பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பிள்ளைகளுக்கு பள்ளி துவங்கியாச்சு. எல்லா பெற்றோரும்
பிசியா இருக்கும் நேரம் இது. என் மனசுல ரொம்ப நாளா
ஓடிக்கிட்டு இருக்கற ஒரு கேள்விதான் இந்தப் பதிவு.

CURSIVE WRITINGல் தான் சில பள்ளிகளில் எழுத வேண்டும்னு
ரூலே வெச்சிருக்காங்க. ஆனா இந்த CURSIVE WRITING
தேவையா என்பதுதான் என் கேள்வி. இப்படி சேர்த்து
எழுதும் முறையை நாம அதிகமா எங்கேயும் உபயோகிப்பதில்லை.
இப்ப simple letters or printing letters இதுதான்
அதிகமா உபயோகத்தில் இருக்கு. ஏன் பிள்ளைகளின்
பாடப்புத்தகமே இந்த முறையில் தான் அச்சிடப்பட்டு இருக்கு.

அப்படி இருக்க கூட்டெழுத்து அல்லது சேர்த்தெழுதினாத்தான்
நல்லதுன்னு சொல்வதில் அர்த்தம் இல்லைன்னு எனக்குப் படுது.
அதுவும் இந்த எல்கேஜி பிள்ளைகளை கூட்டெழுத்து கத்துக்க
சொல்லி கட்டாயப்படுத்துவது மகா கொடுமை. அந்த வயசு
குழந்தைகள் பென்சிலையே பிடிக்க கூடாதுன்னு சொல்வேன்.
அப்படி இருக்க அவங்களுக்கு கூட்டெழுத்து கட்டாயமா
சொல்லிக்கொடுப்பதன் அவசியம் என்ன?





சில குழந்தைகளுக்கு எழுத வரும். சில குழந்தைகளுக்கு இப்படி
எழுத கஷ்டமா இருக்கு. b, d இந்த ரெண்டு எழுத்தையும் எழுதும்
பொழுது குழப்பமா இருக்கும். சேர்த்து வார்த்தைகள் எழுதும் பொழுது
படிக்க கஷ்டமா இருக்கும். அதைவிட கஷ்டம் பெற்றோருக்கு!!!
என்ன கேள்வி பதில் எழுதி வந்திருக்காங்கன்னு படிக்க
கஷ்டமோ கஷ்டம்தான். கூட்டெழுத்து நல்லா எழுத கற்ற பின்
எங்கே அதை உபயோகிக்க போறாங்க? கல்லூரிகளிலா? இல்லை
அலுவலகங்களிலா??

ஆங்கிலேயர்கள் டைப்ரைட்டர் கண்டுபிடிக்கும் முன்னாடி கூட்டெழுத்தில்
எழுதிக்கிட்டு இருந்தாங்க. "fair hand" அப்படின்னு சொல்வாங்க.
அதாவது எழுத்துக்கள் அழகா இருக்குன்னு அர்த்தம். ஆனா
அப்பக்கூட 2 ஆம் வகுப்புக்கு மேலதான் இந்த கையெழுத்துப்
பயிற்சியை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா
இப்ப பள்ளிகளில் எழுதுவதே CURSIVE தான்னு கஷ்டப் படுத்தறாங்க.
சிலருக்கு இப்படி எழுத முடியும். சிலருக்கு எழுத முடியாது.
கூட்டெழுத்துல எழுதுவது ரொம்ப ஈசியும் கிடையாது.

இப்ப கிளர்க் வேலையில் கூட எழுத்து வேலை குறைவு.
எல்லா இடத்திலையும் கணிணி ஆக்கிரமிச்சாச்சு. புத்தகங்கள்
எல்லாமே பிரிண்டிங் சிம்பிள் லெட்டர்ஸ்தான். அப்படி இருக்க
கூட்டெழுத்தில் எழுதக்கற்றுக்கொள்வதை கட்டாயம்னு சொல்வது
நியாயமே இல்லை. இப்ப பல இடங்களில் கூட்டெழுத்து முறை
குறைஞ்சுகிட்டே வருது. 2006 வருடத்தில் SAT
( standardized test for college admissions in the United States.)
15 சதவிகிதத்தினர்தான் கூட்டெழுத்துல எழுதியிருக்காங்க.

டிஸெலக்ஸியா பிள்ளைகளுக்கு எழுத்து என்பதே
கஷ்டமா இருக்கும். அப்படி இருக்க அவர்களை கூட்டெழுத்தில்
எழுதச் சொன்னா ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் எனக்குத்
தெரிந்து மாண்டிசொரி முறையில் பாடங்கள் ஆரம்ப
வகுப்புக்களில் நடத்தப்படுவதில்லை. அதாவது ஒரு
எழுத்தை தொட்டு உணர்ந்து, அதை பல முறை
பார்த்து அதன் பிறகு எழுதுவது. (என்னுடைய முந்தைய
மாண்டிசோரி கல்வி முறை பதிவுகளில் பார்க்கலாம்)

எடுத்த உடனேயே A,B,C, ஆரம்பிக்கறாங்க.
சில பள்ளிகளில் ஸ்ட்ரோக்ஸ் போடச் சொல்லிக்
கொடுப்பதே இல்லை. அதிலும் a,b,c ஈசியா இருக்க,
கேபிடல் ஏ,பி,சி ஆரம்பிச்சிருவாங்க. பாவம் பசங்க.

கையெழுத்து பயிற்சிக்காக பிள்ளைகள் விரும்பினா மட்டுமே
கூட்டெழுத்து சொல்லிக்கொடுக்கணும் என்பது என் எண்ணம்.
வற்புறுத்தாம விருப்பம் இருந்தா எழுதட்டும்னு சொல்லிக்
கொடுக்கலாம். நடைமுறை உபயோகத்தில் இருக்கும்
பிரிண்டிங் ஆல்ஃபபெட் எழுதப்பழகுவதில் எந்த தவறும் இல்லை.

அம்ருதா, ஆஷிஷ்ற்கு கர்சிவ் ரைட்டிங் தெரியாது. ஆனா
அவர்கள் இந்தியா வந்து பள்ளியில் சேர்த்த பொழுது
அதை அவர்கள் குற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆஷிஷாவது
அப்போது 7ஆம் வகுப்பு. அம்ருதா 4 ஆம் வகுப்புதான்.
அவர்கள் பள்ளியில் ஆசிரியர்கள் ”முடிந்தால் ட்ரை செய்,
இல்லாவிட்டால் இப்படியே இருந்துவிடு ”என்று சொல்லிவிட்டார்கள்.
D'Nealian style of writing:

D'Nealian 1978ஆம் ஆண்டு இப்படி எழுதும் ஸ்டைலை
கொண்டு வந்தார்.





பிரிண்டிங் மெத்தட் இல்லாமல் கர்சிவ் ரைட்டிங்கும் இல்லாம
நடுவாந்திரமா இருக்கும் இந்த முறை பிள்ளைகள் கற்க
எளிதா இருக்கும்.

இந்த முறையில் எழுத சொல்லிக்கொடுப்பது நல்லா இருக்கும்னு
சில அறிஞர்கள், ஆசிரியர்கள் சொல்றாங்க. இந்த முறையில்
எழுத சொல்லிக்கொடுக்கும் பொழுது கையெழுத்து பார்க்க
அழகா இருக்கும். (ஆஷிஷ் அம்ருதா இந்த ஸ்டைல்லதான்
எழுதுவாங்க.)
இங்க போய் பாருங்க.

கூட்டெழுத்து கையெழுத்து போல வேணாம் நல்லா இருக்கும்.
நடைமுறைக்கு ஒத்துவராது, அதனால அதை கற்பது
கட்டாயம்னு சொல்லக்கூடாது என்பது என் எண்ணம்.
உங்க எண்ணத்தையும் சொல்லிட்டு போங்க.

இப்ப டீவி, மாத இதழ்கள், வார இதழ்கள் எல்லாத்துலயும் ஒரே
டாபிக்தான் அதிகமா பேசப்படுது. அது தனது ஆசிரியையை
குத்தி கொன்ற மாணவன்.

தப்பு யார் மேலன்னு விவாதங்கள் நடக்குது. யாரைச் சொல்லி
நோவது கொஞ்சம் அலசி பாப்போமா?!!

நான் எப்பவுமே சொல்லிக்கிட்டு இருக்கும் மாரல் ஸ்டெடி வகுப்புக்கள்,
நீதி போதனைகள் எதுவும் பள்ளிகளில் கிடையாது. அவற்றிற்கு பதில்
எங்கள் பள்ளி மாணவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட், டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்
என மார்தட்டிக்கொள்ள பள்ளி நிர்வாகம் விரும்புவதால ஆசிரியர்கள்
இயக்கி விடப்பட்ட மிஷின்களாக தங்களுக்கு இடப்பட்டிருக்கும் வேலையை
மட்டும் செய்து முடிக்க முனைகிறார்கள். CBSC பாடத்திட்டத்தில்
இப்ப சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பாடங்களை ஸ்ட்ரெஸ்
இல்லாம பரிச்சார்த்தம் செய்யும் முறை வந்திருக்கு. ஆனாலும்
இந்த CONTINUOUS CLASS ROOM ASSESSMENT கேள்வித்தாள் செட்
செய்து, பரிட்சை வைத்து, பேப்பர் திருத்தி ரிப்போர்ட் கார்ட்
தருவதை விட ஆசிரியருக்கும், மாணாக்கருக்கும் தொடர்ச்சியான
ஒரு ஸ்ட்ரெஸ் என்றே சொல்ல வேண்டும்.

யோகா, டான்ஸ், விளையாட்டு இதெல்லாம் கட்டாயமா வெச்சிருக்காங்க.
இத்தோடு வேல்யூஸ், மாரல் ஸ்டெடி வகுப்புக்களையும் கட்டாயமாக்கணும்.
அப்போ இழந்த நீதி போதனைகள் பிள்ளைகளுக்கு கிடைக்கும். அப்படியும்
ஒரு தலைமுறை பள்ளிக்குழந்தைகள் இவற்றை இழந்ததை ஈடு செய்ய
முடியாம போகும். அதனால கல்லூரிகளில் (அதாவது நீதிப்பாடங்களை
பள்ளியில் கற்றிராதவர்களுக்கு என அமைத்தல் வேண்டும்.

மெத்த படிச்ச மேதாவியா மட்டும் இருந்தா போதாது. அதனால
நல்ல குடிமகனாக்க இதை கல்வித்துறை செய்ய வேண்டும்.


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. CHARITIY BEGINS AT HOME.
சத்தியமான உண்மை இது. எதுவும் நம்ம வீடுகளில் இருந்துதான்
துவங்கனும். எனக்கு வேலை இருக்கு. இரண்டு பேரும் வேலை
பார்க்கிறோம்னு சொல்லி ஓடிட முடியாது. தப்பிக்கவும் வழி இல்லை.
நம்ம பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான கடமை
நமக்கு இருக்கு. பெற்றால் மட்டும் போதாதே! நல்லது கெட்டது
சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய
கடமை. பள்ளியில் சேர்த்தோமா... ஃபீஸ் கட்டினோமா,
வேண்டியதை வாங்கிக்கொடுத்தோமா!!ன்னு இருக்க கூடாது.

மார்க்கு, ரேங்கு என ஓடாத பள்ளியாக பார்த்து பிள்ளைகளை
சேர்த்து, ஆசிரியரைப் பற்றி எந்த வித தவறான கமெண்டுகளும்
பிள்ளைகளின் காதில் விழாமல், ஒரு மாணவனின் வாழ்வில்
குருவின் அவசியத்தை சொல்லிகொடுத்து அந்த உன்னதமான
தொழிலின் மூலம் அறிவுக்கண்ணை திறக்க வைக்கும் தெய்வங்களுக்கு
என்றும் நன்றியுடையவர்களாக பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

உங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும் பொழுது
உங்களின் ஆசிரியர்கள் பற்றியும் நினைத்து மனதில் ஒரு
குதூகலம் ஏற்ப்படுகிறதுதானே!!! அந்த ஒரு நிலயை,
சந்தோஷத்தை நம் குழந்தைகளும் அடைய உதவி செய்ய
வேண்டும். பள்ளியில் ஏதும் பிரச்சனை இருந்தால், ஆசிரியர்
ஏதும் திட்டியது தெரிந்தால் உடன் பள்ளிக்குச் சென்று
கத்தி சண்டை போடாமல் என்ன நடந்திருக்கிறது என்பதை
அறிந்துக்கொள்ள வேண்டும். ”அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பதுதானே அறிவு!!!!

பள்ளியில் ஆசிரியருக்கு இருக்கும் ஸ்ட்ரெஸ் அவ்வளவு
இவ்வளவு இல்லை. அதிலும் இந்த பதின்ம வயதுக்கு
குழந்தைகள் இருக்கும் ஆசிரியருக்கும் இருக்கும் கஷ்டம்
அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். வீட்டில் இருக்கும்
நமக்கு புரியாத கஷ்டம். ஒரு பதின்ம வயதுக்குழந்தை
இருக்கும் வீட்டில் எப்படி இருக்கும் என உணர்ந்தவர்கள்,
அதே போல 30க்கும் மேற்பட்ட குழந்தையை ஒரு இடத்தில்
உட்கார வைத்து பாடம் சொல்ல என்ன பாடு படுவார்கள்
என தெரிந்தால், புரிந்தால் போதும்.

எதுவும் நடந்த பிறகு பேசி புண்ணியம் ஏதுமில்லை.
ஆகவே முன்பே நன்கு யோசித்து, இப்படி இப்படி
நடக்கலாம் என அவதானித்து நாம் செய்ய வேண்டியவற்றை
செய்ய வேண்டும்.

யார்மேலும் தவறு இல்லை என்றோ, ஒருவர் மீது
தவறு என்றோ சொல்ல முடியாத சூழல். ஆகாவே
நம் கடமையை நாம் சரியாக செய்ய வேண்டும்
எனும் எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டால்
பிரச்சனைத் தீர வாய்ப்பிருக்கிறது

வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.

சென்ற வாரம் எனது மகன் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதில பள்ளி நிர்வாகம் சொன்ன சில கருத்துக்கள் சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் என்னைத் திண்டாட வைத்தது. அதன் விளைவே இக்கட்டுரை..

மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கையில் ஒன்று 5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு “Spelling Success” என ஒரு புத்தகம் கொடுத்துள்ளார்களாம். அதில 3000 வார்த்தைகள் இருக்கும். தினம் 10 வார்த்தைகள் எடுத்துக்கொண்டு, அன்றைய நாளில் எல்லா வகுப்புகளிலும் ஆசிரியர்கள் அந்த 10 வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பார்கள். அதனால் மாணவர்களின் மனதில் 10 வார்த்தைகளுக்கான அர்த்தமும், spellingம் மனதில் நின்றுவிடும். 2 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் அடிக்கடி உபயோகப்படுத்தக்கூடிய 6000 வார்த்தைகளை மாணவர்களின் மனதில் புகுத்திவிடுவோம். அதனால் அவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசுவார்கள் என்பது அவர்கள் வாதம்.

முதலில் அவர்கள் தங்களுடைய பெரிய தவறு ஒன்றை ஒத்துக்கொள்கிறார்கள். அவர்கள் வழக்கமாக நடத்தும் பாடத்தில் வரும் வார்த்தைகளின் அர்த்தத்தையோ, spellingகோ மாணவர்களின் மனதில் பதியவைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். மொழிப் பாடங்களில் அடிக்கடி வரும் வார்த்தைகளை பதிய வைத்தாலே போதும் ஆங்கிலம் பேச நிறைய வார்த்தைகளை மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள். இவ்வளவுக்கும் அந்த பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் (from 1st std) ஆங்கிலத்திற்கு மட்டும் textbook, good grammar, conversation or spelling success என 3 புத்தகங்கள் கொடுப்பார்கள். அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை பதிய வைக்கமுடியவில்லை என்றால் இந்த 3 புத்தகங்கள் எதற்கு?

உண்மையான பிரச்சினை பாடச்சுமை. ஒரு வார்த்தையை மாணவர்கள் படிக்கும்போது 3 விதமான கற்றல் நடக்கிறது.
1. வார்த்தையின் ஓசை
2. வார்த்தையின் அர்த்தம்
3. spelling
தாய்மொழியாக இருந்தால் முதல் 2 கற்றல் தேவையில்லை. 3வது கற்றல் மட்டுமே நடக்கிறது. ஆகவேதான் தாய்மொழியில் கற்பது எளிதாக இருக்கும்.(அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டும் சொல்கிறேன்)
ஆங்கிலம் அயல்மொழி 3 கற்றலும் நடக்கும். ஆகவே ஆங்கில வார்த்தைய கற்பதற்கு நிறைய கால அவகாசத்தை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

இன்று இருக்கும் பாடச்சுமை மெதுவாக கற்பதற்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கவில்லை. அவசரகதியில் கற்பதால் அரைகுறையாக ஓசை மற்றும் spelling மட்டும் படித்து மதிப்பெண் எடுத்துவிட்டு மறந்துவிடுகிறார்கள்.

ஆங்கில வார்த்தைகள் மாணவர்கள் மனதில் பதியாமல் போனதற்கு பாடச்சுமைதான் காரணம். இதைகூட புரிந்துகொள்ளாமல் இக்குறையை போக்க இன்னொரு புத்தகம் வழங்குகிறோம் என்று பாடச் சுமையை மேலும் அதிகமாக்கும் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது?

(குறிப்பு: General Knowledge புத்தகத்தையும் இந்த வகையில் சேர்த்துகொள்ளலாம். Science, Social Science இரண்டையும் நன்றாக புரியவைத்து மனதில் ஏற்றினால் அதுதான் General Knowledge. ஆனால் இன்றோ General Knowledge புதிய பாடமாகவே ஆகிவிட்டது.)

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்