பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

கர்ப்பிணியான பொண்ணுக்கு ஆசையாக அருமையாக வளைகாப்பு, சீமந்தம் செய்து பின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அதாவது பெற்ற தாயின் அரவணைப்பில். அது அனேகமாக ஏழாம் மாதமாயிருக்கும்.

தன் கைகளில் அவள் வந்தவுடன் தாய் செய்ய வேண்டியது, கருவுற்றகாலத்தில் தரும் பராமரிப்பு. ஆம் அது ஆரம்பித்துவிடும்.
முதலில் அவளுக்கு கொடுக்க வேண்டியது ‘குடினி’. இதை ஏழாம் மாத குடினி என்பார்கள்.

சுலபமாக பிரசவம் ஆக பெரிதும் உதவும் இந்தக் குடினி.
அம்மா கொண்டு வந்து, “குடி நீ...குடி நீ!” என்று நீட்டுவதால் வந்த பேரோ?
இதன் செய் முறை:
குருந்தட்டி வேர் - 50 கிராம்
சுக்கு - 25 கிராம்
சாரண வேர் - 50 கிராம்
மூன்றையும் இடித்து ஒரு ஸ்பூன் எடுத்து 1/12 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். 3/4 டம்ளராக ஆனதும் அதில் பனங்கற்கண்டு அல்லது க்ருப்பட்டி சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும்.
இதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கவும்.
அடிக்கடி பார்லி தண்ணியும் குடித்தால் மிக நல்லது.
பிரசவம் ஆகும் வரை இதைக் குடிக்கலாம்.

தொடரும்

post by நானானி

அந்தக்காலத்தில் பிள்ளை பேறு என்றால் பத்தியம், பக்குவமான சாப்பாடு
என இழந்த சக்தியை மீட்டுத் தரும் வகையில் குழந்தை பெற்ற
பெண்ணின் உடலை பாதுகாக்கும் டெக்னிக் பாட்டி வைத்தியம்.
அதனால்தான் அந்தக்காலத்தில் பெண்கள் ஸ்ட்ராங்காக இருந்தார்கள்.
பிள்ளை பிறந்த உடன் டாக்டருக்குத் தெரியாமல் தேனைக்குழைத்து
கோரசினை மருந்தை நாக்கில் தடவிவிடுபவர்களும் உண்டு.

நம் பாரம்பரிய பாட்டி வைத்தியம் சில தாய்மார்களுக்குத் தெரிவதில்லை.
நம் நானானி அவற்றை அழகாகத் தொகுத்து தன் வலைப்பூவில்
பதிவிட்டுக்கொண்டு வருகிறார். பேரண்ட்ஸ் கிளப் வாசகர்களுக்கும்
அவை பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி
பெற்று அவரது அனுமதியுடன் இங்கே அந்தத் தொகுப்பை ஒவ்வொன்றாக
பிரசூரிக்க இருக்கிறோம்.

இதோ அவர் சொல்வதை கேளுங்கள்:

பிரசவம் பாக்கப் போனேன்..பேரனைக் கையிலேந்தி வந்தேன்.
முதன் முதலாக தனியே தன்னந்தனியே மகளுக்குப் பிரசவம் பாக்க ஸான்பிரான்சிஸ்கோ கிளம்பினேன்.
உள்ளூரிலிருந்தாலாவது அண்ணிகளின் அறிவுரைகளை அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம்.

என்ன செய்யலாமென்று,"திங்..திங்.." என்று திங்கினேன். கோடவுனிலிருந்து விரைந்து வந்தது ஓர் ஐடியா!!!!
அதற்காகவே திருநெல்வேலி கிளம்பினேன். அண்ணி வீட்டிற்கு நோட்டும் பேனாவுமாகப் போய் இறங்கினேன். அவர்கள் சொல்லச் சொல்ல கவனமாக எழுதிக் கொண்டேன்.
அந்த நோட்டுப் புத்தகம் இருக்கும் தைரியத்தில் ஸான்பிரான்சிஸ்கோ போய் தெம்பாக லாண்டினேன்.

அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து நான் செய்த பிரசவகால வைத்தியத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவற்றை தொடர் பதிவாக எழுதுகிறேன். படித்துப் பயன் பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.

தொடரும் இவரது பதிவுகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே பதிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் சிந்தனையைத் தூண்டி அறிவுத்திறனைப் பெருக்கும் முறையில் வடிவமைக்கட்டுள்ளன. ஆனால், இப்போது நாம் பரவலாக கல்வி என்பது

அறிவு என்ற கோணத்தை மீறி கல்வி என்றால் மதிப்பெண்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காலத்தின் மாற்றத்தில் இதுவும் அவசியமாகிப் போய்விட்டது.

பள்ளிகளும் சரி, பெற்றோரும் சரி....மதிப்பெண்களையே முன்னிலைப்படுத்தி, முக்கியப்படுத்திப் பார்க்கப் பழகிவிட்டோம்.

அந்தந்த வகுப்புக்கு, அந்தந்தப் பாடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளா போதிய செய்திகள் மாணவர்களிடம் பல நேரங்களில் சரியாகச் சென்று சேர்வதில்லை.

ஆசிரியரின் போதனையை இங்கே நான் குறைசொல்ல வரவில்லை. மதிப்பெண்களை முன்னிலைப்படுத்தும் காரணத்தால், முக்கியமான பல கேள்விகளுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இது சில நேரங்களில், சில பகுதிகளையே தவிர்க்கும் சூழலுக்கு மாணவர்களைத் தள்ளுகிறது.

எல்லா மாணவர்களும், எல்லா நேரமும் 100/100 மதிப்பெண்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், அவரவர் வயதுக்கேற்ற, வகுப்பிக்கேற்ற அறிவைப் பெறுவது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே மாணவர்கள் குறிப்பிட்ட கேள்வி பதில்களை மட்டுமல்லாமல், பாடத்தின் மொத்த வரிகளையும் ஒரு முறையேனும் படிக்க வேண்டியது மிகவும்
அவசியம்.

CBSE பாடத்திட்டம் எப்போதும் எந்தப் பாடத்தையும் சற்றே அதிகமான விளக்கங்களுடன் வழங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது, மாற்றியைமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது. பாடத்தின் எந்தவொரு வரியிலிருந்தும் கேள்விகள் வரக்க்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பாடத்தின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடத்தையும் வரிவிடாமல் படிப்பது எளிதான செயலல்ல.

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் என் மகளுக்கு உதவுவதற்காக, சமூக அறிவியல், மற்றும் அறிவியல் பாடத்தின் ஒவ்வொரு வரியிலிருந்தும் கூடுமான வரையில் எதையும் விட்டுவிடாமல் கேள்விகள் தயாரித்து வருகிறேன். அதை வலையில் பதிந்து வைக்கத் தோன்றியது.

 புதிய வலைப்பு ஒன்றில் பதிந்துள்ளேன்.

http://malar-studyroom.blogspot.com/

ஒன்பதாம் வகுப்பு (CBSE) இரண்டாம் பருவத்திற்கான அறிவியல், சமூக அறிவியல் பாடக் கேள்விகள் இதில் இடம்பெறும்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்