என்ன ஆச்சரியமாக இருக்கிறதா??
ஷேரிங்- பகிர்ந்துகொள்ளுதல் நல்லதாயிற்றே.
No sharing.. என்று சொல்கிறேனே என்று
பார்க்கிறீர்களா!!!
No sharing.. என்று சொல்வது படுக்கயறையை.
நாம் குழந்தை வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில்
இருந்தாலும் தனியாக படுக்க வைத்துக்கொள்ளாமல்
நம் அறையிலேயே படுக்க வைத்துக்கொள்வதுதான்
பழக்கம்.
அப்படி செய்வதனால் நாம் குழந்தைக்கு நன்மை ஏதும்
செய்துவிடவில்லை.. இதுதான் ஆச்சரியமான உண்மை.
சிறு குழந்தையாக இருக்கும்பொழுது சரி.
பால் கொடுக்க, இரவில் குழந்தை அழுமோ என்று
பயப்படும் வயதில் சரி.குழந்தை பெற்றோருடன்
தூங்குவதுதான் சிறந்தது.
வளர்ந்த குழந்தையும் உடன் படுக்க வைப்பதில்
பெற்றோர் குழந்தை இருவருக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்.
பிள்ளைகள் வளர வளர அவர்கள் படுக்கவென இடம்
தேவைப்படும். அந்தச் சூழலில் தாயோ/தந்தையோ
தனியே படுக்க வேண்டும். இது கணவன் - மனைவி
உறவில் சில சங்கடங்களை ஏற்படுத்தும்.
தவிரவும் தனியாக இருக்க குழந்தை பழக்கப்படுவதில்லை.
குழந்தையை தனியாக படுக்க வைப்பதால் நாமொன்றும்
இமாலய குற்றம் செய்துவிடவில்லை. தனித்துவமாக
இருக்க கற்றுக்கொடுக்கிறோம்.(developing a sense of
independence)
பெரியவர்கள் வீட்டில் இருந்தால் குழந்தைகள் அவர்களுடன்
படுக்க வைக்கலாம். இரண்டு தலைமுறைகளுக்கிடையே
இது ஒரு இணைப்பாகும். ஆனால் இப்போதெல்லாம்
தனிக்குடித்தனம் தான். இந்த நிலையில் எப்படி
குழந்தையை தனியாக படுக்க வைக்க பழக்குவது??!!!
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது மிகப்பெரிய
வேலை. முழுமனதுடனும், விடாமுயற்சியுடனும்தான்
இதை செய்ய வேண்டும்.
இதைப்பற்றி குழந்தையிடம் நேரே பேசி அவர்களுக்கென
ஒரு அறை ஒதுக்கப்போவதாகவும், அது அவர்களுக்கேயான
ப்ரத்யேகமானதென்றும் சொல்லி அவர்களுக்குப்பிடித்த
பெட் ஸ்ப்ரெட்கள் போட்டு தனி மெத்தை என
நிறைய்ய..... பேசவேண்டும், செய்ய வேண்டும்.
1. இது தவறல்ல என முதலில் நம் மனதுக்கு
நாமே அடிக்கடி சொல்ல வேண்டும்.
ஏனென்றால் குழந்தை பக்கத்திலேயே இருந்து பழகிவிட்டிருக்கும்.
2. குழந்தை இரவில் எழுந்து வந்து கதவு தட்டலாம்.
3. இரட்டால் பயமாக இருப்பதாகவும்,அலமாரிக்குள்ளிருந்து
பூதம் வருவது போல் தோன்றுவதாகவும் குழந்தை
சொல்லும்.
4. பெற்றோரின் அன்பை இழப்பதாக நினைக்கலாம்.
5. தனி ரூம் கொடுத்து கட்டிலில் குழந்தையை போட்டு
கதவை சாத்திவிட்டு என் குழந்தை தனியே தூங்கக் கற்றுக்கொள்ளும்
என்று நினைபப்தை விட குழந்தையின் பயம்போக்க என்னென்ன
செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.
6. இரவு விளக்கை ஒளிர விட்டு, அலமாரியின் கதவைத்
திறந்து வைப்பதால் அலமாரிக்குள் பூதம் ஒளிந்துகொள்ள
வாய்ப்பில்லை என்று சொல்ல வேண்டும்.
7. பக்தி/ஸ்லோகங்கள் புரியும் வயதென்றால் தைரியம்
வர ஸ்லோகம் சொல்ல வைக்கலாம்.
8. கார்ட்லெஸ் போன்/ மொபைல் ஒன்றை பக்கத்தில்
வைத்து தேவையென்றால் அழைக்கச் சொல்லலாம்.
குழந்தைகள் விளையாடும் வாக்கி டாக்கி கூட உபயோகிக்கலாம்.
(இரவில் தொந்திரவு செய்யாமல் தூங்கினால் காலையில்
பிள்ளைக்கு ஒரு சாக்லேட் கொடுக்கலாம்)
9. மேலை நாடுகளில் தாயின் ஆடைகொண்டு பூதம் போல்
செய்து அலமாரியில் வைத்து, தாயே பூதமாக தன்னை
காப்பதால் மற்ற பூதங்கள் வராது எனும் நம்பிக்கையை
தருவார்களாம்.
10. சில மாதங்களுக்கு பெற்றோரின் தூக்கம் தடை படும்.
குறைந்தது 6 முறை எழுப்புவார்கள். ”இந்தக் கொடுமைக்கு
பக்கத்திலேயே படுக்க வைத்துக்கொள்ளலாம்!!” என
தோன்றும். அப்படி செய்ய வைப்பதுதான் குழந்தையின்
முயற்சி. நீங்கள் இடம் கொடாமல் உங்கள் நோக்கத்தில்
குறியாக இருங்கள்.
11. ஒவ்வொரு முறை குழந்தை எழுந்து வரும் பொழுதும்
என்ன பிரச்சனை என கேட்பது அவசியம்.
12. குழந்தை தனியே படுப்பது அவரின் மெச்சூரிட்டியை
குறிப்பது என்றும் நீ பெரியவள்/ன் என்று சொல்வதனால்
கொஞ்சம் புரிதல் ஏற்படும்.
13. குழந்தையின் அறையில் கதை சொல்லி தூங்க
வைத்துவிட்டு வருதல் பலனளிக்கும்.
14. தனியாக படுப்பதை ஒரு தண்டனையாக்கக் கூடாது.
15. இரவு படுக்குமுன் பாத்ரூம் செல்ல வைக்க வேண்டும்.
16. பயப்படும் குழந்தைக்கு கையில் ஒரு பொம்மை
கொடுப்பதால் அந்த பொம்மையை பிடித்துக்கொண்டு
தூங்கப்பழகும்.
17. குழந்தை தனியே படுக்கத் துவங்கியதற்கு
பாராட்டு பத்திரம் வாசிக்க்ப்பட வேண்டும். இது
அவசியம். வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமை
பொ்ங்க சொல்வதனால் குழந்தையும் பெருமையாக
உணரும். சில நாட்களில் தனது அறையை பெருமையாக
காட்டிக்கொள்ள விரும்புவாள்.
18. இப்ப படுத்துக்கோ!! அப்புறமா எங்க ரூம்ல, எங்ககூட
படுத்துக்கலாம் போன்றவைகள் தவறான அனுகுமுறை
19. நடு இரவில் கதவை தட்டி அறைக்குள் வந்து
படுக்கையில் படுத்து தூங்கும் குழந்தையை அவனது
அறையில் விட்டு படுக்க வைகக்வேண்டும்.
(இம்ம்புட்டு கஷ்டம் படணுமான்னு யோசிக்காதீங்க)
20. கொஞ்சம் பொறுமையாக அணுகினால் உங்கள்
குழந்தை தனியே படுத்துத் தூங்கும் பழக்கத்திற்கு
ஆளாக்கலாம்.
லீவு விட்டா போதும் நான் மாமா ஊருக்கு போறேன்,
அத்தை வீட்டுக்கு போறேன், பாட்டி வீட்டுக்கு போறேன்னு
திட்டம் போட்டது ஞாபகம் இருக்கா!
தொந்தரவு விட்டா சரின்னு வீட்டு பெரியவங்களும்
கொண்டு போய் அவங்க வீட்டுல தள்ளிட்டு வந்திடுவாங்க. :))
அப்படி போனதுனாலத்தானே நமக்கு வெளியுலகம்
தெரிஞ்சுச்சு? அப்பா, அம்மாகிட்ட இருக்கற உலகம்
வேற, அடுத்தவங்க வீட்டுல நாம எப்படி அட்ஜஸ்ட்
செஞ்சுக்கணும், இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டோமே!
இப்ப நாம குழந்தைகளை அடுத்தவங்க வீட்டுக்கு
அனுப்ப ரொம்பவே யோசிக்கறோம். நாம்
பாத்துக்கற மாதிரி அவங்க பாத்துக்க மாட்டாங்க!
குழந்தை கஷ்டப்படும், அவங்களுக்கு ஏன் தொந்திரவு?
இப்படி யோசிச்சு நாம போகும்போது மட்டும் தான்
குழந்தையை கூட்டிகிட்டு போறோம், நம்மளோடையே
திரும்ப கூட்டிகிட்டு வந்திடறோம்.
(இப்ப பல உறவினர்கள் வீட்டுல அவங்க பேரக்
குழந்தை வெளிநாட்டுல இருக்க இவங்க தனியா
இருக்கறதுனாலையும் நாம அனுப்பறதில்லை)
நாம் கத்துகிட்ட மாதிரி நம்ம பிள்ளைகள் கத்துக்கறது
எப்படி?
1 அல்லது 2 குழந்தைகள்
ஓர் இடத்தில் சேர்ந்து பேசி, மகிழ்ந்து,
தூங்குவதுதான் SLEEPOVER NIGHTS.
(இது இனிமையான நினைவுகளை
பிள்ளைகளுக்குத் தரும்)
SLEEPOVER NIGHTS குழந்தைகளுக்கு பல
நல்ல விஷயங்களை கத்துக்கொடுக்கும்.
உள்ளூரில் உங்களுக்கு நெருங்கினத் தோழி
இருக்காங்களா? அவங்களுக்கும் உங்க குழந்தை
வயது பிள்ளை இருக்கா? அது போதும்.
ஒரு வார இறுதியில் அவங்க குழந்தையை
உங்க வீட்டுக்கு அனுப்பச்சொல்லுங்க.
இல்லைன்னா உங்க குழந்தையின் நண்பர்களை
அழைங்க.
அவங்களுக்கு விருப்பமான உணவு,
விளையாட்டு, டீவிடி பார்த்தல்
என செம ஜாலியாக பிள்ளைகள்
இருப்பார்கள். கொஞ்சம் ரிலாக்ஸாக
இது உதவும்.
இதே போல் அவரின் வீட்டுக்கும்
உங்கள் குழந்தையை அனுப்பலாம்.
(குழந்தை மட்டும் தாங்க போகணும்)
எப்போதும் பெற்றோருடனே ஒட்டிக்கொள்ளாமல்
பிள்ளைகள் தனித்திருக்கவும் பழகுவார்கள்.
நம்ம வீட்டுல இருக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளையே
மேய்க்க முடியவில்லை, இதில் அந்தப் பிள்ளைகளையுமா!
அப்படின்னு யோசிக்காதீங்க.
தனது நண்பர்களுடன் சேர்ந்து இருப்பதை விரும்புவார்கள்.
**************************************
டிஸ்கி: இது என்னுடைய எண்ணம் + அனுபவம்.
ஆனால் 100 % சரின்னு சொல்ல முடியாது.
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கிற
மாதிரி எதற்கும் + - இருக்கலாம்.