சென்ற டிசம்பரில் நான் இந்தியா போன போது நல்ல மழைகாலம். ஊரில் வெள்ளம். அப்போது காலை அபி வழக்கமா பள்ளி போகும் போது சாப்பிட அடம். எனக்கு கோவம் வந்து லைட்டா திட்டினேன். உடனே அவளுக்கு நல்ல கோவம் வந்துவிட்டது. "சாப்பிட சொல்லி மாத்திரம் திட்டுறீங்க. ஆனா எனக்கு என்ன என்ன ஆசை இருக்கு தெரியுமா? அதை எல்லாம் கேட்டீங்களா ஒரு நாளாவது. நீங்களா கேஎட்[ஈங்கன்னு பார்த்தேன். ஒரு வார்த்தை கூட கேட்கலை நீங்க"ன்னு பொறிஞ்சு தள்ளீட்டா.
எனக்கு என் தப்பு அப்பதான் உறைத்தது.சிறு வயதில் இப்படியாக நினைத்தது உண்டு. அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக பல விஷயங்கள் நிராகரிக்க பட்டிருக்கின்றன. அதே நிலை என் பசங்களுக்கு வர கூடாது என அப்போதே நினைத்தேன். ஆனால் இப்படி அபி மனசுக்குள்ள இப்படி ஒரு ஆசைகள் இப்பதை கூட கண்டுக்காம இருந்து விட்டேனே என நினைத்து ஒரு பேப்பர் பேனாவை அவள் கையில் கொடுத்து "உனக்கு என்ன என்ன வேண்டுமோ அதை எல்லாம் எழுது" என்றான். அதை வாங்கிகிட்டு தன் ரூமிற்கு போய் விட்டா. பின்னே எழுதினாளா இல்லையா என தெரியாது. ஆட்டோ வந்தது பள்ளிக்கு போயிட்டா.
பின்னே பள்ளிக்கு எதிர் கடையில் இருந்து அவ அம்மாவுக்கு போன் செய்தா. அவளுடைய மேசை டிராயரில் அந்த லிஸ்ட் இருப்பதாக சொன்னா. நான் போய் அந்த லிஸ்ட் எடுத்து பார்த்தேன்.
1. லேடி பேர்டு சைக்கிள் (சிகப்பு கலர்)
2. என் யூனிபார்ம் அளவு தொட தொடனு இருக்கு. அம்மா இதை வைத்து இந்த வருஷத்தை ஓட்டு என்று சொல்லிட்டாங்க. அதனால வேற யூனிபார்ம் 2 செட். என சரியான அளவு சுடிதார் என் கப்போர்ட்ல் மேலேயே வச்சிருக்கேன்.
3. என் சைஸ் ஷூ (ஸ்போர்ட்ஸ் ஷு)
4. வெள்ளை கலர் சாக்ஸ் - 3 செட்
5. பியர்லெஸ் தியேட்டர் முறுக்கு 1 பாக்கெட்
6. தம்பிக்கு ஒரு நல்ல ஷூ வித் சாக்ஸ்(குளிருக்கு போடுவது போல)
என லிஸ்ட் இருந்தது. அப்போது காலை 8.30 குளித்து முடித்து சாப்பிட்டேன். ஒரு 9.30 மணிகு ஒரு குடையை எடுத்துகிட்டு, அள்வு சுடிதாரை ஒரு மஞ்சமையில் சுத்திகிட்டு நகரின் மழை நீரில் வேஷ்ட்டியை மடித்து கட்டி கொண்டு பெரிய ராஜன் தோட்டம் வழியாக முதலில் மணிகூண்டு காந்திஜி ரோட்டின் ஜெகந்நாதன் சைக்கிள் கம்பனிக்கு வந்தேன். அது தான் மயிலாடுதுறையில் பெரிய சைக்கிள் கம்பனி. ஷோ ரூமில் ஒரு சைக்கிள் லேடிபேர்டு சிகப்பு கலர் என்னை பார்த்து சிரித்தது. உள்ளே பலபேர் சைக்கிள் கோர்த்துகிட்டு இருந்தாங்க. என்ன விலைன்னு கேட்டேன். 3030 ரூபாய்ன்னு சொன்னார். சரி குடுங்கனு பணம் நீட்டினேன்.
இல்லப்பா அது கோர்த்து 6 மாசம் ஆகுது. வேற கோக்க சொல்றேன்ன்னு சொல்லி செந்தில் இங்க வாடான்னு கடை பையனை அழைத்தார். அந்த பையன் எங்க தெருதான். "வாங்க அண்ணே எப்ப வந்தீங்க. பாப்பாவுக்கு சைகிளா சூப்பரா கோர்த்து தறேன். அண்ணே எனக்கு ஒரு விசா அடிச்சு கூட்டிக்க கூடாதா" வழக்கமான 3 ம் கட்ட மக்களின் டயலாக். நான் கேட்டேன் "சரி பாஸ்போட் வச்சிருகியா" பட்டுன்னு பதில் வந்துச்சு "இல்லை நீங்க விசா அடிச்சுட்டு ஒரு போனை போடுங்க நான் திருச்சிக்கு போய் எடுத்துட்டு அந்த ஏற்போர்ட்ல இருந்து வந்துடுவேன் அண்ணே" எனக்கு பகுன்னு ஆகிடுச்சு.
சரி நான் கோர்த்து வைக்கிறேன். நீங்க எங்கயாவது போயிட்டு 1 மணி நேரம் கழிச்சு வாங்கன்னு சொன்னவுடன் எதிரே இருக்கும் சீமாட்டிக்கு போனேன். வாசலில் டைலர் மிஷினை துடைட்து கொண்டிருந்தார். அவரிடம் "அய்யா நான் உள்ளே போய் 2 செட் சுடிதார் துணி எடுத்து வருவேன் 1 மணி நேரத்தில் தைத்து தரமுடியுமா என கேட்க அவரு "2 மணி நேரம் ஆகும் தம்பின்னு சொல்லிட்டார். உள்ளே போய் பள்ளியின் பெயரை சொல்லி வாங்கிகிட்டு வந்து அளவு சுடிதாரையும் கொடுத்து விட்டு அங்கிருந்து 10 கடை தள்ளி இருக்கும் அப்சரா வந்தேன். அங்கே எல்லாரும் நல்ல பழக்கம் 30 வருஷ பழக்கம்.
அபிக்கு ஸ்போர்ட்ஸ் ஷு சாக்ஸ், தம்பிக்கு ஷூ எல்லாம் வாங்கிகிட்டு நேரா வண்டிகார தெரு நெரிசல் வழியா பியர்லெஸ் தியேட்டர் போய் முறுக்கு, கடலைமிட்டாய் வாங்கிகிட்டு (இத்தனைக்கு மழை நல்லா பெய்யுது) எல்லாம் நடராஜா சர்வீஸ் தான் திரும்ப தியேட்டரில் இருந்து கச்சேரி ரோடு வழியாக "பாண்டியன் சாமில் வந்து என் நண்பன் சங்கரிடம் 1 மணி நேரம் மொக்கை போட்ட பின் அவனே வண்டியிலே திரும்ப ஜெகந்நாதன் சைகிள் கடைல விட்டு போனான். தெரு பையன் என்பதீல் எக்ஸ்ராவா எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் போட்டிந்தான்.
எடுத்து கொண்டு வண்டிகாரதெரு மாரியம்மன் கோவில் பூக்கடையிலே அதுக்கு பொட்டு இட்டு, மாலை மாதிரு பூ போட்டு பூசை போட்டு விட்டு வந்து சுடிதாரை வாங்கிகிட்டு ஜெகஜோதியா வீட்டுக்கு வந்தேன். அப்போதும் மழை.
வந்து பெல் அடித்ததும் நட்டு தான் குடுகுடுன்னு ஓடி வந்தான். அந்த சைக்கிளை பார்த்ததும் அவன் அடைந்த சந்தோஷம் என்னால் எழுத வார்த்தை இல்லை. அபிக்கு 3 வயதா இருகும் போது ஒரு சைக்கிள் வாங்கி துபாயில் இருந்து வாங்கி குடுத்தேன். அது வாசலில் கட்டி போட்டிருப்பா. அவளின் இப்போதைய உயரத்துக்கு ஓட்ட முடியாது. அதிலே பலதடவை நட்டு ஏற முயன்று பல அடி பட்டிருக்கான். அதை "அய்க்கிள்"னு தான் சொலுவான். சரி அக்காவின் சைக்கிள அய்கிள்ன்னு சொல்றான் அப்படின்னு விட்டுட்டேன்.
இந்த புது சைக்கிளை பார்த்த உடனே "அய்க்கிள் அய்க்கிள்"ன்னு கத்திகிட்டே கிச்சன் போய் அவன் அம்மா புடவையை பிடிச்சு இழுத்து கிட்டு வந்து "அம்மா அய்ய்கிள் அய்க்கிள்"ன்னு காமிக்கிறான். கீழே புரண்டு விழுந்து சிரிக்கிறான். பெடலை வந்து சுத்துறான். சைக்கிளை வீட்டின் உள்ளே சாமிரூம் கிட்ட கொண்டு வந்து நிப்பாட்டி கிருஷ்ணா தலைமைல அங்க ஒரு பூஜை.
பின்னே அப்படியே அதை அலேக்காக தூக்கிகிட்டு மாடி ஏறினேன். நட்டுவும் தாவி தாவி ஏறுகிறான். மாடி ரூம்ல கொண்டு போய் வைக்கிறேன். பின்ன கிருஷ்ணா அந்த சுடிதார் ஷு எல்லாம் எடுத்து கொண்டு மேலே நட்டுவையும் தூக்கிகிட்ட்டு பின்னாலே வருது. எல்லாத்தையும் வைத்து ஒரு போர்வை போட்டு மூடினேன். பின்னே கீழே வந்து சாப்பிட்டு மதிய தூக்கம் போடும் போது 2 மணி. அபி 3 மணிக்கு வருவா. வந்தவுடன் அவ இரவு மாடிக்கு படிக்க போகும் போது ஆச்சர்ய படட்டும் என நினைத்தேன். அந்த மதிய தூக்கத்தின் போது நட்டுவும் தூளியிலே படுத்து தூங்கிடுவான். சரியா அபி ஆட்டோ நகர் முனைக்கு வரும் சத்தம் கேட்ட உடனே எழுந்து கேட்டுக்கு போய் அவ புத்தக மூடையை பிடித்து இழுத்து வந்து ஏகப்பட்ட கொஞ்சல் நடக்கும் அவன் அக்கா கிட்ட.
ஆனா அன்று தூங்கவே இல்லை கேட்டை பிடிச்சுகிட்டே நிக்கிறான். உள்ளே வர மாட்டேன்னு அடம். அபி வந்தா அவ்வளவுதான். அவன் ரியாக்ஷன் இப்பவும் என் மனசிலே வீடியோவா ஓடுது. வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. அவ புத்தக மூட்டையை சட்டை பண்ணலை அபியை இழுத்துகிட்டு மாடிகு இழுக்குறான். அக்கா அய்க்கிள் அய்க்கிள்னு சத்தம் வேற. தவ்வி தவ்வி ஏறுறான். பின்னாலயே அபியும் ஏறுறா. அந்த கண்கொள்ளா காட்சியை காண நானும் கிருஷ்ணாவும் மேலே போனோம்.
அங்கே போய் அந்த போர்வையை இழுத்து அக்கா அய்க்கிள் ன்னு புரண்டு புரண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான். (இதான் விழுந்து விழுந்து சிரிப்பதா). நான் அப்படியே அபி ரியாக்ஷனை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன். "போய் பாரும்மா" என கிருஷ்ணா சொல்கிறது. காலை 1 ஸ்டெப் எடுத்து முன்னே வைக்கிறாள். பின்னே பின்னால் இழுத்து கொண்டாள். என்னிடம் பேசவில்லை. பின்னே அதை தொட கூட இல்லை. அப்படியே கீழே போய்விட்டாள். என் மீது கோவத்தில் இருக்காலாம்.
பின்பு மேலேயே போகலை. எப்போதும் இரவு படிக்க மாடிக்கு போவது கூட அன்று போகலை. சீக்கிரமே என் கூட படுத்துட்டா. நான் தூங்கிட்டேன். இரவு 11 மணிக்கு நான் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த போது அபி என்னை பார்த்துகிட்டு உட்காந்து இருந்தா அந்த இரவிலே. நான் முழித்து என்னம்மா னு கேட்டேன்.
"அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா"ன்னு சொல்லிட்டு கண்ணை கசக்க ஆரம்பிச்சுட்டா. நான் எழுந்து வாடா மாடிக்கு போய் சைக்கிளை பார்க்கலாம் என கூட்டி போனேன். ஆசை ஆசையா சைக்கிளை கட்டி பிடிச்சுகிட்டா. அப்பா சுடிதாரை போட்டு பார்க்கிறேன்ன்னு போட்டு பார்த்தா. ஷூ வை போட்டு பார்த்தா. கடலை மிட்டாய் சாப்பிட்டா, நட்டுவின் ஷூவை எடுத்துகிட்டு தூங்கிகிட்டு இருந்த நட்டுக்குக்கு போட்டு அழகு பார்த்தா. அப்பா இப்பவே ஓட்டனும் போல இருக்குப்பா என சொல்லியது அந்த 11 மணிக்கு (இரவு) கீழீ இறக்கினேன். மழை விட்டு இருந்தது. நகரில் லைட் இல்லை. அவளை அழைச்சுகிட்டு ராஜேஸ்வரி நகர் (நல்ல ரோடும் லைட்டும் இருக்கும்) சைக்கிள் ஓட்டின்னா. அவளின் சந்தோஷத்தை விட நான் சந்தோஷ பட்டனா என்னை விட அவள் அதிகம் சந்தொஷ பட்ட்டாளா என பாலமன் ஆப்பையா பட்டி மன்றம் நடத்தினா கூட தீர்ப்பு சொல்ல முடியாது.
இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தைகள் ஆசைப்பட்ட நேரத்தில் வாங்கி கொடுங்க. இல்லாவிடில் அது அவர்கள் வாழ்க்கையில் தீராத வடுவாகவே ஆகி இருக்கும். பிறகாலத்தில் அவர்கள் சம்பாதிக்கும் போது நினைத்தா கூட அந்த விஷயங்களை நடத்தி கொள்ள முடியாது.
நான் அப்போதே சொன்னேன் "அபி உனக்கு எப்போது எது தேவையோ அதை கேட்டுவிடு. தயங்காதே."
10 நாள் முன்ன போன் செய்யும் போது "அப்பா நான் இனி ஆட்டோவிலே போகலை. எனக்கு ஆட்டோகாரர் எல்லா பசங்கலையும் இறக்கி விட்டு விட்டு கடைசியா தான் நம்ம நகர்க்கு வருது, அது போல காலை முதல் ஆளா என்னை எடுக்கிறார். கிட்ட தட்ட 2 மணி நேரம் எனக்கு ஆட்ட்டோ விலே போகுது. அதனால நான் சைக்கிள்ல போகிறேன்"
"சரி அப்படின்னு சொல்லிட்டேன். இப்ப அபி பள்ளிக்கு சைக்கிள்ல போறா சந்தோஷமா!
போட்டோ உபயம் கூகிள் இமேஜ் தேடல்