76. குழந்தையின் பொம்மைகளை ஆராயுங்கள்
அ. பொம்மையிலிருந்து எதாவது கற்றுக்கொள்ள இயலுமா
ஆ. பொமையை குழந்தை பயன்படுத்துகிறாளா
இ. பொம்மையின் அனைத்து பாகங்களும் சரியாக உள்ளதா
ஈ. பொம்மை குழந்தைக்குப் பாதுகாப்பான நிலையில் உள்ளதா (கடையில் புதிய பொம்மை வாங்கும்போதும் இப்படி ஆராயலாமே)
77. குழந்தையால் செய்யக்கூடிய வேலையை நீங்கள் செய்து கொடுக்காதீர்கள்.
78. உடல் பயன்பாட்டை ஊக்குவியுங்கள். விளையாட அனுமதியுங்கள்.
79. அமைதியாக பேசாமல் அமர்ந்திருப்பதைப் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நீங்களும் அவர்களுடன் தியானம் செய்யுங்கள்.
80. குழந்தைகளுக்கு அவர்களது பிறந்த தேதி, இரத்த வகை, தொலைபேசி எண் போன்ற முக்கிய குறிப்புகளை சொல்லிக்கொடுங்கள்.
81. பள்ளியிலிருந்து அனுப்பப்படும் அனைத்து குறிப்புகளையும் படித்துப் பின்பற்றவும்.
82. குழந்தையை பாதித்துள்ள விசயம் பற்றி அவர்களது ஆசிரியருக்கு தெரிவியுங்கள். உதாரணத்திற்கு குழந்தை தூங்காமல் இருந்தது, உடல் நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்தது, வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தது, பெற்றோர்கள் வெளியூருக்கு சென்றிருப்பது முதலியன. ஏனெனில் பள்ளியில் குழந்தையின் நடத்தையில் உள்ள மாற்றத்தை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள.
83. மண்ணில் குழி பறிக்கச் சொல்லுங்கள். அசுத்தமாவதைப் பற்றி சிறிது கூட தயக்கம் கொள்ளக்கூடாது (அந்த சிறிது நேரத்திற்கு மட்டும்).
84. நல்ல செயலுக்குப் பரிசுகள் வழங்காதீர்கள். அவர்களது அனுபவமே அல்லது மன நிறைவே அவர்களுக்கு பரிசாக அமைய வேண்டும்.
85. குழந்தைகளிடன் மற்றவர்கள் பேசும்போது நீங்கள் தலையிடாதீர்கள். குழந்தைகளால் பதில் சொல்ல முடியாத நேரங்களில் மட்டும் நீங்கள் தலையிட்டால் போதும்.
86. நீங்கள் தவறு செய்கிறபோது குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.
87. குழந்தைகளுக்குக் கற்றுத் தர நினைக்கும்போது, அவர்களால் எதை புரிந்துகொள்ள முடியுமோ அதை மட்டும் கற்றுத் தாருங்கள்.
88. குடும்பத்தில் அனைவரும் சேர்ந்த்து பந்து விளையாடலாம்.
89. குழந்தைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். மேலும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.
90. எப்பொழுதும் உண்மையே பேசுங்கள். (ரொம்பக் கஷ்டம்)
In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)
தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்
vandhaan vadivelan
11 months ago
2 comments:
ellavatrayum porumayaga moliyakkam seythu pottatharkaga specail valthukkal.
நல்ல பகிர்தல் விசயக்குமார். நன்றி. தென்றல் கூறியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்.
Post a Comment