பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

இப்போ பொதுவா எல்லா இடங்களிலும் நாம் பார்க்கும்
விடயம் கால்குலேட்டர்களின் பயன்பாடு. சாதாரணமான
கணக்குகளுக்கு கூட கால்குலேட்டரின் உதவி நாடப்படுகிறது.

ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையில் அப்படித்தான்
இருந்ததா? இது நாம் சற்று யோசிக்க வேண்டிய விடயம்.

முன்பு பள்ளிகளில் கணித வகுப்பில் வாரத்துக்கு ஒரு நாள்
மனக்கணக்கு வகுப்பு இருக்கும்.
ஆசிரியை கணக்கை போர்டில் எழுதுவது,
அல்லது சொல்வது அதை கூர்ந்து கவனித்து கணக்கை
மனதில் செய்து விடையை மட்டும் நோட்டில் எழுதவேண்டும்.

இப்போது பள்ளியில் இந்த முறை செய்ல்பாட்டில் இருப்பதாகத்
தெரியவில்லை.

Mental calculation
பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிபீடியா.

வாய்ப்பாடு எங்கே எப்படி கேட்டாலும் சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்.
அப்போதுதான் கணக்கை சரியாக போட முடியும். வாய்ப்பாடு
பல குழந்தைகளுக்குத் தெரிவதில்லை.(இதில் என் பிள்ளைகளும்
அடக்கம். அவர்கள் முன்பு படித்த பள்ளியில் வாய்ப்பாடு கற்றுக்
கொடுக்கவில்லை. அவர்கள் வேறு முறையில் செய்தார்கள்.
இப்போது வாய்ப்பாடை அவர்களே சொல்ல ரெக்கார்ட் செய்து
கேசட் கொடுத்துவிட்டேன் அதைக் கேட்டு கேட்டு நல்ல முன்னேற்றம்)

பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கிறார்களோ இல்லையோ
வீட்டில் நாம் பழக்கலாம். மனக்கணக்கு போட ஓரிடத்தில்
உட்கார்ந்து செய்ய வேண்டுமென்பது இல்லை. நாம்
வேலை செய்துக்கொண்டே பிள்ளைகளுக்கு மனக்கணக்கு
கொடுக்கலாம்.

மனக்கணக்கு போடுவதால் பயனென்ன?

1. நம் பிள்ளைகள் கால்குலேட்டரை நம்பி வாழப்போவது இல்லை.
2. மனக்கணக்கு போடுவதனால் மூளைவேலை செய்கிறது.
3. மனக்கணக்கு BRAIN TEASER ஆக உபயோகமாகிறது.
4. புத்தகம், பேனா கொண்டு செய்யும் கணக்குகளுக்கு
இடையே இது பிள்ளைகளுக்கு புத்துணர்ச்சி தரும்.
5. பிள்ளைகள் மிகவும் விரும்புவார்கள்.

புத்தக கடைகளில் மெண்டல் சம்ஸ் என்ற பெயரில்
பல புத்தகங்கள் கிடைக்கின்றன். பிள்ளைகளின்
வயதிற்கேற்ப அத்தைகய புத்தகங்களின் உதவியோடும்
கணக்கைச் செய்ய வைக்கலாம்.

கணக்கில் பலவித பயிற்சி கிடைக்க பிள்ளைகளுக்கு
ஏதுவாகிறது.

மனக்கணக்கு பயிற்சி செய்ய நாம் ஓர் இடத்தில்
உட்கார்ந்துதான் செய்ய வேண்டுமென்பதில்லை.

துணி மடிக்கும்பொழுது, சமையற்கட்டில்
வேலை செய்துகொண்டே கூட பிள்ளைகளுக்கு
மனக்கணக்கு கொடுக்கலாம்.

(லீவுக்கு பாட்டிவீட்டுக்கு செல்லும்பொழுது
பக்கத்துவீட்டில் ஒரு வயதான மாமா வருவார்.
மாயவரத்துக்காரர். மனக்கணக்கு நான் கற்றது
அவரிடம் தான். துணி துவைத்துக்கொண்டே
மனக்கணக்குச் சொல்வார். விடை சொல்ல
வேண்டும் சொன்னால் சாயந்திரம் சின்ன பரிசு
கிடைக்கும். :)) )

நம் பிள்ளைகளுக்கு மனக்கணக்கு கற்றுக்கொடுப்போம்
புத்திசாலிகளாக்குவோம்.

******************************************
இது பேரண்ட்ஸ் கிளப்பின் 100ஆவது பதிவு.
தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் மனமார்ந்த
நன்றிகள்.

தவறு.17.
சிறு குழந்தையிடம் கத்தி, பிளேட் போன்ற அபாயகரமான பொருட்களை கொடுப்பதைத் தவிர்ப்பது

காரணம்
1. எந்த பொருட்களைக் கொடுக்காமல் தவிர்க்கிறோமோ, அந்த பொருட்களின்மீது குழந்தைக்கு ஈர்ப்பு உண்டாகும். ஆகவே நாம் இல்லாத நேரங்களில் அப்பொருளை பயன்படுத்த முயற்சித்து தீங்கை விளைவித்துக் கொள்ளலாம்.
2. எல்லா நேரங்களிலும் அந்தப் பொருளை அவர்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பது என்பது இயலாத காரியம்.
3. அபாயகரமான பொருட்களைப் பற்றிய அறிவு பெறுவதை தடுக்கிறோம்.

தீர்வு
அந்தப் பொருளை எடுத்துக்கொண்டு, அது ஏன் அபாயகரமானது? தவறாகப் பயன்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும்? என்பதை விளக்க வேண்டும். பின் அந்தப் பொருளில் என்ன என்ன பாகங்கள் உள்ளன, அவற்றில் எது ஆபத்தை விளைவிக்கக் கூடியவை, அப்பொருளின் பயன் என்ன என்பதை விளக்கலாம். நம் மேற்பார்வையில் 2 அல்லது 3 முறை பயன்படுத்த சொல்லலாம். பயன்படுத்தும்போது ‘அபாயகரமான பகுதியில் கையை வைக்காமல் நன்றாக பயன்படுத்துகிறீர்கள்’ என்று பாராட்டுவதன்மூலம் அபாயத்தை மீண்டும் நினைவு கூறலாம். அதிக குறும்பு செய்கிற குழந்தையாக இருந்தால் அதிக கவனம் தேவை.

தவறு.18.
கம்பி கேட்டில் ஏறினால் திட்டுவது.

காரணம்
நாம் இல்லாதபோது ஏறி தீங்கை ஏற்படுத்திக்கொள்வார்கள்.

தீர்வு
நாம் இருக்கும்போதே ஏற அனுமதிக்க வேண்டும். 2 அல்லது 3 முறை ஏறும்போது உடலை சமநிலைப்படுத்துவது (Balance) எப்படி எனக் கற்றுக்கொள்வார்கள். அதன்பிறகு ஆபத்து ஏற்படாது. கீழே விழுந்தால் எப்படி ஆபத்து விளையும் என்பதை விளக்கி, ஏறும்போது கவனம் தேவை ஆகவே மெதுவாக ஏறவும் என்பதை விளக்கி விட வேண்டும்.

-மரு.இரா.வே. விசயக்குமார்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்