

நன்றி பாசமலர்,

என் மகனுக்கும் உதவியாய் இருக்கும்

புதிய வலைப்பூ மிக நல்ல முயற்சி.

வாழ்த்துக்கள் பாசமலர்!

முதல் முறை வருகிறேன்.
உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்