பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

இக்கட்டுரை ஈரோடு நண்டு நொரண்டு என்ற பதிவர் எழுதியது.

ஒரு சில எழுத்துப் பிழைகள் மட்டும் மாற்றி இருக்கிறேன். கொஞ்சம் முரணாக இருக்கும் வார்த்தைகளை சற்றே மாற்றி அமைத்திருக்கிறேன்.

குழந்தைகளுக்கு விடுமுறை. ஒரு மாதம் பெரிய தொந்தரவு. லீவே விடக்கூடாது. இப்படித்தான் அனேக பெற்றோர்கள் நினைக்கின்றோம்.

குழந்தைகளுக்கு விடுமுறைவிடுவது நமக்கெள்ளாம் பெரிய அவஸ்தையாகவே படுகிறது. ஆனால், குழந்தைகளுக்கு அது தான் ஜாலி. பள்ளிக்கூடம் வீடு போன்று இருப்பதில்லை என்றே உண்மையில் அனைத்துக் குழந்தைகளும் நினைக்கின்றனர்.

குழந்தைகளை நன்றாக ஆராய்ந்ததில் பிறந்தது முதல் 2 வருடங்கள் குழந்தைகள் தங்களின் பார்வையையும், புரிதலையும் செழுமைப்படுத்திக்கொள்கின்றன (இக்காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் பங்கு மற்றும் செயல் மிகவும் முக்கியமாக அதன்அறிவுத்தளத்தினை ஆக்கிரமிக்கிறது). 2-லிருந்து 5 வயது வரை குழந்தைகள் மேலும் பார்வையையும் ,புரிதலையும் செரிவுபடுத்துகின்றன, சூழலுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அதன் செயல்பாடு வளர்கிறது.

குழந்தைகள் 5 வயதிற்குப்பின், 5 வயதிற்குள் தன்னுள் ஏற்றுக்கொண்ட விசயத்தில் பயணித்து 12வது வயதில் அதனை முன்னிருத்தி கால் வைத்து, தொடர்ந்து, பிறகு 16வது வயதினின்று அதன்வழி சமூகத்திற்குள் நுழைகின்றனர். அதுவரை அவர்கள் கட்டற்ற சுதந்திரம் இருப்பவர்களாகவே உணர்கின்றனர்.

இதுவே, குழந்தைகள் தங்களின் வாழ்க்கை பயணத்தினை ஆரம்பிக்கும் பாதையாக உள்ளது.

எனவே, இக்காலகட்டத்தில் எப்போதும் குழந்தைகளிடம் பயம் காட்டாதீர்கள். அவர்கள் அச்சப்பட்ட மனேநிலையில் வளர ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளிடம் வீரம் பற்றியும் பேசாதீர்கள், உன்னால் முடியும் அல்லது அவர்களால் முடியாது என்ற விசயங்களில் பொய் கூறாதீர்கள். அது அவர்களிடத்தில் தாழ்வு எண்ணத்தை ஏற்படுத்திவிடும். குழந்தைகளிடம் உங்களின் சாகசங்களையோ குறைகளையோ கூறாதீர்கள். அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். குடும்ப விவகாரங்களையோ, கஷ்டநஷ்டங்களையோ அவர்களுக்கு தெரியுமாறு வைத்துக் கொள்ளாதீர்கள். நமது கஷ்டம் குழந்தைகள் உணர்ந்தால் தான் நம்போல் ஆகாமல் சிறப்பானவராக வருவர் என்பது தப்பெண்ணம்.

குழந்தைகளுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணாதீர்கள். அது அவர்களை பெரியவர்களுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணி இது பெரியவங்க சமாச்சாரம் என்ற அச்சத்துடன் வளரஆரம்பித்து விடுவார்கள். அவர்களை எதார்த்தமாக வளர விடுங்கள். அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலையே கூறுங்கள்.தெரியவில்லையெனில் நூலகத்திற்கு சென்று
தெரிந்துகொள்ளலாம் என்று கூறுங்கள். அரைகுறைபதிலை கூறாதீர்கள்.உங்களின் எதுவையும் (கருத்து, கொள்கை, இப்படி..) அவர்களுக்குப் புகுத்தாதீர்.

அவர்களின் கண்களில்படும் எல்லாம் அவர்களுக்கு புதிர்தான். விடைகளை தருவதுதான் நாம் செய்யவேண்டிய வேலை. கற்றுக்கொள்வது அவர்களின் இயல்பான செயல்.
கற்றுக்கொள்ளவேண்டும் என நாம் பரிதவிக்கக்கூடாது.

ஒன்றைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் பிறக்கும் பொழுதே பலவிசயங்கள் அவர்களுக்கு இயல்பாகவும் இயற்கையாகவும் ஆணையிடப்பட்டிருக்கின்றது.

அது "சுவாசி உடல் இயங்கும் ". "உண் உடல் வளரும் ". "வளர உணவு தேவை ".
இதுபோன்று...பல...

இதில் "வளர உணவு தேவை" என்பதுதான் தற்பொழுது நமது குழந்தைகளின் குறும்புகளுக்கும், சேட்டைகளுக்கும் காரணம்.மனிதன் ஆரம்பத்தில் உணவிற்காக அலைந்து, திரிந்து, ஓடி, கண்டுபிடித்து ,போராடி பொற்று, பின் உண்டு ,மகிழ்ந்து, அயர்ந்தான்.காலப்போக்கில் உணவினை சேமித்து வைத்து உண்பதால்-அலைந்து ,திரிந்து ,ஓடி, கண்டுபிடித்து,போராடி பொற்று, பின் உண்ணாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடுதான் குழந்தைகள் செய்யும் அனைத்தும்.

அதனால் குழந்தைகள் குறும்பு செய்கின்றன என கோபம் கொள்ளாமல் அவர்களை அப்படியே அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். அப்படிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை தீர்க்கப்பட்டு அவர்களை அடுத்த நிலைக்கு தானே உந்திச்செல்லும். இல்லாதுபோனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்னியப்பட்டேபோவீர்கள்.

குறும்பு செய்கின்றது என்பதற்காக டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ், நீச்சல் என உங்களிடமிருந்து அவர்களை பிரித்தீர்களெனில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடினால் உங்களிடம் அந்நியமாக நடந்து கொள்வார்கள்.அதனால் பயனேதும் இல்லை.

ஆதலால் , குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருங்கள். அவர்களின் வாழ்வை அவர்களே முடிவு செய்யட்டும். நீங்கள் மீறினால், அவர்களும் மீறுவார்கள். ஜாக்கிரதை. எனவே குழந்தைகளை பாரமாக நினைக்காதீர்கள். அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள். அவர்களை உற்று கவனியுங்கள். அதிலுள்ள அறிவுப்பசியை கண்டுபிடியுங்கள். அதற்கு உதவுங்கள். சுதந்திரமே அறிவு " -என முதலில் உணருங்கள்.

நம்மில் அதிகப்பேர் இன்னும் குழந்தைகள் தான். அப்படியிருக்க நம் குழந்தைகளை ஏன் பெரியவர்களாக்க எண்ணுகின்றீர்கள்?



.

ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.
கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.
அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.
அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?
நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?
எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்
கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பது
போல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா யாருமே
சொல்லவில்லை.

1 வருடம் முன்பு ஆஷிஷ் ரொம்ப மெலிஞ்சு போய்
இருந்தான். சில சமயம் தலை சுத்தி மயக்கம்
போட்டு விழுவான். வகை வகையா சமைச்சு
போடுறேன். சத்தான காய்கறிகள், பழங்கள்னு
பாத்து பாத்து செய்யறோமே! என்னாச்சோன்னு
பயந்து டாக்டர்கிட்ட கூட்டிகிட்டுப்போனா
உடம்பு சத்துல சத்து குறையுது, உயரம் அதிகம்.
அதுக்குத் தகுந்த எடை இல்லை. இதனால
லோ பீபீ வந்து மயக்கம் அப்படின்னு
சொன்னார். இதென்ன கொடுமைடா சாமின்னு
பால், சீஸ், தயிர், பழங்கள்னு இன்னும் அளவுக்
கூட்டிக்கொடுத்தேன். 42 கிலோவிலிருந்து 48 கிலோவுக்கு
கொண்டு வந்தேன். மயக்கம் வருவது குறைஞ்சு,
கொஞ்சம் ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சான்.

எங்க வீட்டுல எல்லோரும் நல்ல உயரம். மாமனார்
6 அடிக்குமேலே. அயித்தானும் நல்ல உயரம்.
என் தம்பியும் அயித்தான் அளவுக்கு உயரம் தான்.
அதனால் வளர்ச்சி நல்லா இருக்கு. ஆனா அதுக்கு
ஏத்த உடல் பருமன் ஆஷிஷுக்கு இல்ல.(பதின்மவயதில்
எடைக்கும் உயரத்துக்கும் இருக்கும் அளவு பெரியவர்களுக்கு
வேறுபடும்) வெறும் சாப்பாடு மட்டும் போதாது.
ஆனா இப்ப ஜிம் அனுப்பும் வயசும் இல்ல.
ஏதாவது செய்யணுமே. மண்டைல குடைச்சல்.

உயரம் அதிகமா இருக்கும் குழந்தைகளைப் பாத்தீங்கன்னா
ரொம்ப ஒல்லியா கூன் போட்டு தெரிவாங்க. அந்த
உயரத்துக்கு நல்லா ஆஜானுபாகுவா தோள்கள்
வலிமையா வந்தா நல்ல உடல்வாகு அமையும்.
பாக்கவும் நல்லா இருக்கும். முகம் கூட சிறுத்துப்போய்
கொஞ்சம் ஒரு மாதிரியா இருப்பாங்க. இது
உயரம் அதிகமான பிள்ளைகளுக்கு.


நார்மல் உயரம் இருக்கும் சில பிள்ளைகள் அதீத
எடையுடன் இருப்பாங்க. இதுவும் கஷ்டம்.

போன மாசம ஆஷிஷை என்னோட டயட்டீஷியன்
கிட்ட கூட்டிகிட்டுப்போனேன். அவங்க கிட்ட
என்னோட டென்ஷனைச் சொன்னேன். இவ்வளவு
தூரம் யோசிச்சதுக்கு பாராட்டினாங்க. ஒரு தாயா
என் மகனின் உடல்வளர்ச்சியும் எனக்கு முக்கியம்.
”ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே
வளர்ச்சி!!”

நல்ல டயட் ப்ளான் போட்டுக் கொடுத்திருக்காங்க.
டயட்டுன்னவுடனே பலரும் கிண்டல் செஞ்சாங்க.
வயசுப்பிள்ளைக்கு எல்லாம் கொடுங்க டயட்டுன்னு
வயத்தக் காயப்போடாதீங்கன்னு அட்வைஸ் வேற.
டயட்டுன்னாலே சாப்பாடுதான்னு புரியாதவங்க கிட்ட
பேசுறது வேஸ்ட். இப்ப மகனுக்கு கொடுப்பது
BALANCED DIET. நாம் உண்ணும் உணவும் இப்படித்தான்
இருக்கணும்.


ஆஷிஷ் இன்னும் உயரம் வளருவான். அதுக்கேத்த
நல்ல உடலமைப்பை இப்ப உருவாக்கினாத்தான் உண்டு.
இந்த சமையத்தில் உடலை கொஞ்சம் வளைக்க முடியும்,
இப்ப முடியாட்டி எப்பவுமே முடியாது. பின்னாளில்
உடல் பருமன் ஏறும். அப்ப அருமையான உடல்வாகு
கொண்டுவர முடியாதுன்னு சொன்னார் டயட்டீஷியன்.

இந்த வயதில் பிள்ளைகளுக்கு சத்துச் செலவு அதிகம்.
எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அதனால கார்போஹைடரேட்
அளவைக் கொஞ்சமா குறைச்சு மத்த அயிட்டங்களையும்
கொடுக்கணும். 3 வேளை உணவு பத்தாது. அதை அப்படியே
ஸ்பிலிட் செஞ்சு 9 வேளையா கொடுக்கணும்.

ஸ்கூல் போனபோது ஒரு டயட் ப்ளான் இருந்தது.
இப்ப வீட்டில் இருக்கும் போது வேறு ப்ளான்.

பால், பழங்கள்,சீஸ், ப்ரட்,ஃப்ரெஷ் ஜூஸ், மோர், காய்கறிகள்,
பருப்பு,இட்லி/தோசை/உப்புமா,அரிசி/சப்பாத்தி,
சோயா மில்க், வால்நட்,பாதாம் எல்லாம் கொடுக்கணும்.
அசைவம் சாப்பிடறவங்க
முட்டை (அதிக எடை இருப்பவங்க மஞ்சள்கரு
இல்லாம சாப்பிடணும்), இறைச்சி, மீன் எல்லாம்
கொடுக்கலாம்.

இரவு படுக்க போகும் முன் ராகி மாவில் கஞ்சி செய்து
அதில் வெல்லம் பால் சேர்த்து கொடுக்கலாம்.
இதனால ராத்திரியில் நல்லா தூங்குவாங்க.
உடலுக்கும் பலம். குளிர்ச்சியும் கூட.

இரும்புச் சத்து இப்ப ரொம்ப முக்கியம். பேரிச்சம்பழம்
கொடுக்கலாம். பேரிச்சம்பழம் விரும்பாதவங்களுக்கு
அந்த சிரப்பை பாலில் கலந்து கொடுக்கலாம். பீன்ஸ்,
கீரைவகைகள், வால்நட், பாதாம் போன்றவைகள்
நல்லா கொடுக்கணும்.

இரும்புச் சத்தும், கால்சிய சத்தும் இப்ப அதி முக்கியமான
தேவை பிள்ளைகளுக்கு. பெண்குழந்தைகளுக்கு 200mg,
ஆண்குழந்தைகளுக்கு 300 mg அளவு நாளொன்றுக்குத்
தேவை. அதனால பால், தயிர், சீஸ் கொஞ்சம் அதிகமாக
கொடுக்க வேண்டும்.

இதோடு உடற்பயிற்சி முக்கியம். 20 புஷப்ஸ், 20 நிமிடம்
சைக்கிளிங், டான்ஸ், விளையாட்டுக்கள்னு
வைக்கணும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
30 நிமிடங்கள் இந்த மாதிரி விஷயங்களுக்கு
ஒதுக்கி அவங்களை உடற்பயிற்சி செய்ய வைக்கணும்.
இல்லாவிட்டால் உண்ணும் உணவு கொழுப்பாகி
அவஸ்தையைக் கொடுக்கும்.முறையான உடற்பயிற்சி
பதின்மவய்தில் செய்ய துவங்குவதால பின்னாளில்
heart disease, certain cancers, diabetes,
hypertension, bowel problems மற்றும் osteoporosis
போன்ற நோய்களில் இருந்து காக்கப்படுவாங்க.

ஸ்லிம்மா இருக்கணும், சிக்ஸ் பேக் வைக்கணும்னு
சாப்பாட்டைத் தவிர்க்க பாப்பாங்க பசங்க. அதனால
கவனம் தேவை. பச்சைக்குழந்தைக்கு சாப்பாடு
எப்படி பாத்து பாத்து கொடுப்போமோ அப்படி
பதின்மவயதுக்குழந்தைகளுக்கு கொடுக்கணும்.
இதில் ஆண்குழந்தை, பெண்குழ்ந்தைன்னு
பாகுபாடே இல்லை.

இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உணவு
கொடுப்பதால வயறும் காய்வதில்லை. உடலுக்குத்
தேவையான எல்லா சத்துக்களும் கிடைச்சிடுது.
அப்ப உடல் ஆரோக்கியமா இருக்கும்.
உடல் ஆரோக்கியமா இருந்தா செய்யும் வேலையும்
பளிச், பளிச் தானே!

இந்த வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்,
எமோஷன் அப்சட் குழந்தைகளின் உணவுபழக்கத்தில்
பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பாட்டின் அளவு
குறைஞ்சிடும். இதனால் ரொம்ப பாதிப்புக்கள் வரும்.
உடல் பருமனாகிடும்னு பல பெண்குழ்ந்தைகள்
ரொம்ப கொஞ்சமா சாப்பிடுவாங்க. பழங்கள், ஜுஸ்,
தயிர், மோர், பால், சீஸ் எல்லாத்துக்கு நோ
சொல்லிடுவாங்க. இந்த மாதிரி பிள்ளைகளை
ரொம்பவே கவனிச்சு சாப்பாடு கொடுக்கணும்.
இல்லாட்டி அவர்களின் மாதவிலக்கின் போது
பல பிரச்சனைகள் வருமாம்.

முறையான சாப்பாடு, போதுமான உடற்பயிற்சி
கொடுத்தா ஸ்ட்ரெஸ் ஓடி போயிடும். அதோட
நாம கொடுக்கும் அன்பும், ஆதரவும் இருக்கறப்போ
பிள்ளையை ஏதும் அண்ட முடியுமா என்ன??

குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜ் வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம். பலர் பள்ளி போகும் பருவம்
வரை பாத்து பாத்து செஞ்சிட்டு அப்புறம் விட்டுவாங்க.
பதின்மவயதின் மனவளர்ச்சியும், உடல்வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம்.

முடிஞ்சா உங்க குழந்தையையும் நல்லதொரு
டயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டுப்போய் பேசுங்க.
அவங்க கொடுக்கும் உணவுமுறை (நாமும் கொஞ்சம்
அவங்களுக்காக ஆரோக்கியமான உணவு எடுத்துக்கலாமே,
நாமதானே அவங்களுக்கு ரோல் மாடல்) பிள்ளைக்கு
கொடுக்கலாம். டயட்டீஷியன்ஸ் அடம் பிடிக்கும்
குழந்தைகளுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் செஞ்சு
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு கொண்டு வருவாங்க.
(ராகி கஞ்சிக்கு நோ சொன்ன ஆஷிஷை டயடீசீயனின்
கவுன்சிலிங் தான் எஸ் சொல்ல வெச்சுச்சு)இல்ல
மேலே சொல்லியிருக்கும் உணவுகளை சரியா
கொடுக்கலாம்.


இப்ப ஆஷிஷிடம் நல்ல முன்னேற்றம். இப்பவே
என் உயரம் வந்தாச்சு.(5.4) அதுல அவருக்கு ரொம்ப
சந்தோஷம். இனி அப்பா உயரத்தை எட்ட டார்கெட்
வெச்சிருக்காரு. ஆஷிஷோட கால் சைஸும்,
அயித்தானின் கால் சைஸும் சமம். அப்பாவோட
ஷூஸ் எனக்குத்தானு டெர்ரர் மெசெஜ் கொடுக்கறாரு.

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு
கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது
நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா
இருக்கும்.

இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்
அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு
கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது
நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா
இருக்கும்.

இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்
அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.


இந்த வெப்பேஜில் பார்த்தால் நிறைய்ய ஐடியாஸ்
கிடைக்கும்.

தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை
அழித்திடுவோம்னு முண்டாசு கவிஞர் பாடிவெச்சதிலேயே
உணவு எவ்வளவு முக்கியம்னு தெரியுது. அதிலயும்
நாம் சாப்பிடும் உணவு சத்தான உணவா இருப்பது
ரொம்ப முக்கியம்.

குழந்தை பிறந்ததும் முதல் உணவு அன்னையின்
அமுதான தாய்ப்பால்தான். அதில் கிடைக்காத
சத்துக்களே இல்லை. அதன் பிறகு குழந்தைக்கு
திட உணவு கொடுக்கும்போது கூட சத்தான
உணவா கொடுக்கணும். இல்லாட்டி உடல்பருமன்,
அல்லது குறைவான எடைன்னு குழந்தை அவதிப்படும்.

பிறந்த குழந்தையை வளர்ப்பதைவிட பள்ளிப்போகும் வயது
குழந்தையை வளப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனா
உள்ளதிலேயே ரொம்ப கஷ்டமான ஸ்டேஜ்னு சொன்னா
அது இந்த பதின்மவயதுதான்.

சின்னக்குழந்தையை மிரட்டி, திட்டி, கொஞ்சின்னு
எப்பாடுபட்டாவது சாப்பிடவெச்சிடலாம். வாயில
ஊட்டி ஏதோ ஒரு வகையா சாப்பாட்டை உள்ளேத்
தள்ளிடலாம். ஆனா இந்த பதின்மவயதுக்குழந்தையை
இடுப்பில வெச்சு ஊட்டவா முடியும்?

ஒரு பெண் பூப்பெய்தும் பருவத்துக்கு வரப்போகிறாள்னு
அவளோட உடல்வளர்ச்சி கட்டியம் கூற ஆரம்பிச்சதும்
வீட்டுல ஆரம்பிச்சிடுவாங்க. சத்தான உணவு கொடுப்பாங்க.
பூப்பெய்தியதும் பச்சை முட்டை, நல்லெண்ணெய்,
உளுந்தங்களி, அது இதுன்னு நல்லா கவனிப்பாங்க.
நெய், பால், இடுப்பை பலமாக்க திண்பண்டங்கள்னு
ஓவ்வொரு ஊரிலும் ஒரு பழக்கம் இருக்கும்.
எப்படியோ பொண்ணை சரியா கவனிச்சிடறாங்கன்னு
சொல்வேன்.

ஆனா இந்த பதின்மவயது ஆண்குழந்தைகள்தான்
ரொம்ப பாவம். தட்டு நிறைய்ய சோறு வெச்சா
சரி. பத்தோ பதினொண்ணோ தோசைன்னு ஊத்தி
போட்டா சரின்னு இருப்பாங்க சிலர். இதனால
அந்த வயசுபசங்க சரியான வளர்ச்சி இலலாமா
ஒண்ணா ரொம்ப குண்டா இல்லாட்டி ஒல்லியா
இருப்பாங்க. முறையான கவனிப்பு இல்லாததுதான்
காரணம். எங்க ஊர் பக்கம் ஒரு வாக்கியம் சொல்லி
கேள்விப்பட்டிருக்கேன். “குறத்தி பிள்ளைபெற
குறவன் மருந்து சாப்பிட்டானாம்” என்பதுதான் அது.

சத்தான உணவு குறவனுக்கு கிடைக்காட்டி பிரச்சனைதானே!!!
யாருக்காவது பதின்மவயதுக் குழந்தைக்கு என்ன
கொடுக்கணும்? எப்படிக்கொடுக்கணும்னு தெரியுமா?
காலங்காலமா சமைஞ்ச பொண்ணு, சமைய போகும்
பொண்ணுன்னு எல்லாம்பொண்ணையே டார்கட் கட்டி
ஊட்டச்சத்தை கொடுத்தாங்க.

அதுக்காக நாம அப்புடியே விட்டுடலாமா?
எப்படி உணவு கொடுக்கணும்? எப்பப்போ கொடுக்கணும்?
இதைப்பத்தி பேசுவோமா??

தெரிஞ்சவங்க உங்க கருத்தையும் சொல்லுங்க.
பலருக்கும் உதவப்போகுது இந்தப் பதிவு.


- கு. செந்தமிழ்ச் செல்வன்
“என் குழந்தை நல்ல மார்க் எடுக்கணும். மாலையிலும் டியூசனுக்கு அனுப்பிடறோம். இல்லைன்னா விளையாடியே நேரத்தை வீணடிச்சிடுவான்”
அக்கறையுள்ள பெரும்பாலான அம்மாக்களின் அணுகுமுறை இது தான்.
“படி, படி, படி”
பள்ளியில் ஆசிரியர்களும்,
வீட்டில் பெற்றோர்களும்,
குழந்தைகளுக்கு இடும் ஒரே கட்டளை இது தான்.
குழந்தைகள் மீது பெற்றோர்களின் அன்பு அளவில்லாதது. “படி படி” என்பது அன்பின் வெளிப்பாடே. ஆனால் ஒரு குழந்தையின் உண்மையான தேவைகளை உணர்ந்து, அதனை அனுமதிப்பது எத்தனை பேர்.
தெருக்களில் குழந்தைகளின் ‘ஓ’வென சத்தம் எவ்வளவு இனிமையானது. விளையாட்டுகளுடன், வேடிக்கை காட்டும் குழந்தைகள் எவ்வளவு அழகானவர்கள். இக்காட்சிகளை எங்கே காண முடிகிறது.
இரண்டு குழந்தைகள் சந்தித்து கொண்டால் போடும் ஒப்பந்தம் விளையாட்டு தானே. பலவகை விளையாட்டுகளை அவர்கள் எங்கு, எப்படி கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியரிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் எப்போதேனும் கிடைக்கும் சலுகை நேரங்களில், அவர்களின் விளையாட்டு சாம்ராஜ்யம் தான் விரிகிறது. குழந்தைப் பருவத்தின் பிரிக்க முடியாத இயல்பு விளையாட்டு. குழந்தைகளின் உரிமை விளையாட்டு, அதனைப் பறித்திடும் நாம் குற்றவாளிகள் தானே !!
விளையாட்டு, ஒரு குழந்தைக்கு தேவையான அடிப்படை ஒன்று, உடல்களைக்க விளையாட்டு அவர்களை உற்சாகமூட்டுகிறது, சுறுசுறுப்பாக்குகிறது. உணவை பெற்றோர் கண்டிப்பின்றியே உண்ணத் தூண்டுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. ஏராளமானவற்றை கற்றுக் கொள்ள விளையாட்டு வழிவிடுகிறது. கணக்குகளை அறியவும், காரணகாரியங்களை அறியவும் பல விளையாட்டுகளில் உள்ளடக்கமாக உள்ளது. கற்பனைக்கும், ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கும் விளையாட்டு மேடை அமைக்கிறது.
நண்பர்களின் வலைபின்னலுக்கும் விளையாட்டு தானே அடிப்படையாக உள்ளது.
விளையாடுவதும், விளையாட்டை கற்பதம் இயல்பானது, இயற்கையானது. சக நண்பர்களிடமிருந்துதான் ஏராளமானவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.
இதனை உணர்ந்தே, பாரதியும் குழந்தைகளுக்கு சொல்லும் முதல் வாழ்த்தாக “ஓடி விளையாடு பாப்பா” என்று பாடினார். மாலை முழுவதும் விளையாடி வழக்கப்படுத்திக் கொள்ள பரிந்துரை செய்கிறார்.
பலவகை உள்ளரங்கு, வெளியரங்கு விளையாட்டுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கம்யூட்டர் விளையாட்டுகளும் சிந்திக்க தூண்டுபவைகளே. ஆனால், அளவை மீறும் போது அது வெறித்தனமாகிவிடுகிறது. அப்போது , அதில் சிந்தனைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.
பெற்றோர்களும் குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம்.
“அது சரி, ஆயிரக்கணக்கில் பீஸைக்கட்டி பள்ளிக்கு அனுப்புவது நாங்கள் விளையாடுவதற்கா?”
உங்களின் முணுமுணுப்பு கேட்கிறது.
குழந்தைகளோடு விளையாடுவது உங்களுக்கும் உற்சாகமளிக்கும், குழந்தைகளிடையே உங்களின் மதிப்பு உயரும். அவர்களின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் நீங்களும் இடம் பிடிக்கலாம். குழந்தைப் பருவத்தில் நீங்கள் இழந்ததை உங்களின் குழந்தைக்கள் மீட்டுத்தரட்டுமே.
இதன் அடுத்தப்பகுதி,”விளையாடாதே” எனும் போது, குழந்தைகளின் வெறுப்புக்கு ஆளாகிறோம். அவர்களை விட்டு விலகுகிறோம். அவர்களின் உரிமையினை பறித்த குற்ற உணர்வோடு நிற்கிறோம்.
“என்ன சொன்னாலும், குழந்தைகளின் வருங்காலம் என்பது அவர்களின் படிப்பு தானே, அவர்களின் மார்க்கு தானே அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கின்றது” இது பெற்றோர்களின் அர்த்தமுள்ள அங்கலாய்ப்பு.
அர்த்தமுள்ள  ஒரு கேள்வியினையும் நாம் முன்வைப்போம்.
“விளையாட்டும் படிப்பும் எதிரெதிரானதா?”
“இல்லவே இல்லை”
விளையாட்டு குழந்தைகளின் மூளைகளை இயங்க வைக்கிறது. புதியவைகளை எளிதாக உள்வாங்கவும் பதிய வைக்கவும் பக்குவப்படுத்துகிறது. விளையாட்டில் ஆர்வமானவர்கள் படிப்பிலும் ஆர்வம் செலுத்துவார்கள் என்பது தான் பல ஆய்வுகளில் தெரிகின்றது. விளையாட்டு, சமூக சிந்தனை, சக மாணவர்களுடன் உறவு இவைகளெல்லாம் இல்லாமல் படிப்பை மட்டுமே பெறும் குழந்தைகள் உள்ளீடற்ற மனிதர்களாகவே வளருகின்றார்கள்.
போதிய விளையாட்டும், தேவையான படிப்பும் குழந்தைகள் சீராக வளர வழிவகுக்கும்.
குழந்தைகளோடு விளையாடுங்கள்.
குழந்தைகளை விளையாட விடுங்கள்
அவர்கள் மார்க்குக்கு நாங்க கேரண்டி
- கு. செந்தமிழ்ச் செல்வன்

நாம சின்ன பசங்களா இருந்த காலத்துலயும் லீவு
வந்திருக்கு. எந்த சம்மர் கேம்புக்கும் போகாமலேயே
நல்லா ஆனந்தமா சிறகடிச்சு லீவைக் கொண்டாடி
இருக்கோம்.

எப்படி? ஒரு முறை அப்படியே சின்ன வயசுக்குப்
போய் ஒரு கொசுவத்தி சுத்திப்பாருங்க. ஆனந்தமா
கல்லா மண்ணா விளையாண்டது, நுங்குவண்டி,
டயர் வண்டி, கிட்டிப்புல், கோலி, பச்சைக்குதிரை,
தாயம், பரமபதம், ஆடுபுலி ஆட்டம் இப்படி
விளையாடியது எல்லாம் ஞாபகத்துக்கு வருதா??

அப்ப விளையாடினது ஞாபகம் இருக்கு. ஆனா
அதை பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்க தெரியலை.
அதாவது ஆட்டம் பேரு ஞாபக்ம் இருக்கு. விதிமுறைகள்,
எப்படி விளையாடுவது எல்லாம் ஞாபகம் இல்லை.

நம்ம மாதிரி ஆளுங்களுக்குத்தான் இந்த
வலைத்தளத்தில் அழகா அதையெல்லாம் தொகுத்து
வெச்சிருக்காங்க. TRADITIONAL GAMES
அப்படிங்கற வலைத்தளத்துல போய் பாக்கலாம்.
நான் ரசித்து விளையாடி மகிழ்ந்த பல
விளையாட்டுக்களை நம்ம பசங்களுக்கும்
சொல்லிக் கொடுத்து பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு
உயிர் கொடுக்கலாம்.

ஹேப்பி ஹாலிடேஸ் குட்டீஸ்!!!

குழந்தைகளை நர்சரியிலோ, ப்ரீஸ்கூலிலோ சேர்க்கும்
முன் குழந்தைகளை தயார் செய்வது மிக முக்கியம்.
இண்டர்வ்யூவுக்கு தயார் செய்வது பத்தி நான் சொல்லவில்லை.

பசங்களுக்கு மைண்ட்செட் செய்வதற்கு முன்னாடி
பெற்றோர்கள் இதை ஒருவாட்டி படிச்சிக்கணும்.
ரொம்ப முக்கியம்.


பள்ளியில் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகமல்
இருக்க சில அடிப்படை விஷயங்களை சொல்லிக்கொடுப்பது
நல்லது. பள்ளிக்கு அனுப்பும்முன் பெற்றோர்கள் இதை
மனதில் வைத்து பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்த
வேண்டியது அவசியம்.



1.TOILET TRAINING:

6 மாதம் முடிந்ததுமே இந்த பழக்கத்தை துவக்கிவிடலாம்.
டாய்லட் சீட்டில் உட்காரவைத்து பழக்கினால் பழகிவிடும்.
இது வீட்டில் பழக்கப்படாவிட்டால், பள்ளியில் பிரச்சனைதான்.
அதனால் கவனமாக, முக்கியமாக பழக்கவேண்டிய
விஷயம் இது.

2. தானாகவே சாப்பிடுவது:
”என் பிள்ளைக்கு நான் ஊட்டினால்தான் வயிறு நிறைஞ்சா மாதிரி!!”
அப்படின்னு சொல்லி சொல்லி ஊட்டி விட்டு பழக்கப்படுத்தியிருப்பீங்க.
ஆனா பள்ளியில யாரும் ஊட்டி விட்டுகிட்டு இருக்க மாட்டாங்க.
குழந்தை உட்கார ஆரம்பித்த உடனேயே தட்டு போட்டு
சாப்பிட வைப்பது அதுவும் தானாகவே சாப்பிட் வைப்பது
நல்லது.

3.பகிர்ந்து கொள்ளுதல்:
சில குழந்தைகள் யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள
மாட்டார்கள். இதனால் யாருடனும் எளிதில் பழகவும்
மாட்டார்கள். பகிர்ந்து கொள்ள பழக்கினால் பள்ளியில்
வாழ்க்கை இனிதாகும்.

4. சின்னச் சின்ன வேலைகள் செய்வதை பழக்கப்படுத்த
வேண்டும். தன் உடையை கழற்ற மாட்ட, ஷூ அணிய
என பழக்கப் படுத்துவது அவசியம்.

பிறருக்கு உதவும் பாங்கு, sorry, thank u சொல்லப்
பழக்குதல், மரியாதையாக நடந்து கொள்ளுதல்,
தன் சாமான்களை பாதுகாத்துக்கொள்ளுதல் எல்லாமும்
மெல்ல மெல்ல பழக்க வேண்டும்.

இவை பள்ளியில் குழந்தை நல்ல முறையில்
செட்டாக உதவும்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்