பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

ஃபேஸ்புக்கில் என்ன பிரச்சனை? ஃபேஸ்புக்கில் ஒரு பிரச்சனையும் இல்லை. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?

கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்


முதல் பகுதி முழுவதையும் இங்கு வாசிக்கலாம்


உங்கள் மகள் அல்லது மகனின் பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் தரமாட்டேன் என்றால், தாராளமாக திட்டி, இந்த விஷயத்தில் இரகசியம் கூடாது என்பதை கடுமையாகச் சொல்லி பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் பள்ளிக்குச் சென்றபின் அவனுடைய ஃபேஸ்புக்கை திறந்து அவன் Friend ஆகியுள்ள நபர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை கவனியுங்கள். சந்தேகத்து இடமானவர்களை, உங்கள் மகனிடம் எடுத்துச் சொல்லி, அவனை விட்டே நீக்கச் சொல்லுங்கள்.

இந்த வரியை சொடுக்கி இரண்டாம் பகுதியை வாசியுங்கள்.

”அங்கிள் என்னுடைய ஃபேஸ்புக் ஃபிரண்ட்ஸ் எல்லாருமே என் ஸ்கூல் பிரண்ட்ஸ்தான். அதனால பயப்பட வேண்டாம்னு எங்கம்மாவுக்கு சொல்லுங்க”

அவர்-

”டேய்.. அதான் ஸ்கூல்ல நாள் முழுக்க பார்க்கறீங்கல்ல.. அப்புறம் தனியா ஃபேஸ்புக்ல வேற வந்து அரட்டையடிக்கணுமா?”

நான் -
அடடா... பெற்றோர்களின் இந்தக் குணம்தான், குழந்தைகளை நம்மிடம் இருந்து தள்ளி வைக்கிறது. ஸ்கூல்ல பேசினா, அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்து பேசக் கூடாதா? ஒரு காலத்தில் நாம் வீட்டுக்கு வந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தோம். பிறகு ஃபோனில் பேசினோம். இப்போது குழந்தைகள் ஃபேஸ்புக் வழியாக பேசிக் கொள்கிறார்கள். அது ஒரு உற்சாக குழு உணர்வு. நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்நது ஒரு சினிமாவை அல்லது ஒரு புத்தகத்தை அல்லது ஒரு கிரிக்கெட் மாட்சை பார்க்கும் போது கிடைக்கிற குழு சந்தோஷம் ஃபேஸ்புக்கில் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இதை தடுக்க நினைத்தால் எதிர்மறை விளைவுகள்தான் கிடைக்கும். எனவே நாமும் அவர்கள் நண்பர்களாகி, அவர்களது நண்பர்களின் நண்பர்களுக்கும் இணக்கமாகிவிட்டால், நமது கண்காணிப்பை மீறி அவர்கள் செல்ல மாட்டார்கள்.

அவர் - 
சில நேரம் ஃபேஸ்புக்ல யார் கூடயாவது சண்டை போட்டுடறான். அதனால மூஞ்சை தூக்கி வைச்சுக்கிட்டு ஹோம் ஒர்க் பண்றதுல்ல, ஒழுங்கா சாப்பிடறதுல்ல.. ஏன்னு கேட்டா.. யாரோ தன்னை திட்டிட்டதா அழுகை.. இதெல்லாம்தான் ரொம்ப டிஸ்டர்பிங். அதனாலதான் நான் ஃபேஸ்புக் வேண்டாம்னு சொல்றேன்.

நான்-
ஃபேஸ்புக் சகவாசத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வார்த்தைக்கும் சீரியஸாகி சண்டை போட்டு, நிஜ வாழ்க்கையிலும் நிம்மதி இன்றி திரிகின்ற எனது நண்பரகளே சிலர் உண்டு. குழந்தைகள் இப்படி இருப்பதில் வியப்பில்லை.

அவர்-
அதுக்காக அவன் அப்படியே இருக்கட்டும்னு விட்டுடச் சொல்றீங்களா?

”போம்மா.. உனக்கு ஒண்ணும் தெரியாது. அங்கிள் என்னோட ஃபிரண்டு ஒருத்தன் யு.எஸ்ல இருக்கான். அங்க silly band அப்படின்னு ஒண்ணு விக்குதாம். கையில வாட்ச் மாதிரி மாட்டிக்கிட்டு போட்டோ போட்டிருக்கான். அது இந்தியாவில கிடைக்கல. அதனால இந்தியாவையே திட்டறான் அங்கிள். எங்க ஸ்கூல். எங்க ஸ்கூல்ல படிக்கறவங்க எல்லாரும் பட்டிக்காடாம். இதைக் கேட்டுட்டு நான் எப்படி அங்கிள் சும்மா இருக்க முடியும். அதான் நான் அவன் கூட சண்டை போட்டேன். இது தப்பா?”
அவர் - 
”டேய் ... பேசிக்கிட்டிருக்கோம்ல.. வந்து டிஸ்டர்ப் பண்ணாத..”

நான் -
இருங்க அவனை விரட்டாதீங்க. டேய் கண்ணா இங்க வாடா..  ஃபேஸ்புக்கல உன்னை யாராவது கிண்டல் செய்தாலோ, டீஸ் பண்ணாலோ அப்படிச் செய்யாத அப்படின்னு சொல்லிப் பாரு. ஸ்கூல்ல ஏதாவது பிரச்சனைன்னா என்ன பண்ற? டீச்சர் அல்லது அப்பா அம்மாகிட்ட சொல்றல்ல. அதே மாதிரி இதையும் அம்மாகிட்ட சொல்லு. அல்லது அப்பா கிட்ட சொல்லு. அவங்க உனக்கு எப்படி பதில் சொல்றதுன்னு சொல்லித் தருவாங்க. ஓகே.. அவங்க அதுக்கப்புறம் ஒழுங்கா நடந்துக்கறாங்களான்னு பாரு. இல்லன்னா ஃபிரண்டு லிஸ்டுல இருந்து தூக்கிடு. யாரு உன்னை டிஸ்டர்ப் பண்ணாம, உன் கூட ஜாலியா இருக்காங்களோ அவங்க மட்டும் உனக்கு ஃபிரண்டா இருந்தா போதும். ஓகேவா?”

”ஓகே அங்கிள்.. எங்க அம்மாகிட்ட இதைச் சொல்லுங்க. எங்க அப்பா கூட நான் சொன்னா கேட்டுக்குவாரு. ஆனா எங்கம்மா என்னையே திருப்பித் திட்டுவாங்க”


அவர்-
”டேய்.. அங்கிள் கிட்ட என்னை பத்தி போட்டுக் கொடுக்கறியா?”


நான் -
இந்த விஷயத்தில் அவன் கிட்ட பேசாதே, அவனை ஃபிரண்டு லிஸ்டுல இருந்து தூக்கிடுன்னு சொன்னாலும், அதுக்கு அவ்வளவா பலன் இருக்காது.

அவர் - 
நானும் சொல்லக்கூடாது, அவனாவும் கேட்கமாட்டான், கேட்டாலும் பலன் இல்லன்னா, இது மாதிரி ஆன்லைன் சண்டைல இருந்து அவனை எப்படி தப்பிக்க வைக்கிறது?

நான்-
ரொம்ப சிம்பிள். அடிக்கடி ஞாயிற்றுக் கிழமை அல்லது மாலை வேளைகளில் டிவி பார்ப்பதை விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்குச் செல்லுங்கள். அல்லது உறவினர்கள் நண்பர்களை உங்கள் வீட்டுக்கு வர வையுங்கள். அவர்களிடம் குழந்தைகளை சகஜமாக பழக கற்றுக் கொடுங்கள். ஆன்லைன் சகவாசத்திற்கும், நிஜ சகவாசத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இது போல மறைமுகமாக உணர வையுங்கள்.

அவர் - 
ம்ம்ம்ம் இப்பதான் தெளிவு கிடைச்சிருக்கு. ஆமா உன்னுடைய ஃபேஸ்புக் ஐடி என்ன? நானும் நாளையில இருந்து ஃபேஸ்புக் வர்றேன்.

”ஐயோ...அங்கிள் அம்மாவுக்கு உங்க ஐடியை கொடுக்காதீங்க.. பஜ்ஜி போடறது எப்படி? துணியை அயர்ன் பண்ணுவது எப்படின்னு உங்களை பிளேடு போடுவாங்க”

”டேய்.. உன்னை...”

அம்மாவும், பையனும் ஜாலியாக என்னிடமிருந்து விடைபெற்றார்கள். சமூக வலைத்தளங்களில் நல்லது உண்டு, கெட்டதும் உண்டு. அவை இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. அவற்றில் உள்ள கெட்டவைகளுக்காக பயந்து, குழந்தைகளிடமிருந்து அவற்றை மூடி மறைக்காமல், அவர்களுக்கு உண்மையை புரிய வைத்து, அவர்களுடன் நண்பனாக பழகக் கற்றால், நமக்கு ஃபேஸ்புக்கில் மட்டுமல்ல, நம் குழந்தைகளின் நோட் புக்கிலும் நம்மைப் பற்றி நல்ல வார்ததையாக நமது குழந்தைகள் எழுதுவார்கள். சியர்ஸ்!

ஃபேஸ்புக்கில் என்ன பிரச்சனை? ஃபேஸ்புக்கில் ஒரு பிரச்சனையும் இல்லை. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?

கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்


முதல் பகுதி முழுவதையும் இங்கு வாசிக்கலாம்

அவர் - 

நீ சொல்வதைக் கேட்டால் எனக்கு பதட்டம்தான் அதிகமாகிறது. என் குழந்தைகளை எப்படி கண்காணிக்கிறது?

”வேணும்னா என் பாஸ்வேர்டை தர்றேன். நீயே அப்பப்போ செக் பண்ணிக்கோ”, தடதடவென வந்து சொல்லி விட்டு கடகடவென மறைந்தான் அவருடைய மகன். நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டிருந்தான் போலிருக்கிறது.

நான் - 
ரொம்ப சிம்பிள். முதலில் நீங்கள் இது பற்றிய பதட்டத்தை தவிர்க்க வேண்டும். இப்போது இதில் உள்ள பாஸிடிவ் மற்றும் நெகடிவ் அம்சங்கள் இரண்டையுமே சுருக்கமாக உங்களுக்கு சொல்லிவிட்டேன். இதை மனதில் வைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக உங்கள் குழந்தைகளை அணுகுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம், கவனமாக இருக்கச் சொல்லி அறிவுறுத்துங்கள்.

அவர் - 
அதைத்தான் தினமும் சொல்லிக்கிடடிருக்கேனே.. கவனமா இரு, கவனமா இருன்னு சொன்னா, என்னை மதிக்கறதே இல்லை, டிஸ்டர்ப் பண்ணாத, எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சண்டை போடறாங்களே..

நான் -

ஹா..ஹா..ஹா.. இதில் ஆச்சரியம் என்ன இருக்கு? அவர்கள் அப்படித்தான் உங்களிடம் சண்டை போடுவார்கள். ஏனென்றால், உங்களுக்கு முழுவதுமாக ஃபேஸ்புக் பற்றி தெரியவில்லை. ”இதெல்லாம் யாருக்கு தெரியும்” என்று அடிக்கடி உங்கள் அறியாமையை அவர்களுக்கு சொல்கிறீர்கள் என்பதால், ஒன்றும் தெரியாமலேயே நீங்கள் கட்டுப்படுத்துவதாக உங்கள் குழந்தைகள் நினைக்கிறாரகள். இது எதிர்பார்த்ததுதான்.

அவர் - 
அவங்க என் கூட சண்டை போடறத எப்படி குறைக்கிறது?

நீங்களும் ஃபேஸ்புக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். விருப்பம் இல்லை என்றால், உங்கள் மகனே முன்வந்து சொன்னது போல, அவனுடைய பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் தரமாட்டேன் என்றால், தாராளமாக திட்டி, இந்த விஷயத்தில் இரகசியம் கூடாது என்பதை கடுமையாகச் சொல்லி பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் பள்ளிக்குச் சென்றபின் அவனுடைய ஃபேஸ்புக்கை திறந்து அவன் Friend ஆகியுள்ள நபர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை கவனியுங்கள். சந்தேகத்து இடமானவர்களை, உங்கள் மகனிடம் எடுத்துச் சொல்லி, அவனை விட்டே நீக்கச் சொல்லுங்கள்.

அவர் -
இது நல்ல ஐடியாவா இருக்கே.. ஆனா இது மட்டுமே போதுமா? ஃபேஸ்புக்ல அவங்க பத்ரமா இருப்பாங்களா?

நான் -
நிச்சயமாக இது மட்டும் போதாது. அவர்களுக்கு Profile Page என ஒன்று இருக்கும். அதாவது தங்களைப் பற்றிய சுய விபரங்கள் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பாருங்க. அதுல ஃபோன் நம்பர், இமெயில் ஐடி, வீட்டு விலாசம், குடும்பத்தினர் பற்றிய விளக்கம் இதெல்லாம் இருந்தா, திரும்பவும் உங்க மகனையே கூப்பிட்டு நீக்குங்க. நம்மைப் பற்றிய உண்மையான சுய விபரங்கள், நம்மைப் போன்ற பெரியவர்களே அதில் விட்டு வைத்தல் தவறு. இன்டர்நெட் கிரிமினல்கள் இவர்களைத்தான் எளிதாக இரையாக்குகிறார்கள். முடிந்தால் உங்கள் மகன் அல்லது மகளை புனைப் பெயரில் இயங்கச் சொல்லுங்கள். அது மிகவும் நல்லது.

அவர் - 
என்னுடைய சின்னப் பையன் புனைப் பெயர்தான் வைத்திருக்கிறான். அவனுடைய நண்பர்களில் சிலரும் இஷ்டத்துக்கு புனைப் பெயர்தான் வைத்திருக்கிறாரகள். அது நல்லது என்பது இப்போது புரிகிறது. ஆனால் அவர்களின் Friend list பெரிதாகிக் கொண்டே போகிறது. நல்ல நண்பர்களை எப்படி தேர்ந்தெடுக்க வைப்பது?

”என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் நல்லவங்கதான். நீங்கதான் உங்க ஃபிரண்டு கூட அடிக்கடி மொபைல் போன்ல அடிக்கடி சண்டை போடுவீங்க. நாங்க அப்படியெல்லாம் கிடையாது”, மின்னல் போல அவருடைய மகன் மீண்டும் வந்து சொல்லிவிட்டு மறைந்தான்.

நான் -
ஹா..ஹா..ஹா... பார்த்தீங்களா? பசங்க முன்னாடி நாம எப்படி நடந்துக்க கூடாதுன்னு உங்க பையனே சொல்லிட்டு போறான். அவங்க முன்னாடி நாம் சண்டை போடக் கூடாது. அது அவர்களை பாதிக்கும். அந்தக் குணம் அவர்களையும் தொற்றும். அதே போல உங்கள் மகன் எல்லோரும் நல்லவர்கள் என்று சொன்னதையும் கவனிங்க. அவனுடைய மனது நல்ல மனது என்றாலும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கில் இது போன்ற நல்ல மனதுக்காரர்களைதான் குற்றவாளிகள் குறி வைக்கிறார்கள். மும்பையிலிருக்கும் என் நண்பரின் மகள், இப்படித்தான் கேரளாவிலிருக்கும் எவனோ ஒரு ஃபேஸ்புக் நண்பனை நம்பி, கல்யாணம் செய்து வை என்று அடம்பிடித்து ஒரே இரகளை ஆகிவிட்டது. கடைசியில் போலீஸ் துணையுடன் விசாரித்ததில், அவன் ஏற்கனவே திருமணமானவன் என்பது தெரியவந்து அப் பெண் மணம் மாறினாள். எனவே நமது குழந்தைகளுக்கு ஃபேஸ்புக் Friend மற்றும் நிஜ வாழ்க்கை Friend ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக, ஆணித்தரமாக அவ்வப்போது ஒரு நண்பனைப் போல அமர்ந்து சொல்லித் தரவேண்டும்.

(விரைவில் அடுத்தபகுதி)

அம்மா என் நோட்புக்கை காணோம் என்று அப்பாவியாக திரிந்து கொண்டிருந்த குழந்தைகள், தற்போது ஃபேஸ்புக்கில் அநாயசமாக புகுந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதென்ன ஃபேஸ்புக்? நம் நோட்டு புத்தகத்தில் நாம் மட்டுமே எழுதுவோம். நாம் விரும்பினால மட்டுமே மற்றவர்களுக்கு காட்டுவோம். ஆசிரியர்கள் சொல்வதைத்தான் நாம் எழுதுவோம். நாம் எழுதியதில் தவறு இருந்தால் ஆசிரியர் திருத்துவார். பெற்றோர்கள் அதை வாங்கிப் பார்ப்பார்கள்.

நம் ஃபேஸ்புக் என்பது ஒரு virtual உலகம். இன்டர்நெட்டில் இருக்கக் கூடிய ஒரு மாய புத்தகம். இந்தப் புத்தகத்தில் நீங்களும் எழுதலாம், உங்கள் நண்பர்களும் எழுதலாம். உங்கள் புத்தகத்தில் இருந்து அடுத்தவர் புத்தகத்திற்கு எளிதில் தாவலாம். அடுத்தவர், லாஸ்பேட்டையிலும் இருக்கலாம், லாஸ்ஏஞ்சல்ஸிலும் இருக்கலாம். அதாவது நமது புத்தகம் ஒரு திறந்த புத்தகம். இதில் எழுத்து, ஆடியோ, வீடியோ என சகலமும் இருக்கும். இதை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமே ஃபேஸ்புக்.


இதில் என்ன பிரச்சனை? பிரச்சனை இதில் அல்ல. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?

கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்.

அவர் : 
போன வாரம் பசங்களோட ஊட்டி போயிட்டு வந்தோம். வந்த அடுத்த நாளே, எங்களோட ஃபோட்டோ எனக்கே இமெயில்ல வருது. எனக்கு ஷாக். ஏன்னா நான் யாருக்குமே ஃபோட்டோவை அனுப்பல. விசாரிச்சதுல, சின்னவன் தான் ஃபேஸ்புக்ல ஃபோட்டோவை போட்டிருந்தான்னு தெரியவந்தது. அவன் 9thதான் படிக்கறான்.அதுக்குள்ள எப்படி இதையெல்லாம் பழகினான்னே தெரியல. உனக்குதான் கம்ப்யூட்டர் பத்தி எல்லாம் தெரியுமே.. ஃபேஸ்புக்னா என்னது..? அதுல இவன மாதிரி சின்னப்பசங்கள்லாம் இருக்கலாமா? கூடாதா?

அவர் சொல்லும்போதே, முகம் சிவந்து, கோபம் பொத்துக் கொண்டு வருவதை யூகிக்க முடிந்தது. அருகில் நின்று கொண்டிருந்த +2 பையனை, எல்லாம் இவனாலதான்.. இவன்தான் அவனுக்கு கத்துக் கொடுத்திருப்பான் என்று அவனை கடிந்து கொள்ள ஆரமபித்தார். நான் இடை மறித்தேன். எனக்கு மாணவர்களையும், குழந்தைகளையும் கடிந்து கொள்வது பிடிக்காது. அவர்களிடம் சரியான வகையில் எடுத்துச் சொன்னால், எதையும் புரிந்து கொள்வார்கள் என்பது என் கருத்து. 

நான் : 
அவசரப்பட்டு குழந்தைகளை திட்ட வேண்டாம். அவர்கள் ஒன்றும் கிரிமினல் வேலைகளைச் செய்யவில்லை. சொல்லப் போனால், இந்த கால கட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும், தெரிந்து  வைத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத் தளம் (Social Networking Site) அது ஒரு வெப் சைட் அவ்வளவுதான். அங்கு நாம் நம் இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதியதை பார்த்து கமெண்ட் கொடுக்க யாராவது வேண்டுமல்லவா, அதனால் நமக்கு நண்பர்கள் தேவை. எனவே நண்பர்களை இணைத்துக் கொண்டு அவர்களுடன் உரையாடி பகிரந்து கொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் ஊட்டி புகைப்படத்தை, உன் மகன் இப்படித்தான் தன் நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளான் என்று நினைக்கிறேன்.

அவர் :
அவனாவது பரவால்ல. ஃபேஸ்புக்கோட சரி. இவன் Myspaceன்னு இன்னும் எது எதுலயோ மெம்பர் ஆகி வைச்சிருக்காங்க. படிக்கறதே இல்ல. சதா அதுலயே இருக்கான். உன்னை.... (என்று மீண்டும் மகனை அடிக்க கை ஓங்கினார்)

நான் :
அடடா...என்ன இது வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு சின்னப் பையனை இப்படி அதட்டுற. அவன் ஒண்ணும் தப்பு பண்ணல. Facebook என்பது போல Myspace என்பதும் ஒரு சமூக வலைத் தளம். இதுல மெம்பர் ஆகறதால ஒரு தப்பும் கிடையாது. உன் மகன்களைப் போலவே இதுல தினமும் குத்துமதிப்பா ஒரு நாளைக்கு 3 இலட்சம் பேர், உலகம் முழுக்க மெம்பர் ஆகிக்கிட்டே இருக்காங்க. ஃபேஸ்புக்ல இது வரைக்கும் 20 கோடி பேர் மெம்பர் ஆகியிருக்காங்க. அதுல நானும், உன் மகன்களும் இருக்கோம். இத்தனை பேர் அதுல இருக்கும்போது, அதைப் பத்தி தெரியாம இருந்தால்தான் தவறு. உன் மகன்களை பாராட்டு. அவங்க updatedஆ இருக்காங்க.

இதைக் கேட்டதும் அவருக்கு என் மேல் கோபம் வர ஆரம்பித்துவிட்டது.

அவர் :
பசங்களுக்கு நல்ல புத்தி சொல்லுவேன்னு கூட்டிட்டு வந்தா, நீ அவங்களுக்கு வக்காலத்து வாங்கறயே.. இத்தனை கோடி பேர் ஃபேஸ்புக்ல மெம்பரா இருக்காங்கன்னா, ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கும். ஃபேஸ்புக்கால நமக்கு என்ன பிரயோஜனம் சொல்லு?

நான் :
இது நல்ல கேள்வி. ஃபேஸ்புக், மை ஸ்பேஸ் போன்ற எல்லா தளங்களிலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. முதலில் நல்லதுக்கு வருகிறேன். இது தகவல் யுகம். SMS, Email என்று எல்லாமே எக்கச் சக்க வேகம். இதோட அடுத்த கட்டம்தான், சோஷியல் நெட் ஒர்க்கிங். ஒருத்தருக்கு எப்படி இமெயில் பற்றியும், எஸ்.எம்.எஸ் பற்றியும் தெரிந்து இருக்கணுமோ, அதே போல ஃபேஸ் பற்றியும் தெரிஞ்சு இருக்கணும். ஏன்னா? ஒரு தகவலை உடனடியா, உலகின் பல்வேறு திசைகளில் இருக்கும் பலருக்கும், ஒரே ஒரு கிளிக்கில் தெரிவிக்க ஃபேஸ்புக்கால் முடியும். ஊட்டியில நீங்க எடுத்த ஃபோட்டோ, மொபைல் போன் வழியா, சென்னையில இருக்கற உங்க கம்ப்யூட்டருக்கு வந்து, அங்கே இருந்து ஃபேஸ்புக் வழியா, உலகம் பூரா பரவி, ஆஸ்திரேலியாவில இருக்கிற உங்க அத்தை பார்த்துட்டு, விசாரிக்கறாங்கன்னா சாதாரண விஷயமா? இது மாதிரி ஒரு கிளிக்குல ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கவிதைகள் என அனைத்தையும் ஷேர் பண்ணிக்க முடியும். இவ்வளவு நல்ல நவீன விஷயத்தை உன் குழந்தைகள் தெரிந்து கொள்ளாமல் இருந்தால்தான் நீ கண்டிக்க வேண்டும். எனவே இனி அவர்களை திட்டாதே என்றேன்.

அவர் :
நல்லதுன்னு ஒண்ணு இருந்தா, நிச்சயம் கெட்டதுன்னு ஒண்ணு இருக்கும். ஃபேஸ்புககுல பசங்கள பாதிக்கிற விஷயங்கள் ஒண்ணு கூடவா கிடையாது?
பேசிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய மகனின் பள்ளித் தோழன் கையில் ரப்பர் பந்துடன் வந்துவிட்டான். இருவரும் உடனே 
விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் -
நீ சொன்னது போலவே இதில் நெகட்டிவ் அம்சங்கள் பல இருக்கு. ஆபாச படங்கள், ஆபாச வீடியோக்கள், அருவருக்கத் தக்க பேச்சுகள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் உரையாடல்கள், ஒருவரை பலர் சேர்ந்து கேலி செய்தல், பெண்களை இழித்தல், தவறான வழிகாட்டும் இரகசிய சிநேகிதங்கள் என எல்லாமும் ஃபேஸ்புக்கில் உண்டு. எப்படி நம் வீட்டுக் குழந்தைகள் இயல்பாக ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருக்கிறார்களோ, அதே போல, இவர்களை குறி வைத்து மனதைக் கெடுக்க முயற்சிப்பவர்களும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வெளி உலகம் போலவே தான் இணைய உலககும் இயங்குகிறது. கெட்டவர்களும், தீயவைகளும் இங்கேயும் உண்டு.

அவர் -
நீ சொல்வதைக் கேட்டால் பயமாக இருக்கிறது. இதை குழந்தைகளிடம் சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டேன்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது எப்படி?

நான் -
இந்தக் கேள்வியை நீ கேட்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். கட்டுப்படுத்துவது என்பது சரியான வார்த்தை. குழந்தைகளிடம் சமூக வலைத் தளங்களை முழுக்க மறைக்க முடியாது. அதில் மெம்பர் ஆகக் கூடாது என்று சொல்லக் கூடாது. சொல்ல சொல்லத்தான் அவர்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல், உடன் படிப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களே கூட மாணவர்களிடம் ஃபேஸ்புக் வழியாக பழகுகிறார்கள். எனவே அவர்களை தவிர்க்கச் சொல்லவே முடியாது.

அவர்-
ஃபேஸ்புக்கை முழுக்க தவிர்க்க முடியாது என்பது புரிந்து விட்டது. ஆனால் வேறு எப்படித்தான் அவர்களை கட்டுப்படுத்துவது?

நான் -
அவர்களை கட்டுப்படுத்துவதற்கு முன், பெற்றோர்களாகிய நாம் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் மற்றும் மைஸ்பேஸில் friend என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனக்கு ஃபேஸ்புக்கில் ஆயிரம் நண்பர்களுக்கு மேல் உள்ளனர்.

அவர் - 
ஃபேஸ்புக்கில் உங்களுக்கு ஆயிரம் நண்பர்களுக்கு மேல் இருக்காங்களா?

நான் -
ஆமாம், சிலர் 5000ம் நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் நிஜவாழ்க்கை நண்பர்களுக்கும், ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நிஜவாழ்க்கையில் Friend என்பவர் யார்? நமது நம்பிக்கைக்கு உரிய, நமது சுக துக்கங்களில் பங்கு கொள்கிற, நமது குடும்பத்தினருக்கும் தெரிந்த, நம்முடன் நீண்ட நாள் பழகியவர்தான் நண்பர். ஆனால் ஃபேஸ்புக்கில் Add Friend என ஒரே ஒரு க்ளிக்கில் ஒரு நண்பர் கிடைத்துவிடுவார். ஒரு நிமிடத்திற்கு ஒரு நண்பர் கிடைத்துக் கொண்டே இருப்பார்.

அவர் - 
ஃபேஸ்புக்கில் கிடைக்கிற நண்பர்கள் உண்மையானவர்களா?

நான் -
அது சந்தேகம்தான். ஒரு கிளிக்கில் எப்படி ஒரு உண்மையான நண்பர் கிடைப்பார். பழகப்பழகத்தான் தெரியும். சிலர் வேறு ஒருவரின் ஃபோட்டோவை தன் முகமாக போட்டிருப்பார்கள். சிலர் தங்கள் வயதை குறைத்துப் போடுவார்கள். சிலர் தான் பெரிய வியாபார நிறுவனத்தின் அதிபதி என பொய் சொல்வார்கள். சில ஆண்கள் பெண்கள் படத்தைப் போட்டு மற்றவர்களை ஈர்த்து பணம் கறப்பார்கள்.
அவர் -
என்ன சொல்ற நீ? நீ சொல்றதைக் கேட்டால் இன்றைக்கே, என் குழந்தைகளை முழுக்க முழுக்க ஃபேஸ்புக் பக்கம் போகவிடாமல் செய்துவிடத் தோன்றுகிறது. ஆனால் நீ என்னடாவென்றால், இருக்கட்டும் பரவாயில்லை என்கிறாய்?

நான் -
இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன். நம் குழந்தைகள் ஃபேஸ்புக்கில் இருக்கட்டும். ஆனால் தான் எப்படிப்பட்ட சூழலில் இயங்குகிறோம் என்பதைத் தெரிந்து இருக்கட்டும். அதை நாம் தான் சொல்லித் தரவேண்டும். நிஜ வாழ்க்கை Friendக்கும் ஃபேஸ்புக் Friendக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களை தடுப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அவர் -
நான் இப்ப தடுக்கறதே இல்லை. தடுத்தா என் கூட சண்டை போடறாங்க. அதனால வேறவழியில்லாம விட்டுடறேன்.

நான் -
குழந்தைகள் மட்டுமல்ல, ஆண்-பெண் பேதமில்லாமல் பெரியவர்களும் தற்போது இதற்கு அடிமை ஆகிவிட்டார்கள். மொபைல் போன், இமெயில் போல, ஃபேஸ்புக் உலவலும் இப்போது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. கடந்த மாத ஆராய்ச்சியின்படி ஒவ்வொருவரும் தினசரி 20 நிமிடம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் நேரம் செலவழிக்கிறார்களாம். அப்படி இருக்கும்போது, நம் குழந்தைகளிடம் இருந்து இதை மூடி வைக்க முடியாது. ஆனால் அவர்களை கண்காணிக்கலாம்.

(எப்படிக் கண்காணிப்பது? அடுத்த பகுதி)

வணக்கம்,

உங்களையெல்லாம் சந்திச்சு ரொம்ப நாளாச்சு. C.B.S.C பாடத்திட்டத்தில்
இப்பொழுது பல மாறுதல்கள். பாடத்தை மனப்பாடம் செய்து
பரிட்சை எழுதி மார்க் வாங்கிய காலமெல்லாம் போயிடிச்சு.

இப்போ சப்ஜெக்டுகளுடன் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸுக்கும்
மதிப்பெண் கொடுக்கப்படுது. பாட்டு, யோகா, படம் வரைதல்
என எத்தனையோ இருக்கு.

ரேங்கார்டில் உங்கள் குழந்தையின் நடவடிக்கைகள், ப்ராஜக்ட்களை
முறையாக சொன்ன தேதியில் சமர்ப்பித்தல், என பல அம்சங்களும்
சேர்க்கப்படுது. CONTINUOUS ASSESSMENT மூலம் பாடங்கள் மதிப்பீடு
செய்யப்படுவது போல மேற்சொன்னவைகளையும் பார்க்கிறார்கள்.
ஆகவே குழந்தையின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தால்
உட்கார வைத்து பேசுங்கள். பள்ளியில் அன்றாடம் என்ன நடக்கிறது?
என கேட்டுத் தெரிந்து ப்ராஜக்ட் சரியாக சமர்ப்பிக்கிறார்களா? என
பார்க்க வேண்டியதும் நம் கடமை.



இந்த ப்ராஜக்ட் பத்தி பேசும் பொழுது அது என்னவோ பெற்றவர்களுக்கு
தரப்படுவது போல நினைக்கும் சூழல் ஏற்படுகிறது. நாம் செய்து
கொடுப்பதற்கு பதில், அருகிலிருந்து செய்ய உதவ வேண்டும்.
பல ப்ராஜக்டுகளுக்குத் தேவையான படங்கள் கடைகளில் கிடைப்பதில்லை.
ஆகவே, வீட்டில் கணிணி,இண்டர்நெட் கனெக்‌ஷன்,
பிரிண்டர் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டது. தனக்குத் தேவையான
விவரங்களை அவர்கள் தேடி கண்டுபிடித்து, வேர்ட் டாக்குமெண்டில்
போட்டு எப்படி பிரிண்ட் எடுப்பது என்பதை சொல்லிக்கொடுப்பது
அவசியம். நாமும் கவனமாக அவர்களை கண்காணிப்பது அவசியம்.



ப்ராஜக்டுக்கு தேவையான சில உதவிப் பொருட்களை முன்னக்கூடியே
வாங்கி வைத்துக்கொள்தல் நல்லது. அப்பொழுதென்று ஓட முடியாது.
ஒரு மினி ஷ்டேஷனரி ஷாப் போல சார்ட், க்ளூ, வகை வகையாக
வெட்டும் கத்திரிக்கோல், செலோ டேப், கலர் செலோடேப்கள்,
ஹேண்ட் மேட் பேப்பர், ஸ்ட்ரா, ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ்( ஷ்டேஷனரி
ஷாப்பில் கிடைக்கும்), சாடின் ரிப்பன், சின்னசின்ன ஸ்டிக்கர்ஸ்,
நெற்றிக்கு வைக்கும் பொட்டுக்கள், கலர் நூற்கண்டு, ஊசி செட்,
என ஏற்பாடு செய்து வைத்துக்கொள்வதால் பிள்ளைகள் ப்ராஜக்டை
நேரத்தில் சமர்ப்பிக்க நாமும் உதவ முடியும். கடைசி நேரத்தில்
சொல்கிறாயே என பிள்ளைகளிடம் கோவப்படாமல் இருக்கவும்,
கடைசி நேரத்தில் கடைக்கு ஓடுவதை தவிர்க்கவும் இந்த முன்னேற்பாடுகள்
அவசியமாக இருக்கும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். அதே போல வெறும்
மனனம் செய்து மதிப்பெண் வாங்குவது வாழ்க்கைக்கு போதாது
என்பதால்தான் இந்த மாற்றம் கல்வித்துறையில் வந்திருக்கு. நல்லதொரு
மாற்றம் தான். மாற்றத்தை நாமும் உணர்ந்து குழந்தைகளுக்கு
உதவி செய்வோம்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்