ஒன்றரை வருடங்களாகிறது இந்த வலைப்பூவைத்துவங்கி.
பெற்றோர்கள் சேர்ந்து என்ன செய்யலாம் என்று
விவாதித்து, பகிர்ந்து கொள்ளும் ஒரு தளம்தான் இது.
எங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் இது.
பதிவர் ஜமால் இந்த விருதை எங்கள் வலைப்பூவிற்கு
வழங்கியிருக்கிறார்.
நன்றி ஜமால்..
ஆறு பேருக்கு இந்த விருதை வழங்க வேண்டும்.
தொடர் பதிவு போல் தோன்றினாலும் ஊக்கமளிக்க
இதைவிட சிறந்த வழி வேறு ஏதுமில்லை என
நினைக்கிறேன்.
1. எண்ணங்கள் இனியவை என்று பதியும் ஜீவ்ஸ்.
இவர் கேமிரா கலைஞராக அறியப்படுபவர்.
இவர் ஆரம்பித்து வைத்ததுதான் தொடர்கதையாக
திருக்குறள் கதைகள். பேரண்ட்ஸ் கிளப் முகப்பில்
காணலாம் அந்தத் தொகுப்பை.
2. நாம் பார்த்த சினிமாவைப்பற்றி பதிவிடுவோம்.
சினிமா விமர்சனத்திற்காகவே ஒரு வலைப்பூவை
வைத்துக்கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சியாருக்கு
அடுத்த விருது.ஆங்கில படங்களுக்கு இவரது
விமர்சனம் அந்த படத்தை உடனடியாக
பார்த்துவிடமாட்டோமா என ஏங்க வைக்கும்.
3. இந்தக்குட்டிப்பொண்ணோட வலைப்பூவும் நல்லா
இருக்கும். நம்ப அருணாவோட மகள் வைஷ்ணவியின்
4. கார்பரேட் கம்பர் நர்சிம் அவர்களுக்கு இந்த விருது.
இவரைப்பற்றி சொல்லவே வேண்டாம். பூக்கடைக்கு
விளம்பரம் தேவையில்லை.
5.வலையுலகத்துக்கு ஒரு டீச்சர்னா அது துளசி டீச்சர்தான்
அவர்களுக்கு இந்த விருது.டீச்சரைப்பத்தி தெரியாதவங்க இல்லை.
6. வலைச்சரம். இது வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில்
குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
இதைத் துவக்கி வைத்த சிந்தாநதி தற்போது நம்மிடையே இல்லை.
வலைச்சரத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமானவர்கள் பலர்.
வலைச்சரத்துக்கு இந்த விருது கண்டிப்பாய் மின்னும் மணிமகுடத்தில்
இன்னொரு கல்தான்.
வாழ்த்துக்கள்
பேரண்ட்ஸ் கிளப் சார்பாக
புதுகைத் தென்றல்
குறள் வழிக்கதைகள்
5 years ago