ஒரு மருத்துவர்தான் வைத்தியம் பாக்கணும்.
ஒரு இஞ்சினியர்தான் கட்டடம் கட்டணும்.
இப்படி அந்தத் துறையில் கல்வி கற்றவர்கள்தான்
அந்தந்த வேலையைச் செய்யணும்னு இருக்கு.
ஆனா டீச்சரா யார் வேணும்னாலும் வேலை பார்க்கலாம்.
என்ன கொடுமைங்க இது????
முறையா ஆசிரியர் பயிற்சி பெற்ற்வர்கள்தான்
ஆசிரியர் வேலைப் பார்க்கணும்னு எந்த தனியார்
பள்ளியிலும் சட்டம் இருப்பதில்லை.
என்ன கொடுமைங்க இது?
B.Sc, M.Sc, B.A. M.A இதோடு B.T, B.Ed
முடிச்சிருந்தாத்தான் அவங்களுக்கு முறையான
பயிற்சி இருக்கறதா அர்த்தம்.
+2 பரிட்சைக்குபிறகு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில்
பட்டம் பெற்றிருந்தாலும் ஒத்துக்கலாம்.
மாண்டிசோரி, ப்ரிஸ்கூல் டிப்ளமோ படிச்சிருந்தாலும்
ஒத்துக்கலாம். ஆனா இந்த மாதிரி ஆசிரியப் பயிற்சி
இல்லாதவங்கதான் இப்ப ஆசிரியரா இருக்காங்க.
அதிகமான விடுமுறை, வீட்டு வேலைக்கு பங்கம்
வராத வேலை நேரம் என்பதாலேயே பல பெண்கள்
இந்த வேலைக்கு வருகிறார்கள்.
குறைந்த சம்பளத்திற்காக வருபவர்களை விடாமல்
எடுத்துக்கொள்கிறது நிர்வாகம். இவர்கள் செய்யும்
தவறுகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
"படிச்சிட்டு சும்மா உக்காந்திருக்க முடியாது
பாருங்க, அதனால் ஏதாவது ஸ்கூலில்
டீச்சர் வேலைகாவது போகலாம்னு இருக்கேன்"
என்று சொல்பவர்கள் அதிகம்.
போலி டாக்டர் கிட்ட மருத்துவம் பாத்துக்குவாங்களா?
போலி டீச்சர்னு சொல்ல மாட்டேன், முறையான
பயிற்ச்சி இல்லாதவங்க எப்படி டீச்சர் ஆகலாம்?
பல ப்ரபலமான பள்ளிகளில் கூட பாருங்கள்.
நிலமை இதுதான். பாதிக்கப்படுவது பிள்ளைகள்தான்.
அரசாங்கமும் கண்டுகொள்ளப்போவதில்லை.
பெரிய பள்ளியில் இடம் கிடைத்தால் போதும்
என்று நினைக்கும் பெற்றோர்களும் இதைப் பற்றி
கவலைப்படுவதில்லை.
. ஆசிரியர் பயிற்சி பெற்ற்வர்தான்
ஆசிரியராக ஆக்கவேண்டும் என அனைத்து பள்ளிகளும்
சட்டம் போட வைக்க வேண்டும்.
என்ன செய்யலாம்? வாங்க வந்து உங்க கருத்துக்களைச்
சொல்லுங்க.
*********************************************
ஆசிரியர் என்பவர் யார்?
ஒரு ஆசிரியர் பிள்ளைகளின் உணர்ச்சிகளுக்கு
மதிப்பளிப்பவராக, ஊக்குவிப்பவராக
பலதரப்பட்ட பயிற்சிகளை வகுப்பறையில்
அளிப்பவராக, தனக்குத் தெரிந்தது போதும்
என்று இராமல் தன்னை அப்டேட் செய்துகொள்பவராக,
இருக்கவேண்டும்.
ஒரு ஆசிரியராக அவர் கற்கவேண்டியதற்கு முடிவே
இல்லை எனலாம். LEARN WHILE YOU TEACH இதுதான்
ஆசிரியர் பயிற்சியில் கற்றுக்கொள்ளும் முக்கியமான
பாடம்.
ஆசிரியரின் பேச்சு, நடவடிக்கை, உடை,
உச்சரிப்பு, இவை பிள்ளைகளை பாதிக்கும்.
அன்றாட வகுப்பிற்கு பிறகு ஒரு ஆசிரியை
தன்னைத் தான் கேட்டுக்கொ்ள்ள வேண்டிய
கேள்விகள் இவை.
1. இன்றைய வகுப்பு வெற்றிகரமாக இருந்ததா?
2. எனது மாணவர்கள் கற்றது என்ன?
3. வகுப்பு நேரத்தை உபயோகமாக செல்வழித்தேனா?
A VALUABLE THOUGHT FOR ALL TEACHERS
One day I would like to teach
Just a few people
Many and beautiful things,
That would help them,
When they will one day
Teach a few people.
இந்தப் பதிவிற்கு தமிழ்மணத்தில் ஓட்டு போடுவீங்கன்னு
எனக்குத் தெரியும். போட்டவங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
குறள் வழிக்கதைகள்
5 years ago