பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Showing posts with label வண்ணத்துபூச்சியார். Show all posts
Showing posts with label வண்ணத்துபூச்சியார். Show all posts





பிள்ளைகளை அதிகளவில் அடித்தால் அவர்களின் அறிவுக்கூர்மை மழுங்கி விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை... குத்துதான். படிக்கவில்லையா? சொன்ன பேச்சு கேட்கவில்லையா? தலையில் நாலு குட்டு...! முதுகுல நாலு குத்து...!! பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் கொடுக்கும் ராஜ வைத்தியம் இதுதான். ஆனால், பெற்றோரின் இந்த தண்டனை மனப்பான்மையால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே பழாகிவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.


நியூ ஹம்ஷையர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள் என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிய வந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.


நன்றி: சங்கமம்



வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு.

காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று குழந்தைகளுக்கு விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...


அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.


அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.


பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.


சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.


சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.


எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.


உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.


எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.


எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
குழந்தைகள் மட்டுமல்ல அனைவரும் கடைபிடிக்க வேண்டியவையே.
நன்றி: வெப்துனியா



பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரதநாடு என்றார் பாரதியார்.


ஆம்... விஞ்ஞான வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் அதிவேக முன்னேற்றம் கண்ட மேலை நாடுகள் கூட நம் பாரத நாட்டை கண்டு பொறாமைப்படக் காரணம் இந்தியாவின் தொழில் வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ அல்ல.. நம் நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும்தான்..

கூட்டுக்குடும்ப அமைப்பு, கணவன் மனைவி என்ற கண்ணியமான பந்தம், கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைதான் அவர்களை ஈர்த்தது. அவர்களின் எந்திரமயமான வாழ்க்கை, நிலையற்ற குடும்ப அமைப்பு, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை ... இப்படி வாழ்ந்துவந்த அவர்கள் நம் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்க்கை முறையை இந்திய கலாச்சாரத்தைப் போல் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.


நம் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழி, இனம் வாழ்க்கை முறை போன்றவற்றால் மாறுபட்டாலும், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் இன்று காலம் மாற மாற இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல்.. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய நாகரீகத்தைக் கடைப் பிடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.


கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து கொண்டு இருக்கின்றன. பொருளாதாரத் தேவை நெருக்கடி, அவர்களின் வாழ்வை சீரழித்துக்கொண்டு இருக்கின்றது. கணவன், மனைவி, குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்த அவர்களின் இனிமையான வாழ்வு இன்று நீதிமன்றங்களின் வாசலில் காவல் காத்து நிற்கின்றது. இந்தியாவில் தற்போது விவாகரத்து அதிகரித்துள்ளது. குடும்ப நீதி மன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் இந்த அவலநிலை அதிகரித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 15 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.இப்படி விவாகரத்துக் கோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்ற பாமரர்கள் அல்ல... நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான்...ஒருபக்கம் கையில் சிறிய குழந்தையுடன் பெண், எதிரேஅந்த பெண்ணின் கணவனும் அவனது பெற்றோரும் விவாகரத்து கோரி..திருமணமாகி இரண்டு மாதமே ஆன தம்பதிகள் இன்னொரு பக்கம்.. அதுமட்டுமின்றி,திருமணமாகி பல ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த 40, 45 வயது மதிக்கத்தக்க தம்பதிகள்...ஒருவரை ஒருவர் காதலித்து புரிந்து கொண்டு திருமணம் செய்துகொண்டவாகள் கூட இப்படி விவாகரத்து கோரி நீதி மன்றங்களின் வாசலில் நிற்கின்றனர்...


பத்திரிக்கை அடித்து மண்டபம் பிடித்து பெரும்பொருட்கள் செலவில் சொந்த பந்தங்கள் முன்னிலையில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற திருமணங்கள் கூட இன்று விவாகரத்து கேட்டு நிற்கின்றன..


இப்படி பாரபட்சமின்றி அனைத்து வகையினரும் தங்கள் வாழ்க்கையில் இப்படிப் பட்ட முடிவு எடுக்க காரணம் என்ன..?திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்று சொல்வார்கள். அந்த சொர்க்கமான வாழ்வு இவர்களுக்கு நரகமானது ஏன்..?இந்த நிலை பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரவி வருகின்றது.


ஆண் பெண் இருவரும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் விரைவாக முன்னேறிக் கொண்டு வருவது பெருமைக்குரிய விஷயம்.அவர்கள் அதீத வளர்ச்சியின் இடையே அவர்கள் வாழ்வில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளால் அவர்களது வாழ்க்கை பெரும் வகையில் பாதிக்கப்படுவதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.மண முறிவிற்கான அடிப்படைக் காரணம் ·


ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வை ஆரம்பிக்கின்றனர். இந்த எதிர் பார்ப்புகள், கனவுகள் சின்னச்சின்ன பிரச்சனைகளால் சிதைந்து போகும்போது ஒருவருக் கொருவர் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் விவாகரத்து என்ற அவசர முடிவை எடுக்கின்றனர்.· சிலர் ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு அது கிடைக்காத போது தங்கள் எண்ணப்படி விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இந்த முடிவை எடுக்கின்றனர்.


ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததாலும், சந்தேக எண்ணங்களாலும் பல குடும்பங்கள் பிரிகின்றன. · கணவன் மனைவியிடையே தாம்பத்திய உறவு சிக்கலால் விவாகரத்து கோருகின்றனர்.இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் மனைவி தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமல் போகிறது.


உணர்வுகளை மட்டுமல்லாமல் அவர்களிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளைக்கூட ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாகின்றன. மேலும் பொருளாதாரத்தில் இருவரும் சமமாக இருப்பதால் உன்னை நம்பி நான் இல்லை என்று மனதளவில் ஈகோ தன்மை வந்து தங்கள் பிரச்சனையை பெரியவர்களிடம் கூட கூறாமல் தங்களுக்குள்ளேயே பிரிவு என்று ஒரு முடிவை எடுக்கின்றனர்.


முன்பெல்லாம் கணவன் மனைவியிடையே பிரச்சனை வந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசி சமாதானம் செய்வார்கள். மீறிப்போனால் ஊர் பெரியவர்கள் சேர்ந்து அறிவுரை கூறி சமாதானம் செய்து சேர்த்து வைப்பார்கள். மணமுறிவு ஏற்பட்டால் அது குடும்பத்திற்கு இழுக்கு என்று நினைப்பார்கள். ஆனால் இன்று நிலைமையோ வேறு. இதற்கு கூட்டுக்குடும்ப சிதைவும் ஒரு காரணமாகிறது.கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.


ஒருவர் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.கணவன் மனைவி இருவரிடையே மூன்றாவது நபர் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தின் அந்தரங்க விசயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.கணவன் மனைவி குடும்பத்தாரைப் பற்றியும், மனைவி கணவன் குடும்பத்தாரைப் பற்றியும் கிண்டலோ, தரக்குறைவாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அன்பாக, அனுசரணையாக ஒருவருக் கொருவர் நடந்துகொள்ள வேண்டும். நகைச்சுவை உணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


கணவன் மனைவி ஒருநாளைக்கு நான்கு முறையாவது அன்பாக கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தழுவும்போது உடலும், மனமும் புத்துணர்வு பெறுவதுடன் குதூகலத்துடன் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர்.கணவன் மனைவி உறவு என்பது உடலுறவு மட்டும் கிடையாது. அதற்கும் மேலாக பல விஷயங்கள் உள்ளன. உடல் ரீதியான பிரச்சனை ஏற்பட்டால் இருவரும் கலந்து பேசி அதற்கான மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம்.


கணவன் மனைவியிடையே அன்பு ஒன்று மட்டுமே இருந்தால் அந்த வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பு இருக்காது. சின்னச் சின்ன ஊடலும் கூடலும் தான் வாழ்வில் ரசனை சேர்க்கும். கணவன் மனைவி இருவரிடையே கோபம் வரலாம் ஆனால் அந்த கோபம் வெறுப்பாக மாறிவிடக்கூடாது. வெறுப்பு பிரிவை உண்டாக்கிவிடும். அவசர கதியில் தவறான முடிவைத் தேடும் தம்பதியரே..சற்று உங்களைச் சார்ந்தவரைகளையும் நினைத்துப் பாருங்கள்ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மண முறிவு ஏற்பட்டால் அது அந்த குடும்பத்தை வெகுவாக பாதிக்கும். அந்த குடும்பத்தில் பிறந்த மற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உங்கள் நடவடிக்கை ஒரு தடைக்கல்லாகக் கூட அமையலாம்..


வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்வையகம் இதுதானடா...


என்ற சினிமா பாடல் ஒன்றைக் கேட்டிருப்பீர்கள்.ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அவரைப் பற்றி அப்படி பொருள் சேர்த்தார் இப்படி பொருள் சேர்த்தார் என்று அவதூறாகப் பேசுவர்...சிறப்பாக வாழ்ந்தாலே இப்படியென்றால்..ஒருவர் வாழ்க்கை சீழிந்தால் அவரின் நிலை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்..உங்கள் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள்...


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒவையார். ஒரு குழந்தை நன்கு வளர வேண்டுமானால் அந்த குடும்பத்தில் அன்பான, அமைதியான சூழ்நிலையும், அணுசரணையான பேச்சும், அறிவார்ந்த வழிகாட்டலும் மிகவும் தேவை. அதைத் தரவேண்டிய பெற்றோர்களே ஆளுக்கொரு திசையில் இருந்தால் எதையுமே பெற முடியாத அந்த குழந்தையின் தளிர் மனது எவ்வளவு வேதனை அடையும்...


அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்....அன்புக்கு ஏங்கும் அந்த குழந்தைகள் தவறான பாதையில் செல்லக்கூட வாய்ப்புகள் அதிகம். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நீங்களே அழிக்கலாமா?


ஒருமுறைதான் பிறக்கின்றோம். எங்கோ பிறந்து நம்முடன் வாழ்வில் சேரும் துணையை அன்பாக அரவணைத்து இந்த வாழ்க்கைக் கடலைக் கடக்கலாம் அல்லவா?


வேண்டாமே... விவாகரத்து...



டிஸ்கி 1 : நன்றி நக்கீரன்.
டிஸ்கி 2 : சாப்ட்வேர் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் கம்பெனியில் வேலை பார்க்கும் அந்த பெண்ணுக்கும் ( Age: 23 )மிகப்பெரிய பல நாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அந்த பையனுக்கும் { Age: 27 } சென்ற வருடம் மிக விமர்சையாக திருமணம் நடந்தது. நேற்று அந்த பெண் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்தி கேட்டு துடித்து போனேன்.


மகிழ்ச்சியெனில் மத்தாப்பாய் சிரிக்கிறபோதும் ... துன்பமெனில் அடைமழையாய் கொட்டித்தீர்க்கிற மழலையின் மனசு வேண்டும்...
இறந்த கால நினைவுகளில் எதிர்கால திட்டங்களில் நிகழ்காலத்தை தொலைக்காத பிள்ளையின் வாழ்வு வேண்டும்.....

- சாக்ரடீஸ்.




குடும்பம் என்ற கூட்டில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யனமான உணர்வுகள். அதுவும் குழந்தைகளுடனான உலகம் சற்றே வித்தியாசமானது. மிகவும் மகிழ்ச்சியானது , கவலையில்லாதது , வேடிக்கைகளும் வினோதங்களும் நிறைந்தது.



அங்கும் பொறாமை, கோபம், ஏக்கம், துக்கம் உண்டு அதன் ஆயுள் குறைவு , மகிழ்ச்சி மட்டுமே அங்கு சாகா வரம் பெற்றது. அப்படியொரு மகிழ்ச்சியான அனுபவத்தின் ஊடே ஒரு ஏமாற்றமும் கவலையும் கொண்ட சிறு பெண்ணின் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட உணர்வுகளே
" The White Balloon "



ஈரானிய புத்தாண்ட்டு கொண்டாட்டங்களுக்காக கடை வீதியில் பல வித பொருட்களையும் புதிய உடைகளையும் வாங்கி கொண்டு வீடு வந்து சேருகிறார்கள் ரசியாவும் அவளது தாயும். தான் வெகு நாளாக கடை வீதியில் பார்த்து வைத்திருக்கும் அழகிய குண்டு தங்க மீன் வேண்டும் என்று சினகி கொண்டே எதையும் ரசிக்காமல் கூடவே வருகிறாள் ரசியா.



ஏற்கனவே வீட்டிலுள்ள தொட்டியில் வண்ண மீன்கள் உள்ளதென்றும் இப்போது 100 ரூபாய்க்கு மீன் வாங்கி செலவழிக்க வேண்டாமே, இருப்பது போதும் என்கிறாள் தாய். ஆனாலும் அதெல்லாம் விட அந்த குண்டு மீன் தான் தனக்கு பிடித்ததென்றும் அது தண்ணீரில் நீந்தும் போது உடலசைப்பில் டான்ஸ் ஆடுவது போலுள்ளதென்று அடம் பிடிக்கிறாள் ரசியா.




ஏறகனவே நிறைய பணம் செலவழித்து விட்டதாகவும் புத்தாண்டிற்கு வீட்டிற்கு வருபவர்களை உபசரிக்கவும் பரிசு பொருட்கள் வாங்க மட்டுமே சிறிது பணம் உள்ளதென்றும் கூறுகிறாள் தாய். தன் அண்ணன் அலியிடமும் முறையிட்டு அழுகிறாள் ரசியா. தங்கை மீதுள்ள பாசத்தால் அவள் அழுவதை பொறுக்க முடியாமல் தாயிடன் சென்று குழைந்து பேசி தாயை சம்மதிக்க வைக்கிறான் அலி.




தாயும் இப்போது சில்லறை காசில்லை என்றும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டாக உள்ளதென்றும், சிறிது நேரம் கிடைத்ததும் மாற்றி தருவதாக சொல்கிறாள் தாய். தாயின் சம்மதம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் வண்ண மீனின் விலை 100 ரூபாய் என்றும் தானே கடைக்கு சென்று வாங்கி கொண்டு மீதி பணத்தை கொண்டு வருவதாக சொல்லி ஒட்டம் பிடிக்கிறாள் ரசியா.



“ பணத்தை தொலைத்து விடுவாய்” பொறுமையாய் இரு.. நானும் வருகிறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் 500 ரூபாய் நோட்டுடனும் மீன் வாங்க கண்ணாடி குடுவையுடனும் தெருக்கோடியை கடந்து விட்டாள் ரசியா.



போகும் வழியில் பாம்பு வித்தைகாட்டி கூட்டம் சேர்ந்திருக்க எட்டி பார்க்கிறாள் ரசியா. தந்திரமாய் பேசி பணத்தை அபகரிக்கிறான் வித்தை காரன். பணத்தை திருப்பி கொடுக்குமாறு அழுது புலம்ப தொடங்குகிறாள் ரசியா. அவள் அழுகையை பார்த்து இரக்கப்பட்டு பணத்தை திருப்பியும் தந்து விடுகிறான்.



பணத்தை குடுவையில் போட்டு கொண்டு பணத்தை மீட்ட மகிழ்ச்சியில் மார்க்கெட் பகுதியை நோக்கி விரைந்து ஒடுகிறாள் ரசியா. வண்ண மீன் விற்கும் கடையையும் அடைகிறாள். ஆனால் அவள் பார்த்து வைத்திருந்த குண்டு வண்ண மீன் 150 ரூபாய் என்றும் 100 ரூபாய்க்கு சிறிய மீன் மட்டுமே தர முடியும் என்கிறார் கடைக்காரர். தன்க்கு அதே மீன் 100 ரூபாய்க்கு தர வேண்டும் என்று கெஞ்சுகிறாள். கடைக்காரும் முதலில் கறாராக மறுக்கிறார். பின்னர் மனம் மாறி தர சம்மதிக்கிறார்.



குடுவையில் பார்த்தால் பணத்தை காணவில்லை. அதிர்ச்சியும் அழுகையும் பீறிட்டு செயவதறியாது திகைக்கிறாள் ரசியா. நிலைமையை கடைக்காரரிடம் சொல்லவே, வந்த வழியிலேயே சென்று தேடுமாறு சொல்கிறார் கடைக்காரர்.



பதட்டத்துடனும் பயத்துடனும் வந்த வழியிலேயே தேடி கொண்டு வருகிறாள். மார்க்கெட் முழுவது ஒரே கூட்டம். புத்தாண்டை கொண்டாட ஆடி பாடி சென்று கொண்டிருக்கிறார்கள் மக்கள்.


வரும் போது கேக் கடையருகே சிறிது நேரம் வேடிக்கை பார்த்தது நினைவிற்கு வரவே அங்கே தான் தவற விட்டிருக்க வேண்டும் என்று யூகித்து வந்து சேர பணம் பூட்டிய ஒரு கடையின் அருகே கிடப்பதை பார்த்து பூரிக்கிறாள் ரசியா. பணத்தை ஒடி சென்று எடுப்பதற்குள் வேகமாக வந்த ஸ்கூட்டரால் பணம் பறந்து போய் கடையின் வாயிலருகே உள்ள வற்றிய சாக்க்டைக்குள் விழுந்து விடுகிறது.



இரும்பு கம்பிகளால் மூடப்படிருக்கும் சாக்கடையை எட்டி பார்க்கிறாள் ரசியா. உள்ளே பணம் விழுந்து கிடக்கிறது. கவலையும் பயமும் அதிகரிக்க வேதனையோடு எப்படி பணத்தை எடுக்க வழி தெரியாது திகைக்கிறாள்.



வெகு நேரமாகியும் வீடு திரும்பாத தங்கையை தேடிக்கொண்டு வந்தும் விடுகிறான் அண்ணன் அலி. அவனிடம் நடந்தவற்றை சொல்லி அழுகிறாள் ரசியா. பணத்தையும் காட்டுகிறாள். அவளை கண்டபடி திட்டுகிறான் அலி.



பக்கத்து டெய்லர் கடையில் சென்று விசாரிக்க, பூட்டிய கடையை திறந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியுமென்றும் கடைக்காரர் காலையில் தான் கடையை மூடி விட்டு புத்தாண்டுக்காக ஊருக்கு கிளம்பியதாகவும் சொல்கிறார் டெய்லர். முதலில் அவரும் பணத்தை எடுக்க முயற்ச்சிகிறார். எதுவும் நடக்கவில்லை..



தாய்க்கு என்ன பதில் கூறவது என்று இருவரும் வேதனை படுகின்றனர். அந்த வழியே வந்த ராணுவ வீரனும் இவர்களுக்கு உதவ முயற்ச்சிக்கிறான். பணத்தை எடுக்க பல வித முயற்ச்சிகள் எடுத்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை. பணத்தை எடுக்கவும் முடியவில்லை.




டெய்லரும் பணியை முடித்து விட்டு கடையை மூடி விட்டு செல்லும் முன் பூட்டிய கடையின் கடைக்காரரின் விலாசத்தை அறிந்து கொண்டு அவரை அழைத்து வர ஒடுகிறான் அண்ணன். பூட்டிய கடையின் அருகேயே அமர்ந்து கொண்டு பணத்திற்கு காவலாக இருக்குமாறு ரசியாவிடம் கூறிவிட்டு செல்கிறான் அலி.



அவரும் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருப்பதாகவும் வந்த்தும் அனுப்பி வைப்பதாகவும் குடும்பத்தினர கூறவே, மீண்டும் திரும்ப வந்து விடுகிறான்.



அப்போது பலூன் விற்கும் சிறுவன் ஒருவனை பார்த்ததும் அண்ணனுக்கு ஒரு ஐடியா உதிக்கிறது. அவன் பலூன்களை கட்டி வைத்துள்ள பெரிய குச்சியால் எடுத்து விடலாம் என்றெண்ணி அந்த குச்சியை கொண்டு முயற்ச்சிக்கின்றனர். அதுவும் நடக்கவில்லை.




பபுள்கம் போன்று ஏதாவது ஒட்டு பொருள் இருந்தால் அதை வைத்து எடுக்கலாம் என்று யோசனை சொல்கிறாள் ரசியா. பபுள்கம் வாங்க கூட இருவரிடம் கையில் ஒரு பைசா கூட இல்லை. பலூன் விற்பவனிடமே கடனாக கேட்கிறான் அண்ணன். அவனுடன் இப்போது தான் விற்பனைக்கு வந்ததாகவும் இன்னும் போணியாகத்தால் கையில் காசு இல்லை என்று கூறி விட்டு நடையை கட்டுகிறான்.




மேலும் மேலும் நேரமாவதாலும், வானமும் இருட்டி கொண்டு மழை வரும் போல இயற்கையும் தங்களுக்கு எதிராக சதி செய்வதாய் குழம்பி போகிறார்கள் அண்ணனும் தங்கையும்.




நடையை கட்டிய பலூன்காரன் நிறைய பலூன்களை விற்று முடித்து குழந்தைகளுக்காக இரக்கப்பட்டு பபுள்கம் வாங்கி கொண்டு திரும்பி வருகிறான். அவன் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சியில் குதிக்கின்றனர் அலியும் ரசியாவும்.



பலூன்காரனின் குச்சியின் துணையை கொண்டு பணத்தையும் எடுத்து விடுகின்றனர். உலகையே வென்று விட்ட மகிழ்ச்சியில் இருவரும் ஒடிச்சென்று 100 ரூபாய்க்கு ரசியா விரும்பிய தங்க மீனையும் வாங்கி கொண்டு வீட்டை நோக்கி ஒடுகின்றனர்.



விற்காமல் போன ஒரே வெள்ளை நிற பலூன் காற்றில் அசைந்து கை காட்டி செல்வது போல் திரைப்பட்ம் நிறைவடைகிறது...



Abbas Kiarostami யின் திரைக்கதையை இயக்கியிருப்பவர் Jafar Panahi . இயக்குநரின் முதல் திரைப்படம் இது.

கிட்டதட்ட 90 நிமிடங்களே ஒடக்கூடிய இத்திரைப்ப்டத்தை குழந்தைகளை கொண்டு படைத்திருக்கிறார்கள் மிகச்சிறந்த படைப்பாளிகளான இவ்விருவரும். மிக இயல்பாக குழந்தைகள் நடித்திருப்பதும், காட்சிகளை அதற்கு ஏற்றார்போல் சித்தரித்துள்ளதும் இயக்குநரின் திறமைக்கு இந்த திரைப்படம் ஒரு சான்று.



1995 ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் பரிசை அள்ளியது.கனடா, டோக்கியோ திரைப்பட விருதுகள் என்று பல பரிசுகளை வாரி குவித்ததுடன் உலகின் பல விழாக்களில் பங்கு பெற்றது.



Abbas Kiarostami மஜித் மஜிதியை போன்றே குழந்தைகளை பின்னணியில் பல சிறந்த திரைப்படங்களை உருவாக்கியவர்.



கடுமையான ஈரானிய தணிக்கை இருந்தும் அதை மறுக்க முடியாமல் அந்த கட்டுபாடுகளிடையே மிகச்சிறந்த திரைப்படங்களை உருவாக்குபவர். ஒரு வேளை இந்த கட்டுபாடுகள் தான் மிக்சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதன் மன நிலையை தோற்று விக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.



பெரியவர்களை விட குழ்ந்தைகள் குறைவாகவே எதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாழ்வின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது. குழந்தைகளை மறைந்து வாழும் ஞானிகள் என்று தான் கூறுவேன். அதனால் தான் சீன தத்துவஞானியான லா ஒட்ஷேவிற்கு வயதான குழந்தை என்று புனைபெயர் இருக்கிறது. ஒரு சூபி ஞானியைப் போல குழந்தைகள் அந்த கணத்தை மட்டும்தான் விரும்புகிறார்கள், வாழ்கிறார்கள் என்று சொல்லும் Abbas Kiarostami கூற்றிற்கு இத்திரைப்படம் ஒரு தன்னிலை விளக்கம்.


சந்தர்ப்பம் கிடைத்தால் குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிகச்சிறந்த திரைப்படம்.


Please Don't Miss.....


கான்பெரா: குழந்தைகள் சினிமா பார்த்தால் அவர்களது கற்கும் திறன் அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய டாக்டர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் கற்கும் திறன் மற்றும் படங்கள் இவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஆஸ்திரேலிய டாக்டர் குழு ஒன்று பள்ளி குழந்தைகளிடையே ஆராய்ச்சி மேற்கொண்டது.

அதில் ஒரே வகுப்பில் உள்ள குழந்தைகள் 17 பேர் ஹாரி பாட்டர் படம் தங்களுக்கு பிடித்த படம் என்றும் அதை 10க்கும் மேற்பட்டமுறை பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளனர். மற்ற மாணவர்களை விட இவர்களிடம் கற்கும் திறன் அதிகமிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் ஆராய்ச்சிக்காக ஒரு குழந்தையின் வீட்டில் 90 நிமிடம் ஓடும் படம் ஒன்றை இரண்டு குழந்தைகளாக உட்கார்ந்து பார்க்க செய்தனர்.

டாக்டர் பிரைன் பின்ச் கூறுகையில்,

படத்தின் வசனம், கதாபாத்திரங்கள் ஆகியவற்றை குழந்தைகள் உற்று கவனிக்கின்றன. அதிலிருந்து அவர்கள் கதையின் ஆழத்தை உணர்கின்றனர்.

ஹாரிபாட்டர் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல அவரும் சாதாரண மாணவர் தான். அவர் வகுப்பில் முதல் மாணவரும் கிடையாது என்பதை உணர்ந்துள்ளனர்.

படம் பார்க்கும் போது அவர்கள் மிமிக்கிரி செய்வது, சைகை செய்வது போன்றவை அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் படத்தில் வசனம்மூலம் சொல்லப்படாத உணர்ச்சிபூர்வமான விஷயங்களையும் அவர்கள் எளிதாக புரிந்து கொள்கின்றனர் என்றார் டாக்டர் பின்ச்.


நன்றி: தட்ஸ்தமிழ்.காம்





Alvin and the Chipmunks

டேவிட் என்ற பாடலாசிரியரின் வாழ்க்கையில் வந்த மூன்று குட்டி அணில்களின் கதை.முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அனிமேஷன் கலந்த மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படம்.

பாடலாசிரியன் டேவிட் தனது வேலையை பறி கொடுத்தபடி மிகவும் துன்பத்தில் உழல்கிறான்.கிறிஸ்மஸ் பண்டிக்காக காட்டிலிருந்து ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வெட்டி Los Angels க்கு எடுத்து வருகிறார்கள். அந்த மரத்தில் வசிக்கும் Alvin, Simon & Theodore என்ற 3 அணில்களும் பேசவும் பாடும் திறனுடையது.

டேவிடிடம் அடைக்கலம் கேட்கும் அணில்களை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றை தன் குழந்தைகளை போல பாதுக்காக்கவும் அவைகளை கொண்டு எப்படியாவது மீண்டும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு பராமரிக்கிறான்.

ஆனால் டேவிடின் முதலாளி Ian எப்படியாவது இந்த அணில்களை கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்க பேராசையுடன் காத்திருக்கிறான்.
ஒரு சந்தர்பத்தில் டேவிடிடம் சண்டையிட்ட 3 அணில்களும் அவன் முதலாளியிடம் சென்றுவிடவே அவைகளை வைத்து மிகப்பெரிய இன்னிசை கச்சேரி நடத்துகிறான். பணம் குவிகின்றன. அவைகளுக்கு இம்மியளவும் ஒய்வில்லாமல் சதா கச்சேரி, பாட்டு, நடனம் விளம்பரம் என அவைகள் சோர்ந்து போகும் அளவிற்கு அவைகளை துன்புறுத்தி பணம் சம்பாதிக்கிறான்.

அமெரிக்கா முழுவதும் அவைகள பிரபலமடைகின்றன. அவைகளை கொண்டு உலக பயணம் மேற் கொள்ளவும் திட்டமிடுகின்றான்.

இவைகளை அறிந்த டேவிட் மனது மிகவும் வருந்துகிறான். ஆனால் அவைகளை காண்வும் பேசவும் முடியாதபடி Ian அணில்களுக்கு கட்டுபாடு விதிப்பதோடு காவலாளிகளை வைத்து கண்காணிக்கிறான்.

Ian னின் சூழ்ச்சிகளை முறியடித்து பத்திரிகை நிருபரான தன் காதலியின் துணை கொண்டு அவைகளை மீட்டு மீண்டும் தன் குடும்பமாகவே இணைத்து கொள்வதாக திரைப்படம் இனிதே முடிகிறது.

டேவிடின் வீட்டில் குட்டி அணில்கள் செய்யும் லூட்டிகள் குழந்தைகளை துள்ளி குதிக்க வைக்கும். அணில்களின் அனைத்து உரையடல்களும் நல்ல நகைச்சுவை. அனிமேஷன் மிகவும் இயல்பாக அணில்கள் நடிப்பது போன்றே இருக்கிறது.
குழந்தைகளை மட்டுமல்ல மனம் மகிழ்ந்து குடும்பத்துடன் ரசிக்க அனைவருக்கும் பார்கலாம்.

குறிப்புகள்:

நடிப்பு: Jason Lee, David cross, Cameron Richardson மற்றும் சிலர்.
மொழி: ஆங்கிலம்
காலம்: 91 நிமிடங்கள்
கதை: Jon Witti
இயக்கம்: Tim Hill
வெளிவந்தது: 2007 -08
வெளியீடு: Fox 2000 Pictures
விருதுகள்: 2008ம் ஆண்டின் அமெரிக்காவின் Nickelodeon's (n)th Annual Kids' Choice Award மற்றும் குடும்பதிரைபட பிரிவில் சில விருதுகளும்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

இங்கே எழுதியவர்கள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்